திங்கள், 3 பிப்ரவரி, 2014

பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு பெண்களின் ஆடைகளும், அவர்களின் நடைமுறைகளும் முக்கியக் காரணம்-- பெண் பிரமுகர் ஆஷா மிர்ஜி கருத்து.



தேசியவாத காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆஷா மிர்ஜி மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினராவார்.


நாக்பூரில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தொண்டர்களிடையே பேசிய ஆஷா மிர்ஜி, நாட்டில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்கள் அணியும் குறைவான ஆடைகளும், நடைமுறைகளுமே முக்கிய காரணம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இரவு 11 மணிக்கு தனது ஆண் நண்பருடன் அப்பெண் சினிமாவிற்கு ஏன் போக வேண்டும. ?.

போய் விட்டு 6 ஆண்கள் இருந்த பஸ்சில் தனது காதலனுடன் தனியாக ஏன் ஏற வேண்டும்?.

கடந்த ஆண்டு மும்பையில் சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மாலை 6 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான அந்த இடத்திற்கு அவர் ஏன் தனித்து செல்ல வேண்டும் ?.

இது போன்ற காரணங்களும், அவர்கள் அணியும் படுமோசமான ஆடைகளுமே ஆண்களை பாலாத்காரம் செய்யத் தூண்டுகிறது என்றுப் பேசினார்.

டில்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களும், பெண்களின் பாதுகாப்பிற்கு சட்டத் திருத்தமும் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டங்கள் துவங்கி உள்ள நிலையில் இவரின் பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளதாக பத்திரிகை செய்திக் கூறுகிறது.

பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிருத்துவதற்காக எத்தனை சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தாதவரை பெண்கள் மீது இழைக்கப்படும் பலாத்காரங்களை தடுக்கவே முடியாது.

ஆடை என்பது மனிதனின் மானத்தை மறைப்பது என்பது மாறிப் போய் இன்று அது மானத்தை இழக்கும் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டது அதனால் ஆடை மானத்தை மறைப்பதற்காகத் தான் எனும் நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும.

வீட்டு வாசல் கதவுகளை தாராளமாக திறந்து வைத்துக்கொண்டு ஆடு, மாடு நுழைகிறதே, திருடன் நழைகிறானே என்று கூச்சலிடுவது எப்படி அர்த்தமற்ற கூச்சலாக அமையுமோ அதுபோலவே உள்ளது இந்த சட்டத்திருத்தம் வேண்டும் எனும் கூச்சலும்.

உடுத்தும் உடையால் மறைக்க வேண்டிய உறுப்புகளை முறையாக மறைத்துக் கொண்டு நடப்பது தான் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே உலக பொதுமறை திருக்குர்ஆன் சொல்லி விட்டது.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 33: 59.

வீதியில் நடந்து செல்லும் பெண் ஒருத்தி ஒழுக்கமானவள் என்று கண்டறிய அவள் உடுத்தும் உடை அவளுக்கு உதவியாக இருக்கிறது, ஒழுக்கமுள்ளவள் என்று அறிந்தப் பின் அவளை தொந்தரவு கொடுக்க மனம் வராமல் அதிகமானோர் விலகி விடுவதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது எனும் உண்மையை அல்லாஹ்வைத் தவிற வேறு யாரால் இத்தனை துல்லியமாக அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் கூற முடியும் !

பெண்களே திருமறையின் கூற்றை ஏற்று உங்களை காத்துக் கொள்ள முன்வாருங்கள்