வியாழன், 28 மே, 2015


கொடூரமாக கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமின்
"கடைசி கதறல்" ....????????
ஏதாவது செய்ய வேண்டும் -
அவர்களின் உயிரும் - உடலும்
சிதையும் முன்
ஏதாவது செய்ய -
உள்ளம் தவிக்கிறது -
துடிக்கிறது -
அங்குமிங்கும் ஓடி பரிதவிக்கிறது -
என்ன செய்வதென தெரியவில்லையே....
யாரிடம் முறையிட புரியவில்லையே....
"யா அல்லாஹ்.....
நாங்கள் பலவீனப்பட்டு நிற்கிறோம் -
எங்களை பலப்படுத்துவாயாக.....
உலகின் அதிகாரங்களில் -
உனது மார்கத்தின் எதிரிகள் பரவி விட்டார்கள்....
அவர்களை வென்றிட,
ஆட்சிகளை - அதிகாரங்களை -
உலகாளும் வல்லமைகளை -
உன்னை மட்டுமே எஜமானனாக ஏற்று வாழும் -
உனது அடிமைகளான எங்களுக்கு வழங்கி அருள்வாயாக.....
நாங்கள் எங்கள் ஆயுட்காலத்தின் இறுதி வினாடி வரை -
உனக்கு மட்டும் அடிமைகளாக வாழ வேண்டும்;
ஆனால் மனிதர்களிடம் மன்னர்களாக வாழ வேண்டும்.....
அத்தகு மேன்மை - பாதுகாவல் - கண்ணியம் நிறைந்த வாழ்வினை எங்களுக்கு வழங்கி அருள் புரிவாயாக.....
உன்னிடம் யாசித்து நாங்கள் வெறும் கரங்களுடன் திரும்பியதில்லை....."
--T.H.MUTT