வெள்ளி, 19 ஜூலை, 2013

மும்பை துப்பாக்கி சூடு

பிரபல மும்பை துப்பாக்கி சூடு தீவிரவாதி அஜ்மல் கசாப் இஸ்லாமியனா?? இல்லவே இல்லை இந்துத்துவா தீவிரவாதிதான் என்று கசிந்த உண்மை மறைத்த மத்திய அரசு!!!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கிய மறக்க முடியாத ஒரு பயங்கரவாத சம்பவம் என்பதும் அந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு தீவிரவாதியை கைது செய்த காவல்துறை அவனை வைத்து விசாரணை என்ற பெயரில் இரண்டு மூன்று வருடங்கள் அந்த வழக்கு இழுக்கப் பட்டும் கடைசி வரை அவனை கண்ணில் காட்டாத மத்திய அரசு பின்பு திடீரென தீவிரவாதி தூக்கிலிடப் பட்டு தண்டிக்க பட்டான் என்ற செய்தியும் வெளியாகியதும் நாட்டு மக்கள் அதை பட்டாசுகள் வைத்து கொண்டாடியதையும் நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.

ஆனால் கடைசி வரை பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்திய மதிய அரசு அந்த தீவிரவாதி பற்றியும் அவன் பின்புலம் பற்றியும் அவன் உண்மையிலேயே பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதி தானா என்பதை பற்றியும் ஆராயாமல் அவனை தூக்கில் போட்டு அந்த தாக்குதலின் பின்னணியை ஆராயாமல் விட்டது வெட்ககேடு!!!!!!

தற்போது ஒரு வீடியோ வெளிவந்து மத்திய அரசின் கையாலாகத்த தனத்தையும்
அந்த தாக்குதலின் பின்னணியை பற்றியும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

http://m.youtube.com/watch?gl=IN&client=mv-google&hl=en-GB&v=naX7lV3neX0

இந்த வீடியோவில் அந்த தீவிரவாதி பேசும் உருது பாகிஸ்தானியர்கள் பேசும் 'உருது' இல்லவே இல்லை.'இந்திய ஹைதராபாதி பேசும் உருது' பேசுகிறான் இவன்.. மேலும் 'பகவான்' என்ற வார்த்தை எந்த பாகிஸ்தானியும் எந்த நேரத்திலும் உபயோகிக்க மாட்டான். அது உருது கிடையாது, அது சமஸ்கிரிதத்திலிருந்து வந்த ஹிந்தி சொல். பாகிஸ்தானியர்கள் என்றுமே 'அல்லாஹ்' என்ற வார்த்தையைத்தான் உபயோகிப்பார்கள்.
இவன் பேசுவது இந்திய ஹைதராபாதி உருது என்பதை 4:15 நிமிட வினாடிகளில் இந்த பதிவில் உள்ள வீடியோ வில் தெளிவாக காணலாம். அவன் உபயோகிக்கும் வார்த்தை (HOINGA) ஹோயி(ய)ங்கா ஒரு இந்திய ஹைதராபாதி உபயோகிக்கும் வார்த்தையாக தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

மேலும் ஜிஹாத் செய்யும் பாகிஸ்தானியர்கள் நன்றாக பேசக்கூடிய திறமை உள்ளவர்களாகவும், மூளை சலவை செய்யும் நபர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் கசாபின் வயதில் இருந்தால் கூட.. இவன் சொல்வது ஒன்று கூட நம்பும்படியாக இல்லை.
ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு அவன் பதில் தெரியாது என்று சொல்கிறான், கொல்லுவது என்று சொல்கிறான், காசு தன தந்தைக்கு போய் சேரும் என்று சொல்கிறான், தாடி வைத்த 45 வயதில் இருக்கும் ஜிஹாதி, ஆப்கானிஸ்தானில் போர் செய்யசென்றவர் என்று சொல்கிறான். இந்த வீடியோ வை பார்த்தப்பிறகு கர்கரே-வின் விஷயத்திற்கும் ஹிந்துத்வா-விற்கும் பல சம்பந்தம், பல முடுச்சுகள் இருக்கும் போலத்தெரிய வருகிறது.
இது கண்டிப்பாக ஹிந்துத்வா-வின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்று உறுதியாகிறது. நீண்ட நாட்களுக்கு முன்னமே கசாப் என்ற மனிதன் அவன் பாகிஸ்தான் கிராமத்தை விட்டு ஓடிவிட்டான் என்றும் அவன் தான் இவன் என்றும் அழகாக நிகழ்வுகளை ஜோடித்து பெரிய ஒரு நாடகம் நடத்தி உள்ளார்கள் என்று தெரியவருகிறது!
மற்றும் அந்த படத்தில் அவன் கைகளில் காவி கலர் கையறு கட்டப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது!!!!! மூடநம்பிக்கை உள்ள முஸ்லிம் கருப்பு கலர் கயிர் கட்டுவானே ஒழிய ஒருபொழுதும் காவிக் கலர் கயிர் கட்ட மாட்டான் .

இந்த வீடியோ வை பார்க்கும் பொழுது நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புலப்படுகிறது.மும்பையில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்குதல் சிருபான்மையிருக்கு எதிராக தொடுக்கப் பட்ட காவி பயங்கரவாதம் எனபது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது ???????