புதன், 22 ஜனவரி, 2014

இஸ்லாத்தை நோக்கி திரும்பும் உலகம்!






 ஸ்கேன் செய்யும் மையங்களிலும், ஆண் டாக்டர் பரிசோதனை செய்யும் போதும் பெண்ணுடன் ஆண் டாக்டரோ அல்லது ஸ்கேன் செய்யும் பொறுப்பாளர்களோ தனித்து இருக்கக்கூடாது. அவர்களுடன் கூட ஒரு நபரோ அல்லது ஒரு பெண் செவிலியரோ அல்லது பெண் நோயாளியின் உதவியாளரோ இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

 ஒரு அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் தனித்திருக்கக்கூடாது. அவ்வாறு அவர்கள் இருவரும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே ஷைத்தான் இருக்கின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழியை உண்மைப்படுத்தும் விதமாக இந்த சட்ட திட்டத்தை அதிகாரிகள் மிக தாமதமாக போட்டுள்ளனர்.

 இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பிற்போக்கானவை, பெண்ணடிமைத்தனத்தை போதிக்கக்கூடியவை என்று என்னதான் இவர்கள் அவதூறு சுமத்தினாலும் கடைசியில் இஸ்லாத்தை நோக்கி திரும்புவதுதான் இவர்களது பிரச்சனைகளுக்கு இறுதி தீர்வு என்பதை வல்ல இறைவன் கண்முன்னால் காட்டிக் கொண்டிருக்கின்றான்.

 இப்படி உலகமே இஸ்லாத்தை நோக்கி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை !