சனி, 9 ஏப்ரல், 2022

முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற கேரளா!

 9 4 2022 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரளா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய – மாநில உறவுகள் குறித்து உரை நிகழ்த்துகிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கேரளா சென்றடைந்தார்.

அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மாநாட்டில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், இன்று இரவே சென்னை திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/kerala-offered-a-warm-welcome-to-cm-stalin.html

Related Posts: