திங்கள், 3 பிப்ரவரி, 2014

மோடிக்கு மரண அடி கொடுத்த திருச்சி சிறைசெல்லும் போராட்டம்!




திருச்சியில் ‪#‎மோடி கூட்டிய கூட்டம்; அதே இடத்தில் முஸ்லிம்களின் கூட்டம் : ஓர் ஒப்பீடு!

முஸிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையை வெல்வதோடு, மோடி கூட்டம் கூட்டிய அதே இடத்தில் முஸ்லிம்களின் கூட்டத்தை திரட்டி மோடிக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திருச்சியில் ஜிகார்னர் திடலில் முஸ்லிம்களின் சிறைசெல்லும் போராட்டம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்தியா முழுவதிலுமிருந்து மோடிக்கு கூடிய கூட்டத்தில் 4லட்சம் பேர் திரண்டனர் என்று மீடியாக்கள் செய்தி வாசித்தன.

ஆனால் த்ற்போது அதே திடலில் அதைவிட நான்கு மடங்கு கூட்டத்தை திரட்டி மோடிக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது.

மோடி கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக கிடந்தன. மேடைக்கும் மக்கள் இருக்கும் இடத்திற்கும் நீண்ட இடைவெளி விடப்பட்டது. ஒவ்வொரு நாற்காலிக்கும் இடையில் நீண்ட இடைவெளி விடப்பட்டிருந்தது.

ஆனால் நாம் கூட்டிய கூட்டத்தில் ‪#‎திருச்சி ஜிகார்னர் திடம் நிரம்பி அதுபோல பல்லாயிரக்கணக்காணோர் திடலுக்கு வெளியிலும் குவிந்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் கல்ந்து கொண்டவர்கள் வெறும் 10மாவட்ட முஸ்லிம்கள் மட்டும்தான்.

மோடிக்கு கூடிய கூட்டம் 4லட்சம் பேர் என்றால் அதை நான்கால் பெருக்கியல்லவா இந்த மீடியாக்கள் செய்தி வாசித்திருக்க வேண்டும்.

ஆனால் மீடியாக்கள் அவ்வாறு செய்தி சொல்லவில்லை.

அதேநேரத்தில் தி ‪#‎ஹிந்து நாளேடு மட்டும், இங்கே திரண்ட முஸ்லிம்கள் கூட்டம் பா...வோடு கூட்டணி சேர நினைக்கும் இதர கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது என்று உணமையை போட்டு உடைத்துள்ளது.

Via தவ்ஹீத் ஜமாஅத்