புதன், 24 ஜூலை, 2013

தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்!

தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கிறார். இப்படி தொடர் சம்பவங்களாக அரசியல் கொலைகள் பதற்றத்தை ஏற்படுத்தும் நிலையில் தமிழகம் இருக்க, "இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் பா.ஜ.க வினைரை படுகொலை செய்கின்றனர்" என்று நோட்டீஸ் விநோகித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அரசியலைத்தான் பா.ஜ.க வினர் குஜராத்திலும் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்!

பா.ஜ.க பிரமுகர்கள் #படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியதுதான். அதற்காக 'இஸ்லாமிய தீவிரவாதிகள்'தான் படுகொலை செய்திருக்கிறார்கள் என்று இந்துத்துவ பா.ஜ.க கூறுவதன் உள்நோக்கம் என்ன? வர இருக்கும் தேர்தலுக்கான முன்னோட்டமாக இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் திட்டமிட்ட செயலாகவே இவர்களின் அணுகுமுறைகளை பார்க்க வேண்டி இருக்கிறது.

சாதிய கலவரத்தை தூண்டி ஆதிக்க சாதிகள் தற்போது ஒன்றிணைந்து இருப்பது போல், தற்போது இரு மதங்களுக்கு இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் செய்யும் அராஜகவாதிகளாக அரசியல்வாதிகள் இருப்பது தமிழகத்திற்கு புதியதல்ல. தமிழக அரசு மதக் கலவரத்தை ஊக்குவிக்குமா? நையப்புடைக்குமா? என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

#'ஜெ'விடம் இருப்பது மதசார்பின்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் 'கேணயன்கள்' இருந்தால் என்ன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கப் போகிறது என்பதில் இருந்து ஜனநாயகத்தின் யோக்கியதையை பார்க்கலாம்!