புதன், 26 பிப்ரவரி, 2014

முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும்



முஸ்லிம் ஜனத்தொகையை மட்டுப்படுத்த வேண்டும், ஹிந்துக்கள் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்- அசோக் சிங்கால் அலறல்.


நேற்று போபாலில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிங்கால் தெரிவித்ததாவது:

ஹிந்துக்கள் முஸ்லிம் மதத்தில் சேறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஹிந்து சமூகம் சிறுபான்மை சமுதாயமாக மாறி விடும் அவலம் ஏற்படும் என்ற அச்சம் உருவாகிறது.

அதனால் ஒவ்வொரு ஹிந்து தம்பதிகளும் குறைந்தது 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் மேலும் மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும்' என்று கூறினார்.

அசோக் சிங்காலுக்கு நாம் கூறிக் கொள்வது யாதெனில் :

மதமாற்ற தடை சட்டம் ஒருக்காலும் கொண்டு வர முடியாது.

முதலில் சந்நியாசி வேடமிடும் உங்கள் அரசியல் தலைவர்களையும், ஆன்மீக தலைவர்களையும் திருமனம் செய்து கொண்டு பிள்ளைகளை பெறச் சொல்லுங்கள்.

அவர்கள் பகிரங்கமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியத்தை கலைகின்றனர், மேலும் நாட்டுக்கு தலைகுணிவை ஏற்படுத்துகின்றனர். ( சங்கராச்சாரியார் முதல் இன்றைய நித்தியானந்தா வரை நீண்டதொரு பட்டியல்).

ஹிந்து மக்கள் ஐந்துக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர் அது உங்களுக்குத் தெரிவதில்லை. இல்லை என்றால் இத்தனைக் கோடி உருவாகி இருக்குமா ?.

பிரச்சனை எங்கு இடிக்கிறதென்றால் மேல் சாதி, கீழ் சாதி எனும் அடிமைத்தனத்தின் ஹிந்து மத அடித்தளம் தான்.

இதை உங்களால் மாற்றி அமைக்க முடியுமா ?.

சேரிக்கும், அக்ரஹாரத்திற்கும் நேரடி இணைப்பை உருவாக்க முடியுமா ?.(பெண் கொடுத்துப் பெண்ணெடுக்கும் திருமண பந்தத்தை ஏற்படுத்த முடியுமா ?).

முடியாது எனில் மைனஸ் ஆவதை எவராலும் தவிர்க்க முடியாது.