புதன், 5 பிப்ரவரி, 2014

சத்தியத்தைக் கண்டு ஓட்டமெடுக்கும் கிறித்தவ போதகர்கள்!




வீடு வீடாகச் சென்றும், மக்கள் கூடும் இடங்களிலும், பேருந்துகளிலும், எலக்ட்ரிக் ரயில்களிலும் நாம் செல்லும் இடங்களிலெல்லாம், “இயேசுவே இரட்சகர்” ”இயேசுவே ஜீவனுள்ள தேவன்” ”இயேசுவே கடவுள்என்ற பல தலைப்புகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி ஊழியம் செய்யும் கிறித்தவ போதகர்கள் அது குறித்து நாம் அவர்களிடம் சந்தேகங்களை கேட்டு கேள்வி எழுப்பினால் தலைதெறிக்க ஓட்டமெடுக்கும் நிலைதான் இருக்கின்றது.

மதப்பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடியவர்கள் அது குறித்து நாம் சந்தேகம் கேட்டால் பதிலளிக்க திராணி இருக்க வேண்டும். அப்படி பதில் சொல்ல திராணியில்லாவிட்டால் மதத்திணிப்பு பிரச்சாரம் செய்யக்கூடாது.

ஆனால் கிறித்தவ போதகர்கள் வீடுவீடாக வந்து பிரச்சாரம் செய்கின்றனர். அத்தகையவர்களது துண்டு பிரசுரங்கள் உங்களிடம் கிடைத்தாலோ அல்லது அத்தகையோர் உங்களது பகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்தாலோ உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். அப்படி தகவல் தந்தால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்கொள்ள அவர்களது மூளைச்சலவை பிரச்சாரத்தை முறியடிக்க தவ்ஹீத் ஜமாஅத் சிறப்பு குழுவை தயார் செய்துள்ளது.

அவர்களது சித்தாந்தம் பொய்யானது என்பதை பைபிள் அடிப்படையில் அக்குவேறு ஆணிவேராக பிரித்துப்போட்டு பதில் சொல்லி, அவர்களிடம் கேள்வி எழுப்பி, இத்தகைய மதத்திணிப்பு பிரச்சாரம் செய்வோர் அந்தப்பக்கமே அடுத்த தடவை தலைவைத்துப் படுக்காத அளவிற்கு பதிலடி கொடுக்க சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

பொய்யையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் இத்தகைய கிறித்தவ போதகர்களை ஓட்டமெடுக்கச் செய்த நிகழ்வுகள் மற்றும் எப்படியெல்லாம் இவர்களை மக்களை ஏமாற்றுகின்றார்கள் என்பதற்கான ஆதார வீடியோக்களுடன் இன்றைய தினம் ஒரு தகவல்..

http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/