ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா?

மாற்றுடையில் கோட்சே பட்டாபிஷேகம்! http://goo.gl/yySZL3

காந்தியாரைப் படுகொலை செய்த தத்துவம் ஆட்சித் தத்துவமாக மாற வேண்டுமா? காந்தியைப் படுகொலை செய்த கோட்சே மாற்றுடையில் அதிகாரப் பீடத்தில் அமர வேண்டுமா? - இதுதான் 16ஆவது மக்களவைத் தேர்தலில் மக்கள் முன் எழுந்து நிற்கும் மகத்தான கேள்வி.



காந்தியார் படுகொலை செய்யப்பட்டு 66 ஆண்டுகள் ஓடி விட்டன. அதற்குக் காரணமானவர்கள் இந்துத்துவாவாதிகள் என்பது மக்களுக்கு மறந்து போயிருக்கும் என்ற ஒரு நினைப்பு!

இந்துத்துவா சக்தி என்பதை ஆர்.எஸ்.எஸ். என்று அடையாளம் காட்டலாம்.

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அல்ல - நாதுராம் கோட்சே இந்து மகா சபையைச் சேர்ந்தவர் என்று எத்து வேலையில் ஈடுபட்டார்கள்.

இரண்டும் ஒன்றுதான் - இன்னொரு கால கட்டத்தில் இந்த ஆர்.எஸ்.எசும், இந்து மகா சபையும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் ஜன சங்கம் (1953)

கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை இல்லை என்று இன்றுவரை கதறிக் கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் கதறுவது இருக்கட்டும்; கோட்சேயின் குடும்பத்தினர் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்.

அதுவும் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் (Front Line) (28.1.1994) இதழே அம்பலப்படுத்தி விட்டது.

நாதுராம் கோட்சேயின் தம்பியும் காந்தியாரின் கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை பெற்றவரு மான கோபால் கோட்சேயின் பேட்டி அந்த இதழில் வெளி வந்துள்ளதே.

Read more: http://viduthalai.in/2011-07-25-07-58-59/75368-2014-02-15-12-42-02.html