வியாழன், 17 அக்டோபர், 2024

ஏழு வயது குழந்தை மரணித்துவிட்டால் அதன் மறுமை மற்றும் மன்னரை நிலை என்ன?

ஏழு வயது குழந்தை மரணித்துவிட்டால் அதன் மறுமை மற்றும் மன்னரை நிலை என்ன? பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 16.10.2024

குர்ஆனை ஓதி அதன் படி செயல்படுபவருக்கு, மறுமை நாளில் அவரது பெற்றோருக்கு கிரீடம் அணிவிக்கப்படும் என்ற செய்தியின் நிலை என்ன?

குர்ஆனை ஓதி அதன் படி செயல்படுபவருக்கு, மறுமை நாளில் அவரது பெற்றோருக்கு கிரீடம் அணிவிக்கப்படும் என்ற செய்தியின் நிலை என்ன? பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 16.10.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 16.10.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 16.10.2024 பதிலளிப்பவர் : F.அர்ஷத் அலி M.I.Sc முஸ்லிம்கள் பல ஜமாத்தாக பிரிந்திருப்பது சரி என்று சில நபிமொழிகளை ஆதாரம் காட்டுகின்றார்களே சரியா? இணைவைப்பு நடக்கும் பள்ளியில் அல்லாஹ்வின் தூதர் தொழுதார்களா? ஆரம்பகாலத்தில் நபிகளார் காபாவில் தொழுதார்களே அதன் நிலை என்ன? "குர்ஆனை ஓதி அதன் படி செயல்படுபவருக்கு, மறுமை நாளில் அவரது பெற்றோருக்கு கிரீடம் அணிவிக்கப்படும் என்ற செய்தியின் நிலை என்ன? இறைச்சியை தர்மம் செய்யும் நபரே உண்ணலாமா?

அன்பான அழைப்பு!

அன்பான அழைப்பு! காஞ்சி ஏ.இப்ராஹீம் ( TNTJ,மாநிலப் பொருளாளர்) கடையநல்லூர் டவுன் - தென்காசி மாவட்டம் பொதுக்கூட்டம் - 24.09.2024

மறுமைப் பயணத்தை மறவாதீர்!

மறுமைப் பயணத்தை மறவாதீர்! ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ வேளச்சேரி ஜுமுஆ - 27.09.2024

எது சத்தியம்?

எது சத்தியம்? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்,TNTJ ஏழு கிணறு கிளை - வடசென்னை மாவட்டம் பொதுக்கூட்டம் - 21.09.2024

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் (அலை)

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹீம் (அலை) எம்.எஸ்.சுலைமான் தணிக்கைகுழுத் தலைவர்,TNTJ பொதுக்கூட்டம் - 29.09.2024 மங்கலம் - திருப்பூர்

மாநபியின் புகழும்! மறுமை நிலையும்!

மாநபியின் புகழும்! மறுமை நிலையும்! K.S.அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி பேச்சாளர், TNTJ பொதுக்கூட்டம் - 21.09.2024 மேட்டுப்பாளையம் கோவை வடக்கு

சமுதாயத்தை பாதுகாப்போம்!

சமுதாயத்தை பாதுகாப்போம்! ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார், மங்கலம் - திருப்பூர் மாவட்டம் பொதுக்கூட்டம் - 29.09.2024

உலமாக்களின் உளறல்களும் உன்னத இஸ்லாமும்!

உலமாக்களின் உளறல்களும் உன்னத இஸ்லாமும்! A.சபீர்அலி M.I.Sc (மாநிலச் செயலாளர், TNTJ) மேலப்பளையம் - நெல்லை மாவட்டம் பொதுக்கூட்டம் -28.09.2024

இஸ்லாத்தில் சாதிகள் உண்டா?

இஸ்லாத்தில் சாதிகள் உண்டா? நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (தணிக்கைக் குழு தலைவர்,TNTJ )

ஒற்றுமைக் கோஷம்! வெற்று வேஷம்!

