சனி, 11 ஜனவரி, 2014

அவரது நடவடிக்கை



மோடியின் ஆசை நாயகி விஷயத்தில் மீது அவரது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்த முன்னாள் ..எஸ் அதிகாரி பிரதீப் சார்மாவின் புகாரை ஏற்று ‪#‎மோடி மீது எஃப்..ஆர் போட ‪#‎குஜராத் போலீசார் மறுத்துவிட்டனர்.

மன்மோகன் சிங் கொட்டாவி விடுவதற்குக்கூட வாய்திறக்கமாட்டார் என்பதை அறிந்து கொண்டு அவரை விவாதத்திற்கு அழைத்த மோடி, அவரது ஆசை நாயகி விஷயத்தில் இது வரை வாய்திறக்கவில்லை. இந்த விஷயத்தில் அவர் மன்மோகன்சிங்கை மிஞ்சிவிட்டார்.

பதவி வெறி பிடித்து அலையும் இந்த அயோக்கியரின் அயோக்கியத்தனங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன. அதில் சமீபத்திய உதாரணம்தான் அவர் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த குஜராத் போலீஸ் சங்கதி.

இதுமட்டுமா?

அன்னா ஹசாரேவை பயன்படுத்தி பாஜகவின் அடிவருடிகளை குஷிப்படுத்தியது,

ஹர ஹர ராமா என்பது போல ஹர ஹர மோடி என்று மந்திரம் சொல்லச் சொன்னது,

ஐடி கம்பெனிகளை தங்களுக்கு பிரச்சாரம் செய்ய பணம் கொடுத்து பயன்படுத்தியது

அமெரிக்காவுக்கு இவர் விசா கேட்டு விண்ணப்பிக்கமாட்டார்; இவர் வல்லவர் என்று பில்டப்பு கொடுப்பது என்று இவர்களது பில்டப்புகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டுள்ளது.

இவரது கட்சியில் இப்போது எடுத்துள்ள புதிய அஜண்டா என்ன தெரியுமா?

தமிழகத்திலுள்ள அனைத்து டீ கடைகளுக்கும் மோடி பெயர் வைக்க போகின்றார்களாம். அடுத்து மளிகை கடைகளுடைய பெயர்களையெல்லாம் மோடி மளிகை கடை என்று மாற்றப் போகின்றார்களாம்.

டீக்கடை அடுத்து மளிகைக் கடை அதற்கு அடுத்த இலக்கு, மாநகராட்சி கக்கூஸ்களை எல்லாம், “மோடி கக்கூஸ்என்று மாற்றி அதில் ஆண்கள் டாய்லட் புகைப்படத்தில் மோடி படத்தை போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.