செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்? எங்கும் நிற்காமல் 47 கி.மீ ஓடிய பேருந்து: டெல்லியில் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

 source https://tamil.indianexpress.com/india/delhi-girl-gang-raped-on-bus-that-travelled-47-km-without-being-stopped-12460121


delsaks

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்? எங்கும் நிற்காமல் 47 கி.மீ ஓடிய பேருந்து: டெல்லியில் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Written by: Sakshi Chand

கிரேட்டர் நொய்டாவில் இருந்து டெல்லியின் காஷ்மீரி கேட் வரை சுமார் 43 கி.மீ தூரம் ஓடும் பேருந்தில் 17 வயது பள்ளிச் சிறுமி ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் பேருந்திலிருந்து கீழே வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்ட சிறுமி, டெல்லி காஷ்மீரி கேட் காவல் நிலையத்தை அடைந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து வடக்கு டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) நிஹாரிகா பட் தெரிவிக்கையில், விவகாரத்தின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, புதிய குற்றவியல் சட்டங்களின்படி எல்லை வரம்புகளைப் பார்க்காமல் காவல் துறையினர் உடனடியாகச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை ஏற்பாடு செய்து வழக்குப் பதிவு செய்தனர் என்றார்.

மருத்துவப் பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தடயவியல் நிபுணர்கள் அந்தப் பேருந்தை ஆய்வு செய்ததில், சிறுமியின் தலைமுடி இழைகள் பேருந்திற்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளான குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்தது என்ன?

ஆக.4 அன்று நடந்த இந்தச் சம்பவம், 2012-ல் உலகையே உலுக்கிய 'நிர்பயா' கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. 11-ம் வகுப்பு படிக்கும் அச்சிறுமி, தாயார் திட்டியதால் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறி நொய்டாவின் செக்டார் 63-ல் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பலத்த மழை பெய்துகொண்டிருந்த நிலையில், கிரேட்டர் நொய்டாவின் பாரி சவுக் (Pari Chowk) பகுதியில் அவர் இறங்கியுள்ளார். அங்கிருந்து உறவினர் வீடு சுமார் 25 கி.மீ தொலைவில் இருந்ததால், மாற்று வாகனத்தை தேடி காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நீல நிற ஸ்லீப்பர் பேருந்தின் நடத்துநர் சந்தீப், சிறுமியை செக்டார் 63-ல் இறக்கிவிடுவதாக ஆசைகாட்டி ஏற்றியுள்ளார். ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் பேச்சை நம்பி சிறுமியும் பேருந்தில் ஏறியுள்ளார்.

பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கிரேட்டர் நொய்டா பட்டறைக்கு (Workshop) கொண்டு செல்லப்பட்டிருந்த அந்தப் பேருந்தில் வேறு பயணிகள் யாரும் இல்ல. மாலை 5 மணிக்கு மேல் பட்டறையிலிருந்து பேருந்தை எடுத்துக்கொண்டு வடக்கு டெல்லி நோக்கி இருவரும் ஓட்டிச் சென்று உள்ளனர். பாரி சவுக் பகுதியில் இருந்து காஷ்மீரி கேட் வரை பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, சிறுமியை இருவரும் மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். எதிர்த்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இரவில் ஜன்னல்களில் அடர்ந்த திரைச்சீலைகள் மூடப்பட்டிருந்த அந்தப் பேருந்து, காவல்துறையின் எவ்வித சோதனையுமின்றி சுமார் 43 கி.மீ தூரம் வரை பயணித்துள்ளது.

காஷ்மீரி கேட் அருகே சிறுமியைத் தூக்கி வீசிவிட்டுச் சென்ற குற்றவாளிகள், பேருந்தை வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் நிறுத்தி இருந்தபோது கைது செய்யப்பட்டனர். சிறுமி ஆட்டோ மூலம் காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்த பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேபாள வெள்ளம்: 900 மாணவர்களை ஒரு ஆசிரியர் காப்பாற்றியது எப்படி?

Nepal teacher

ஆற்றின் மேல்நிலைப்பகுதியிலுள்ள பெட்ராவதி கிராமத்தை வெள்ள நீர் ஏற்கனவே அடித்துச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தாவாடி கூறினார். Photograph: (படம்: ஃபேஸ்புக்/ ஏபி)

பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளம் மற்றும் திபெத்தின் சில பகுதிகளைத் தொடர்ந்து சீரழித்து வரும் நிலையில், வெள்ள நீர் உயருவது குறித்துப் பல எச்சரிக்கைகளைப் பெற்ற பிறகு, 900 மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற நேபாள பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த முடிவு ஒரு பெரிய பேரழிவைத் தடுத்துள்ளது.