ஒற்றுமைக் கோஷம்! வெற்று வேஷம்! எம்.எஸ்.சுலைமான் தணிக்கைகுழுத் தலைவர்,TNTJ நூர் பள்ளி - மதுரை ஜுமுஆ உரை - 11.10.2024

மௌலூதும் - மீலாதும்

மௌலூதும் - மீலாதும் K.தாவூத் கைஸர் மாநிலத் துணைத்தலைவர், TNTJ மண்ணூர் பேட்டை மற்றும் பாடி கிளைகள் திருவள்ளூர் மேற்கு பொதுக்கூட்டம் - 21.10.2024

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹிம் நபி

இணைவைப்பை வேரறுத்த இப்ராஹிம் நபி ஆர்.அப்துல் கரீம் மாநிலத் தலைவர்,TNTJ நெல்லை - ஏர்வாடி பொதுக்கூட்டம் - 21.10.2024

இப்ராஹீம் நபியை பொருந்திக்கொள்வோம்!

இப்ராஹீம் நபியை பொருந்திக்கொள்வோம்! K.சுஜா அலி M.I.Sc பேச்சாளர், TNTJ ஈரோடு - அக்ரஹாரம் பொதுக்கூட்டம் - 16.10.2024

இறுதித்தூதரின் இறுதி உபதேசங்கள்

இறுதித்தூதரின் இறுதி உபதேசங்கள் பல்லாவரம் இப்ராஹீம் பேச்சாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 20.09.2024

எதுவும் நிரந்தரமில்லை!

எதுவும் நிரந்தரமில்லை! கே.எம்.சல்மான் M.I.Sc TNTJ, பேச்சாளர் அமைந்தகரை ஜுமுஆ - 11.10.2024

இஸ்லாத்தின் பார்வையில் வக்ஃப்!

இஸ்லாத்தின் பார்வையில் வக்ஃப்! ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர், TNTJ #SaveWaqfLandFromBJP தலைமைய ஜுமுஆ - 11.10.2024

பெற்றோரைப் பேணுவோம்!

பெற்றோரைப் பேணுவோம்! பெரோஸ்கான் மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 27.09.2024

மது ஒழிப்பு - உறுதியாக இருப்பாரா

மது ஒழிப்பு - உறுதியாக இருப்பாரா திருமா? செய்தியும் சிந்தனையும் - 07.10.2024 A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ)

சீர்திருத்தும் மறுமை நம்பிக்கை!

சீர்திருத்தும் மறுமை நம்பிக்கை! உரை : S.ஹஃபீஸ் M.I.Sc மாநிலத் தலைமையக ஜுமுஆ - 27.09.2024

விமான சாகசம் - 5 மரணங்களுக்கு யார் பொறுப்பு?

விமான சாகசம் - 5 மரணங்களுக்கு யார் பொறுப்பு? செய்தியும் சிந்தனையும் - 08.10.2024 A.K.அப்துர் ரஹீம் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்,TNTJ)

தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்?

தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்? உரை: S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 09.10.2024

ஒரே நாடு ஒரே தேர்தல்! சாத்தியமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்! சாத்தியமா? K.ரஃபீக் முஹம்மது செய்தியும் சிந்தனையும் - 26.09.2024

காப்பாற்றிய குரங்குகள்! கண்டுகொள்ளாத உபி அரசு!

காப்பாற்றிய குரங்குகள்! கண்டுகொள்ளாத உபி அரசு! செய்தியும் சிந்தனையும் - 28.09.2024 A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ)

'ரயில் ஜிஹாத்' சங்கிகளின் சதித்திட்டம்!

'ரயில் ஜிஹாத்' சங்கிகளின் சதித்திட்டம்! ஐ.அன்சாரி மாநிலச் செயலாளார்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 02.10.2024

வக்ஃப் சட்டத்திருத்தம் என்ற பெயரில் முஸ்லிம்களின் சொத்துக்களை பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசு..

வக்ஃப் சட்டத்திருத்தம் என்ற பெயரில் முஸ்லிம்களின் சொத்துக்களை பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசு.. A.முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ

லவ் ஜிஹாத் - தொடரும் அவலங்கள்

லவ் ஜிஹாத் - தொடரும் அவலங்கள் காஞ்சி ஏ.இப்ராஹீம் ( TNTJ,மாநிலப் பொருளாளர்) செய்தியும் சிந்தனையும் - 04.10.2024

ஈரான் vs இஸ்ரேல் ஊடகங்களின் ஊனப்பார்வை

ஈரான் vs இஸ்ரேல் ஊடகங்களின் ஊனப்பார்வை N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 05.10.2024

திருப்பூர் - நாட்டு வெடிகுண்டு விபத்து யார் காரணம்?

திருப்பூர் - நாட்டு வெடிகுண்டு விபத்து யார் காரணம்? K.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 10.10.2024

தொடரும் ரயில் விபத்துகள்! யார் பொறுப்பு ?

தொடரும் ரயில் விபத்துகள்! யார் பொறுப்பு ? N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 12.10.2024

புதிய நடைமுறையால் அவதிக்குள்ளாகும் #RationCard விண்ணப்பதாரர்கள்!

 17 10 24

புதிய நடைமுறையால் அவதிக்குள்ளாகும் #RationCard விண்ணப்பதாரர்கள்!

குடும்ப அட்டையில் பெயர் நீக்கல், சேர்த்தலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், களச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கு அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ்களின் அடிப்படையில், குடும்ப அட்டைக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விண்ணப்பத்தின் அடிப்படையில் அண்மையில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்கள், பல குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து, தற்போது குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்துக்கு அதிகாரிகள் களச் சரிபார்ப்பு முறை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி குடும்ப அட்டையில் பெயரை நீக்க, தொடர்புடைய அதிகாரிகள் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே சென்று சரி பார்த்து, பெயர் நீக்கத்துக்கான ஒப்புதலை வழங்குகிறார்கள். இதில் முரண்பட்ட, தவறான தகவல்கள் இருக்கும் நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஓராண்டுக்குப் பிறகு, புதிய குடும்ப அட்டை வழங்கும் பணியை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2023 முதல் இதுவரை 2.9 லட்சம் பேர் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 1.3 லட்சம் பேருக்கு மட்டுமே புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப அட்டை வழங்குவதில், களச் சரிபார்ப்பு முறையால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பல விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும் விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

“புதிதாக திருமணமானவர்கள் குடும்ப அட்டை பெற, திருமணப் புகைப்படங்கள் இருந்தாலே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திருமணச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோல் திருமண பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்காத நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கவும் முடியாது.

விவாகரத்து, தத்தெடுத்தல் தவிர, இதர விவகாரங்களுக்கு திருமண பதிவுச் சான்றிதழ்கள் மட்டுமே தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் ஒரு சில பெற்றோர், தனிப்பட்ட பிரச்னைகளால் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை குடும்ப அட்டையிலிருந்து நீக்கி விடுகின்றனர். இதனாலேயே இம்முறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

source https://news7tamil.live/rationcard-applicants-to-suffer-due-to-new-procedure.html

மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!” – உமர் அப்துல்லாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 

தென்முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம் எனக் கூறி உமர் அப்துல்லாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதனை அடுத்து தேசிய மாநாடு கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்தனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்தது.

இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்க துணை நிலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய முதலமைச்சராக உமர் அப்துல்லா இன்று (16.10.2024) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 5 அமைச்சர்கள் பதிவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், திமுக சார்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, என்சிபி சார்பில் சுப்ரியா சுலே, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும் திமுக சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



source https://news7tamil.live/chief-minister-m-k-stals-congratulations-to-umar-abdullah-who-has-taken-over-as-the-chief-minister-of-jammu-and-kashmir.html

இந்தியா- கனடா மோதல்

 காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியா ஈடுபட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் சிக்கலில் உள்ளன. கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா "கடுமையாக" நிராகரித்துள்ளது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ "வாக்கு வங்கி" அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளும் தலா 6 தூதர்களை வெளியேற்றியுள்ளன.

இந்த இராஜதந்திர மோதலின் சிறிய விளைவுகளை தற்போது கனடாவில் படிக்கும் அல்லது எதிர்காலத்தில் கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களால் உணர முடியும். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கனடாவிற்கான படிப்பு அனுமதிகளைப் பெற்றுள்ளனர், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 100,000 க்கும் அதிகமானோர் படிப்பு அனுமதிகளைப் பெற்றுள்ளனர். 

கனடாவில் தற்போது எத்தனை இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்?

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தரவுகளின்படி, 2015 முதல் 2024 வரை மொத்தம் சுமார் 1.3 மில்லியன் இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதி பெற்றுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில், கனடாவில் 31,920 இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதி பெற்றுள்ளனர், மொத்தம் 219,035 சர்வதேச மாணவர்களில், நாட்டின் மொத்த சர்வதேச மாணவர் மக்கள்தொகையில் வெறும் 14.5% மட்டுமே இருந்தனர். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், 682,060 சர்வதேச மாணவர்களில், படிப்பு அனுமதி பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 278,250 ஆக உயர்ந்துள்ளது, இது மொத்த சர்வதேச மாணவர் மக்கள்தொகையில் 40.7% ஆகும்.

2024 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் வரை, 374,060 சர்வதேச மாணவர்களில் 137,445 இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதி பெற்றுள்ளனர், இது 36.7% ஆகும். 2023 உடன் ஒப்பிடும்போது இது தோராயமாக 4% வீழ்ச்சியைக் குறிக்கிறது. இதற்குக் காரணம் இந்த ஆண்டு, கனடா அரசாங்கம் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் ஒரு வரம்பை அறிமுகப்படுத்தியது, மேலும் படிப்பதற்கான அனுமதி செயல்முறைகளில் புதிய மாற்றங்களைச் செயல்படுத்தியது. இது விசா செயலாக்க நேரத்தை குறைத்து, சில ஆர்வலர்களின் உற்சாகத்தை குறைத்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், கனடாவில் தற்போது சுமார் 600,000 இந்திய மாணவர்கள் உள்ளனர், இதில் புதிய சேர்க்கைகள் மற்றும் அடுத்தடுத்து படித்து வருபவர்களும் உள்ளனர்.

கனடாவில் உள்ள இந்திய மாணவர்களை இந்திய-கனடா மோதல் எவ்வாறு பாதிக்கிறது?

டொராண்டோவில் படிக்கும் ஜலந்தரைச் சேர்ந்த எம்.பி.ஏ (MBA) மாணவி தன்வி ஷர்மா, அரசியல் பதட்டங்கள் சர்வதேச மாணவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை என்று கூறுகிறார். இருப்பினும் கொஞ்சம் கவலை இருக்கிறது என்றார்.

கபுர்தலாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், நோவா ஸ்கோடியாவில் வணிக நிர்வாகம் படிக்கிறார், ”மாணவர்கள் அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்தாமல், தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தினாலும், அரசியல் பதற்றம் பெற்றோரை அச்சுறுத்துகிறது. பெற்றோர்கள் சில சமயங்களில் வேறு நாட்டிற்கு மாறுவதைப் பார்க்கும்படி கேட்கிறார்கள்," என்று ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

டொராண்டோவில் உள்ள மற்றொரு மாணவர் யதர்த், இந்த உணர்வுகளை எதிரொலித்தார், மாணவர்கள் மத்தியில் பீதி இல்லை என்பதை வலியுறுத்தினார், இருப்பினும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் கவலைப்பட முனைகிறார்கள். முந்தைய சிக்கல்களின் போது கூட, கனடா அரசு மாணவர் விசா வழங்குவதை நிறுத்தவில்லை, அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும் கல்வி ஒரு நிலையான பகுதியாக உள்ளது என்று யதர்த் சுட்டிக்காட்டினார்,

கனடாவில் படிக்க விரும்பும் இந்தியர்களை தற்போதைய அரசியல் நிகழ்வுகள் எவ்வாறு பாதிக்கும்?

இந்தியாவில் மாணவர்களிடையே உண்மையான குழப்பம் உள்ளது. கல்வி ஆலோசகர்கள் ஏற்கனவே படிப்பு அனுமதிகள் மீதான புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்வத்தில் குறிப்பிடத்தக்க சரிவை அறிவித்துள்ளனர், மேலும் இராஜதந்திர பதட்டங்கள் அதை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். ஹோஷியார்பூரைச் சேர்ந்த அர்ஷ்தீப் கவுர் கூறுகையில், "நான் கனடா செல்ல திட்டமிட்டிருந்தேன், ஆனால் என் தந்தை என்னை மறுபரிசீலனை செய்யச் சொன்னார்,” என்றார்.

மற்றொரு ஆர்வலரான நவ்ப்ரீத் சிங், "எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் விஷயங்கள் எவ்வாறு வெளிவருகின்றன என்பதை நான் காத்திருந்து பார்ப்பேன்" என்று கூறி தனது திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளார்.

கபுர்தலாவைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங் போன்ற பஞ்சாபில் உள்ள ஆலோசகர்கள், அடுத்த ஆண்டு கனடாத் தேர்தலுக்கு முன்னதாக சமீபத்திய மோதல் ஒரு அரசியல் வளர்ச்சியாக இருந்தாலும், மாணவர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதைக் கவனிக்கின்றனர். விசா செயலாக்க கவலைகள் மற்றும் எதிர்கால நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக சில மாணவர்கள் கனடாவில் படிப்பதன் சாத்தியக்கூறு குறித்து இப்போது கேள்வி எழுப்புவதாக குர்ப்ரீத் சிங் குறிப்பிட்டார்.

“இந்த பதட்டமான காலகட்டத்தில் இரு நாடுகளும் பயணிக்கும்போது, ஆயிரக்கணக்கான இந்திய ஆர்வலர்களின் தலைவிதி சமநிலையில் தொங்குகிறது. இந்த இராஜதந்திர பிளவு கல்வி வழிகளை கணிசமாக மாற்றுமா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று மற்றொரு ஆலோசகரான தீரத் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.



source https://tamil.indianexpress.com/explained/how-india-canada-rift-can-impact-indians-studying-aspiring-to-study-in-canada-7319532

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்

 

money 1

அடிப்படை ஊதியம்/ ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 50%-க்கு மேல் இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. (File Photo)

தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டி.ஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

அடிப்படை ஊதியம்/ ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 50%-க்கு மேலாக இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி (டி.ஏ) விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் என்று மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பலன் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், கருவூலத்திற்கு ஆண்டுக்கு ரூ. 9,448.35 கோடி செலவாகும். இந்த நடவடிக்கையால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த உயர்வு உள்ளது.

முன்னதாக மார்ச் மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


source https://tamil.indianexpress.com/india/cabinet-approves-3-per-cent-dearness-allowance-hike-for-central-govt-employees-7319650

சென்னை ரிலாக்ஸ்: கரையை கடந்தது, காற்றழுத்த தாழ்வு மண்டலம்

 depree

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்.17) அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. 

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதோடு வடகிழக்கு பருவமழையும் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் மழை தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கட்கிழமை மழை தொடங்கியது. அன்று முதல் கனமழை பெய்யும் எனக் அறிவிக்கப்பட்டது. அக்.15,16-ம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. தமிழக அரசு மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. 

நேற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதனால் மழை குறைந்தது. 

இந்நிலையில்  மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழ்நாடு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு  இன்று அதிகாலை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

மேலும்,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து வானிலை மையம் சென்னை மற்றம் புறநகர் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/depression-crosses-over-puducherry-andra-coast-says-imd-7320745

புதன், 16 அக்டோபர், 2024

wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!

 

wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு! 15 10 2024

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக வெற்றி பெற்ற ராகுல் காந்தி தமது பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் 7,06,367 வாக்குகள் பெற்றிருந்தார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் மொத்தம் 64.94% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ கட்சியின் சுனீரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார்.

இதனையடுத்து 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி இம்முறை போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வென்றார். வயநாடு மக்களவை தொகுதியில் இந்த முறை 6,47,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து மூத்த இடதுசாரித் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.

ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். மக்களவை  தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதே நாளில் வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் ராகுல் காந்தி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார்.

இதனிடையே வயநாடு மக்களவை தொகுதியில் வரலாறு காணாத நிலச்சரிவால் பெருந்துயரம் நிகழ்ந்தது. இதனால் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது வயநாடு மக்களவை தொகுதியில் இயல்பு நிலைமை திரும்பியுள்ளது. இதனையடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 18-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 25-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 30-ந் தேதி. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.


source https://news7tamil.live/wayanad-lok-sabha-constituency-nov-voting-on-13th-chief-election-commissioner-rajiv-kumar-announcement.html

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..” – #DyCM உதயநிதி பேட்டி!

 

#ChennaiRains | “Continuous power supply is provided.. People should not go out unnecessarily..” - #DyCM Udayanidhi interview!

சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி,

“அடுத்த 2 நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகளுடன் வீடியோ காலில் பேசி மீட்பு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. யானைக்கவுனி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. பெருமழையால் விழுந்த 14 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 14 நிவாரண முகாம்களில் 608 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாராயணபுரம் ஏரிக் கரையை உயர்த்த மக்கள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். சென்னையில் மீட்புப் பணிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 4 சுரங்கப் பாதைகள் மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மழைக்கால நோய் பரவலை தடுக்க 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலங்களில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம். காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மழைக்காலங்களில் உயிர்சேதம் வரக் கூடாது என்பதை கருதில் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/chennairains-continuous-power-supply-is-provided-people-should-not-go-out-unnecessarily-dycm-udayanidhi-interview.html

24 மணி நேரமும் #Aavin பால் கிடைக்க ஏற்பாடு!

 

24 மணி நேரமும் ஆவின் பால் கீழே உள்ள இடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழையானது இன்னும் நிற்காமல் பெய்தபடியே இருந்துவருகிறது. இன்றிரவு முழுவதும் மேகம் வலுவடைந்து அதி கனமழை இருக்கும் என கூறப்படும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு முதலிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கும் சூழலில், பொதுமக்களுக்கு பால் விநியோகம் எந்த வகையிலும் தடைபடாத வகையில், சென்னையில் 24 மணிநேரமும் பால் விநியோகம் நடைபெறும் இடங்களை ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, அம்பத்தூர், அண்ணா நகர், மாதவரம், பெசன்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய எட்டு இடங்களில் ஆவின் பால் கிடைக்கும். மேலும், சென்னை மெட்ரோ நிலையங்களிலுள்ள அனைத்து ஆவின் பார்லரில் பால் கிடைக்கும் என்று ஆவின் தெரிவித்திருக்கிறது.


source https://news7tamil.live/24-hour-availability-of-milk.html

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு; நவம்பர் 23-ல் ரிசல்ட்

 

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு; நவம்பர் 23-ல் ரிசல்ட் 15 10 2024 


EVM machine

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் ஜார்க்கண்டில் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 23-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற பதவிக்காலமும் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஜார்க்கண்ட் தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் நவம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன் தேர்தல் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, வயநாடு மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது. 

தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியில் உள்ளது. 

தேர்தலையொட்டி, கடந்த வாரம் மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தின் போது பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. இதேபோல், மும்பையில் நுழையும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்தது.

அண்மையில், நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், ஜம்மு & காஷ்மீர் தேர்தலில் இந்தியா கூட்டணியும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/india/election-commission-to-announce-maharashtra-and-jharkhand-assembly-elections-schedule-today-7315470

வக்ஃபு திருத்த மசோதா விவகாரம் - எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் வெளிநடப்பு

 

15 10 2024 

MPs walk away

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த திங்களன்று வக்ஃபு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, வக்ஃபு நில ஒதுக்கீட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர். 

இதைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற கூட்டத்தில், பாஜக எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மற்றொரு புறம், எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ஆளுங்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஷிவ் சேனா எம்பி அரவிந்த் சவாந்த் கூறுகையில், சட்ட திட்டங்கள் மற்றும் அறமற்ற வகையில் ஆளுங்கட்சியினர் செயல்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுதியுள்ள கடிதத்தில், அவதூறான கருத்துகளை பேசுவதற்கு, குழுவின் தலைவர் எதற்காக அனுமதி வழங்கினார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/india/for-second-time-in-two-days-opposition-mps-walk-out-of-waqf-bill-meeting-allege-derogatory-remarks-7316873

இந்திய தூதர்கள் மீது கனடா குற்றச்சாட்டு

 

justin trudo x

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை வழக்கில் இந்திய தூதர்களின் பங்கை கனடா பரிந்துரைத்ததில் இருந்து கடந்த ஆண்டு சர்ச்சை தொடங்கியது. (Photo: Reuters)

India Canada Diplomatic Row: ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளின் சிறப்புத்தன்மை என்ன, என்ன ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன? கனேடிய காவல்துறை கூறியது, கனேடிய மற்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்தவை இங்கே பார்க்கலாம். 

ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் இந்திய அதிகாரிகள் "பொது பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில்" ஈடுபடுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து, கனடாவுடனான இந்தியாவின் உறவுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது, புது டெல்லி இந்த குற்றச்சாட்டுகளை "அபாண்டமானது" என்று நிராகரித்தது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை வழக்கில் இந்திய தூதர்களின் பங்கை கனடா பரிந்துரைத்ததில் இருந்து கடந்த ஆண்டு சர்ச்சை தொடங்கியது.

ட்ரூடோவும் மற்ற கனேடிய அதிகாரிகளும் இந்தியாவுக்கு எதிராக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், இந்த குற்றச்சாட்டுகளின் சிறப்புத்தன்மை என்ன, அவற்றை ஆதரிக்க என்ன ஆதாரங்கள் பகிரங்கமாக வழங்கப்பட்டுள்ளன? கனேடிய போலீசார் கூறியது மற்றும் சில கனேடிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்யப்பட்ட அறிக்கை இங்கே தருகிறோம்.

கனேடிய காவல்துறை கூறியது என்ன?

ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) கமிஷனர் மைக் டுஹேம் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில், "கனடாவில் இந்திய அரசாங்கத்தின் ஏஜெண்ட்கள் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டது குறித்து நாங்கள் நடத்தும் பல விசாரணைகளில் நாங்கள் கண்டறிந்தவற்றைப் பற்றி பேசுவதற்கு அசாதாரண சூழ்நிலை நம்மைத் தூண்டுகிறது." என்று கூறினார்.

ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (ஆர்.சி.எம்.பி - RCMP)-ன் இணையதளத்தில் சில குற்றச்சாட்டுகளை விவரிக்கும் செய்தி அறிக்கை உள்ளது. "எங்கள் தேசிய பணிக்குழு மற்றும் பிற விசாரணை முயற்சிகள் மூலம், ஆர்.சி.எம்.பி  நான்கு மிகத் தீவிரமான பிரச்சினைகளை நிரூபிக்கும் ஆதாரங்களைப் பெற்றுள்ளது: வன்முறை தீவிரவாதம் இரு நாடுகளையும் பாதிக்கிறது; இந்திய அரசாங்கத்தின் ஏஜெண்ட்களை கொலைகள் மற்றும் வன்முறைச் செயல்களுடன் இணைக்கிறது; கனடாவில் உள்ள தெற்காசிய சமூகத்தை இலக்காகக் கொண்டு பாதுகாப்பற்ற சூழலைப் பற்றிய கருத்தை உருவாக்க ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தைப் பயன்படுத்துதல்; மற்றும் ஜனநாயக செயல்முறைகளில் குறுக்கீடு” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“கனடாவை தளமாகக் கொண்ட இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், நேரடியாகவோ அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலமாகவோ இந்திய அரசாங்கத்திற்கான தகவல்களைச் சேகரிப்பது போன்ற இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களின் உத்தியோகபூர்வ பதவிகளைப் பயன்படுத்தியதாக விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. மற்றும் தானாக முன்வந்து அல்லது வற்புறுத்தலின் மூலம் செயல்பட்ட பிற நபர்கள். கனடா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வகையான நிறுவனங்கள், இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்டதையும் சான்றுகள் காட்டுகின்றன. இந்த தனிநபர்கள் மற்றும் வணிகங்களில் சிலர் இந்திய அரசாங்கத்திற்காக வேலை செய்யும்படி வற்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். இந்திய அரசாங்கத்திற்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் தெற்காசிய சமூகத்தின் உறுப்பினர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன,” என்று அது மேலும் கூறுகிறது.

“வன்முறையைத் தடுப்பதில் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தி இந்திய அரசு அதிகாரிகளிடம் நேரடியாகச் சான்றுகள் வழங்கப்பட்டன” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இந்த "சான்று" என்ன என்பதைக் குறிப்பிடவில்லை.

இது "இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடு சம்பவங்களைப் புகாரளிப்பதில் பொதுமக்களின் உதவியை" நாடுகிறது, மேலும் "ஆன்லைனில் அல்லது நேரில் யாரேனும் அச்சுறுத்தப்படுவதை உணர்ந்தால், அந்த சம்பவத்தை தங்கள் உள்ளூர் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்" என்றும் கூறுகிறது.

