திங்கள், 13 அக்டோபர், 2025

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்

 கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 13 10 2025

Soruce FB page Vasu Sumathi

 

JK மகேஷ்வரி மற்றும் NV அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
தவெக கட்சி சார்பாக வழக்கறிஞர்கள் திரு.கோபால் பாலசுப்பிரமணியம், மற்றும் ஆர்யமா சுந்தரம், பாதிக்கபட்டவர் சார்பாக திரு. ராகவாச்சாரி, தமிழ்நாடு அரசு சார்பாக ஹரிஷ் ரோத்தகி, P வில்சன் மற்றும் அபிஷேக் சிங்கிவி ஆஜராகினர்.
பாஜகவின் ஜி.எஸ்.மணி சார்பில் மற்றொரு வழக்கறிஞர் ஆஜரானார். ஆனால் நீதிமன்றம் அந்த மனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் சென்று எப்படி ஆதாரம் இல்லாது இதுபோன்ற சில குற்றச்சாற்றுகளை வைக்கிறார்ககள் என்று எனக்கு தலையே சுற்றியது...
1. நான்கு மணி நேரத்திற்குள் உடர்கூராய்வுகளை முடித்து விட்டு அதிகாலை 4 மணிக்கே பிரேதங்கள் ஏரிக்கப்பட்டதாம்...நடைமுறை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லையாம்
🤔 முறைப்படி கலெக்டரிடம் இரவு நேர பிரேத பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி வாங்கி, நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பக்கத்து மாவட்டங்களில் இருந்து வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், உடல்களை உறவினர்களுக்கு கொடுக்கத்தானே? அப்படி இரவு ஆரம்பிக்கப்பட்ட போஸ்ட் மார்ட்டம் அடுத்த நாள் மாலை வரை அல்லவா நடந்தது. முதல் பிரேதம் ஒப்படைக்கப்பட்டதே காலை 8 மணிக்கு மேல். மாலையிலிருந்து அடுத்த நாள் காலை வரை அடக்கம் செய்தார்கள். அதிகாலை நான்கு மணிக்குள் தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது?
2. பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் காணப்பட்டதாம்.
🤔 ஒரு பேரழிவு சம்பவம் நடந்திருக்கிறது. சுமார் 200-250 பேர் ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் பற்றாக்குறையினால் உடனடியாக மற்ற மாவட்டங்களிலிருந்து ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. அதில் ஏதோ ஒரு ஆம்பலஸ்சுக்கு பதிவு எண் இல்லையாம். அதனால் இதில் ஏதோ சதி உள்ளதாம்.
3. செந்தில் பாலாஜியின் உருவப் படம் பதிக்கப்பட்ட WaterBottles திட்டமிட்ட முறையில் விநியோகிக்கப்பட்டதாம்.
🤔அது மருத்துவமனையில் என்பதை மறைத்துவிட்டார்கள். தண்ணீர் இல்லாமல் 41 பேர் இறந்தது குற்றமில்லையாம். அன்று மருத்துவமனைக்கு வந்த நூற்றுக்கணக்கான அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தது கொலை குற்றமாம்.
4.விஜய் பிரச்சாரத்திற்கு வந்ததே 7 மணிக்குதானாம். ஆனால் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய தொடர்புள்ளவர்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்று x தளத்தில் பதிவிட்டார்களாம்.
🤔 அவர்கள் மட்டுமா சொன்னார்கள், இவர்கள் நாமக்கல்லில் அடித்த கூத்தை பார்த்துவிட்டு உலகமே இதைத்தானே சொல்லியது.
5. கூட்ட நெரிசல் ஆரம்பித்ததற்கு காரணம் யாரோ காலணிகளை தூக்கி எறிந்ததுதானாம். அதற்கு பிறகு போலீஸ் தடியடி நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கித்தான் மக்கள் உயிரிழந்தனர் என்று மனசாட்சியே இல்லாமல் சொல்லுகிறார்கள
🤔 அப்படியென்றால் நூறு வீடியோ ஆதாரங்களும் குப்பையில் போடத்தானா?
6. ஏன் அவ்வளவு அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைதித்தீர்கள்..
🤔 வில்சன் : சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம் தான். நாங்கள் எந்த பெயரையும் பரிந்துரை செய்யவில்லை.
7. ஒரே நேரத்தில் மதுரை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்றம் வேறொரு வழக்கில் (sop) இந்த சம்பவத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது ஏன்?
🤔 இந்த கேள்வி உயர்நீதி மன்றத்துக்கு தானே? இதனால் தமிழ்நாடு அரசுக்கு என்ன பின்னடைவை ஏற்பட்டிருக்கிறது என்று புரியவில்லை.
இரண்டு பக்கங்களின் வாதங்களையும் கேட்டுவிட்டு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த பதிலை பொறுத்துதான் சிபிஐக்கு மாற்றக் கோரிய இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். (உத்தேசமாக நவம்பர் 14 ஆம் தேதி - அதற்கு முன்னும் வரலாம்). அதுவரை உச்சநீதிமன்றம் மறுதேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தது .
அதுவரை SIT தொடர்ந்து தன் வேலையை செய்யும். மிகவும் முக்கியமாக நாளை இந்த புலனாய்வு CBI க்கு போனாலும் அழிக்க முடியாத சில ஆதாரங்களை திரட்டி, நீதி தடம் புரண்டுவிடாமல் காப்பது அதன் கடமையாகும்.