source https://tamil.indianexpress.com/international/nepal-floods-teacher-saves-900-students-trisuli-12460854

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவாடி, சில நிமிடங்களுக்குள் குறைந்தது நான்கு எச்சரிக்கைகளைப் பெற்ற பிறகு, மாணவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் என்று லண்டனை தளமாகக் கொண்ட பி.பி.சி (BBC) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஆற்றின் மேல்நிலைப்பகுதியிலுள்ள பெட்ராவதி கிராமத்தை வெள்ள நீர் ஏற்கனவே அடித்துச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தாவாடி கூறினார். பின்னர் ஆற்றிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த விடுதி கட்டிடத்தை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டதை அவர் பார்த்துள்ளார்.

பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளம், சுமார் 800 பேரைக் பலி வாங்கியுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோரைக் காணாமல் போகச் செய்து நேபாளத்தைச் சூறையாடியுள்ளது.

Nepal flood IE
இப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து திரிசூலி நீர்மின் நிலையம் கடுமையாக சேதமடைந்தது. Photograph: (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: தாஷி தோப்கியால்)

நேபாள தலைமை ஆசிரியர் 900 மாணவர்களைக் காப்பாற்றியது எப்படி?

தலைமை ஆசிரியருக்குக் கிடைத்த எச்சரிக்கைகளில், ஆற்றின் மேல்நிலைப்பகுதியிலுள்ள பெட்ராவதி குடியிருப்பை வெள்ள நீர் ஏற்கனவே அடித்துச் சென்றுவிட்டது என்ற தகவலும் அடங்கும். 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியின் ஆசிரியரான அவருக்கு, இந்த முடிவு மிகவும் தெளிவான ஒன்றாக இருந்தது. அப்போதுதான் பள்ளியை உடனடியாகக் காலி செய்யத் தீர்மானித்ததாக தாவாடி கூறினார். "நான் இனி தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். வெள்ளம் வராவிட்டாலும் கூட, அது ஒரே ஒரு நாள் வகுப்பு இழப்புதானே," என்று அவர் பி.பி.சி-யிடம் கூறினார்.

மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உயர்ந்த நிலப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், ஆற்றிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த விடுதி கட்டிடம் வெள்ள நீரில் மூழ்குவதை தான் நேரில் கண்டதாகத் தலைமை ஆசிரியர் தாவாடி தெரிவித்தார். "நாங்கள் 10 நிமிடங்கள் கழித்து இந்த முடிவை எடுத்திருந்தால், மாணவர்கள் மற்றும் நான் உட்பட எங்கள் யாராலும் இன்று உங்களிடம் பேசியிருக்க முடியாது," என்று அவர் பி.பி.சி நிருபரிடம் கூறினார்.

வெள்ள நீரிலிருந்து தப்பியதை நினைவுகூரும் நேபாள மாணவி

தலைமை ஆசிரியரால் காப்பாற்றப்பட்ட 900 மாணவர்களில் ஒருவரான 16 வயதான யுனிஷா, இந்த சோகம் தாக்குவதற்குச் சில கணங்களுக்கு முன்பு தான் நூலிழையில் வெள்ளத்தில் இருந்து தப்பியதாகக் கூறினார்.

"நானும் என் நண்பர்களும் வெறும் 10 வினாடிகளில் உயிர் தப்பினோம். அடுத்த சில கணங்களுக்குள், என் கண் முன்னாலேயே சந்தைப் பகுதி (பஜார்) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது," என்று யுனிஷா கூறினார்.

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 780-ஐக் கடந்தது; ஆயிரக்கணக்கானோர் மாயம்

நேபாள திடீர் வெள்ளப் பேரழிவில் இதுவரை குறைந்தது 781 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பீட்டின்படி, இந்த இயற்கைச் சீற்றத்தால் 90,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாள வெள்ளம்: என்ன நடந்தது?

01. நேபாள வெள்ளத்தைத் தூண்டியது எது?

பனிப்பாறை உடைந்ததால் திரிசூலி ஆற்றுப் படுகையில் பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

02. பேரழிவு எங்கே தாக்கியது?

திரிசூலி ஆற்றை ஒட்டிய பகுதிகள் உட்பட நேபாளம் மற்றும் திபெத்தின் சில பகுதிகள்.

03. பள்ளியில் என்ன நடந்தது?

தலைமை ஆசிரியர் ராஜேந்திர தாவாடி, பல எச்சரிக்கைகளைப் பெற்ற பிறகு சுமார் 900 மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினார்.

04. நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன?

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி குறைந்தது 781 பேர்.

05. நேபாளத்தில் எத்தனை பேர் மாயம்?

2,500-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளனர்.