ஊடக நிறுவனங்கள் என்ன கூறியுள்ளன?

டொராண்டோ ஸ்டாரின் கருத்துப்படி, "... ஆறு வாரங்களுக்கு முன்பு விஷயங்கள் தீவிரமாக வளர்ந்தன. கனடா முழுவதிலும் உள்ள பல நகரங்களில் ஆர்.சி.எம்.பி ஒரு தொடர் விசாரணையில் ஒரு வடிவத்தை தீர்மானித்தது, வட்டாரங்கள் தெரிவித்தன:  கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சில கனேடியர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை இந்தியாவின் வெளி உளவு அமைப்பான  ‘ரா’ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவில் உள்ள இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகத் தெரிகிறது.


ஒட்டாவா பணியகத்தின் தலைவரான டோண்டா மக்கார்லஸின் அறிக்கையில், இந்த தகவல் இந்தியாவில் உள்ள ஒரு கிரிமினல் கும்பலுக்குத் தெரிவிக்கப்பட்டது, அதன் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் இந்திய சிறையில் இருக்கிறார். ஆனால், குற்றம் சாட்டப்படாமல், கனடாவில் உள்ள நபர்களுக்கு அனுப்பப்பட்டார். "இந்தியாவின் ஏஜெண்ட்கள் கனேடியர்களை மிரட்டவும், அச்சுறுத்தவும், கொல்லவும் செயல்படுவதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

கடந்த செப்டம்பரில் இருந்து 13 கனடியர்கள் இந்திய ஏஜென்டுகளின் சாத்தியமான இலக்குகள் என்று காவல்துறை எச்சரித்துள்ள நிலையில், 22 பேர் மிரட்டி பணம் பறித்தல் அல்லது மிரட்டல், வற்புறுத்தல், மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது,  “கனேடிய அதிகாரிகள் இப்போது இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படும் முகவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று பார்க்கிறார்கள்” என்று கூறுகிறது.

“இந்தியா முதலில் சந்திக்க ஒப்புக்கொண்டது, ஆனால் ஆர்.சி.எம்.பி பணியாளர்களுக்கு கடந்த வாரம் போலீஸ் வட்டாரங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா செல்ல விசா மறுத்தது" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

"கனடாவில் சீக்கியர்கள் மீதான உளவுத் தகவல்கள் மற்றும் தாக்குதல்கள் பற்றிய இந்திய அதிகாரிகளின் உரைகள் மற்றும் செய்திகள் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன" என்று பெயர் குறிப்பிட விரும்பாத கனேடிய மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. , ஆனால் "வலுவான ஆதாரங்கள்" இருந்தபோதிலும், இந்திய அதிகாரிகள் "குற்றச்சாட்டுகளை அப்பட்டமாக மறுத்தனர்."

"இந்தியாவில் உள்ள ஒரு மூத்த அதிகாரியும், ராவ் அமைப்பின் மூத்த அதிகாரியும்" "சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான உளவுத் தகவல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்" என்று அடையாளம் தெரியாத கனேடிய அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி தி வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் மிக விரிவான குற்றச்சாட்டுகள் உள்ளன.

கடந்த ஆண்டு சர்ரேயில் காலிஸ்தானி செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா-கனடா வரிசை முதன்முதலில் தொடங்கியது, WaPo அறிக்கை வின்னிபெக்கில் சுக்தூல் சிங் கொல்லப்பட்டதை இந்திய அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தியது. சுகா துனேகே என்ற சுக்தூல் சிங் கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி சுடப்பட்டார். பஞ்சாபில் மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் துனேகே தேடப்பட்டு வந்தார். அவர் மிரட்டி பணம் பறித்த பணம் காலிஸ்தானின் காரணத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை கூறுகிறது, "வீட்டுப் படையெடுப்புகள், வாகன ஓட்டிகள் துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு மற்றும் குறைந்தபட்சம் ஒரு கூடுதல் கொலை ஆகியவற்றில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணையில் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று டூனெக் கூறுகிறது.


source https://tamil.indianexpress.com/explained/canada-accuses-indian-diplomats-threats-extortion-lawrence-bishnoi-angle-other-details-7317722