திங்கள், 11 ஆகஸ்ட், 2025

அன்று

 

இப்போது புரிகிறதா? 11 8 2025

 


வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணியாகச் சென்ற எம்பி-க்கள்!

 

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணியாகச் சென்ற எம்பி-க்கள்! #Theekkathir | #RahulGandhi | #ElectionCommissionOfIndia I 11 08 2025

Credit Theekkathir

நெட்டிசன் டாக்


Image Source DW FB Page 11 08 2025  
 

தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்

 தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் 11 8 2025 



source kalaignar news 

ஞானேஷ் குமாரின் வேலை இது தான்

ஞானேஷ் குமாரின் வேலை இது தான்| 11 08 2025

Creidt Sun News

RahulGandhi Arrest | MPs rally | Election Commission of India | Voters Fraud 11 08 2025

 

RahulGandhi Arrest | MPs rally | Election Commission of India | Voters Fraud 11 08 2025

Credit Sun News

ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பிரம்மாண்ட பேரணி

 ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பிரம்மாண்ட பேரணி

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
விடமாட்டோம் விடமாட்டோம் ...
ஓட்டை திருடிய தேர்தல் ஆணையத்தை விட மாட்டோம்...
வெளியீடு வெளியீடு...
டிஜிட்டல் ஓட்டர் லிஸ்ட் வெளியீடு...
மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்...
140 கோடி மக்களிடம் மன்னிப்பு கேள்...
கைது செய் கைது செய்...
தேர்தல் ஆணையர்களை கைது செய்...
பதவி விலகு பதவி விலகு...
போலி பிரதமரே பதவி விலகு...




11 08 2025

source; Sun News and FB Page

INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி



காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துக’ – நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போரட்டம்!

 

காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்துக’ – நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போரட்டம்! 10 08 2025

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும்  251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில்  உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாகுதலை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 8ல் காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு பிரிட்டன்  சீனா, துருக்கி,  உள்ளிட்ட நாடுகளும், கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் தற்போது இஸ்ரேலின் இந்த முடிவுக்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்ரேல் அரசுக்கு எதிராக சனிக்கிழமை இரவு தலைநகர் டெல் அவிவ் வீதிகளில் ஏரளமான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள, காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தவும், எஞ்சியுள்ள 50 பணயக்கைதிகளையும் மீட்டுக்கொண்டுவரவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர்கள் போரை மேலும் தீவிரப்படுத்தாமல் இருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.


source https://news7tamil.live/implement-an-immediate-ceasefire-in-gaza-israeli-people-protest-against-netanyahu.html

இந்தியன் வங்கி தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம்’- தமிழக எம்பிக்கள் தாக்கல்!

 

10 08 2025

மதுரை எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று எம் பி கள் நாடாளுமன்றத்தில் இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,
”மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் திட்ட நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எவரையும் அழைக்காத இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), தங்க தமிழ்ச் செல்வன் (தேனி) கொண்டு வந்துள்ளனர்.
கடந்த ஜூலை 12 , 2025 அன்று ரூ 1100 கோடி அளவிலான “பெண்களுக்கு அதிகாரமளித்தல்; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் திட்டம்” எனும் நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதித்துறை செயலாளர் எம் நாகராஜ் அவர்கள் பங்கேற்றுள்ளார். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்காக நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருடனும் கலந்தாலோ சிக்கவில்லை என்பதோடு அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அப்பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை.
அரசின் திட்டங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கப்படுவதும், அவர்கள் ஈடுபடுத்தப்படுவதும், அவர்களின் ஒருங்கிணைப்பு வாயிலாக மக்கள் தொடர்பு வலுப்படுத்தப்படுவதும் மக்கள் பிரதிநிதிகளின் சிறப்புரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்தியன் வங்கி இத்தகைய சிறப்பு உரிமையை அவமதித்துள்ளது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், ஜனநாயக மரபுகளையும் மீறியுள்ள செயலாகும்.
இது மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கை அல்ல.
ஆகவே இந்தியன் வங்கி தலைவர் இடம் இத்தகைய உரிமை மீறலுக்கான விளக்கம் கோரப்பட வேண்டுமென்றும், மக்கள் பிரதிநிதிகள் அரசுத் திட்ட அமலாக்கத்தில் கலந்தாலோசிக்கப்படுவதையும், ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்றும் கோரி மக்களவைத் தலைவர் மாண்புமிகு ஓம் பிர்லா அவர்களிடம் உரிமை மீறல் தீர்மானத்தை அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/resolution-on-violation-of-rights-in-parliament-against-indian-bank-chairman-tamil-nadu-mps-table.html

பீகாரில் 65 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... விவரங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

 

EC says in response to ADR plea

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள்... விவரங்களை வெளியிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவது சட்டப்படி கட்டாயமில்லை எனத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடக் கோரி தொடுக்கப்பட்ட மனுவை எதிர்த்து தேர்தல் ஆணையம் இந்தப் பதிலை அளித்துள்ளது.

பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒருமாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

இதையடுத்து, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவுப் பட்டியலில் 7.24 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றனர். மீதமுள்ளவர்கள் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் அல்லது பல இடங்களில் பதிவு செய்தவர்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி 65 லட்சம் வாக்காளா்களின் பெயரை நீக்கியதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு தாக்கல் செய்த பதிலில், வாக்காளர்கள் பதிவு விதிகள், 1960-ஐ மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, வரைவுப் பட்டியலின் நகல் தேர்தல் பதிவு அதிகாரியின் (ERO) அலுவலகத்திற்கு வெளியே ஆய்வுக்கு வைக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வரைவுப் பட்டியலை பொதுமக்கள் பார்க்கும்படி செய்ய வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு நகல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

"மனுதாரர் கூறியுள்ள கடமைகளை ஆணையம் நிறைவேற்றியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாதவர்களின் பெயர்கள் கொண்ட தனிப்பட்டியலைத் தயாரிப்பதற்கோ அல்லது வெளியிடுவதற்கோ சட்ட விதிமுறைகள் எதையும் விதிக்கவில்லை" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், சட்டமோ அல்லது வழிகாட்டுதல்களோ இதுபோன்ற பட்டியலைத் தயாரிப்பதற்கோ அல்லது பகிர்வதற்கோ வழிவகை செய்யவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ஐ செப்.1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. "வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இறந்தவர்கள் இல்லை, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் இல்லை, அல்லது கண்டறிய முடியாதவர்கள் இல்லை என்று உறுதிப்படுத்தும் வகையில், படிவம் 6-ஐ ஒரு பிரகடனத்துடன் சமர்ப்பிக்கலாம்" என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. வாக்காளர்களுக்கு உதவ 2.5 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/not-required-by-law-to-provide-list-of-people-not-included-in-draft-electoral-roll-ec-says-in-response-to-adr-plea-9645587

கோரிக்கைகள் நிறைவேறும் வரை'... போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்

 

Sanitation workers Issuet

'கோரிக்கை நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம்'... போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்

பணி நிரந்தம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 10-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10-வது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சா்கள் KN. நேரு, சேகா்பாபு ஆகியோர் நடத்திய பேச்சுவாா்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அரசு சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழுவுடன் இன்று 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு தூய்மைப் பணியாளர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார். ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். இது போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் முயற்சி என்றும், அரசு Ramky என்ற தனியார் நிறுவனத்திற்காக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயமாக்கப்படுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தபோதும், அரசு தங்களை மதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக அந்தப் பணியாளர் வேதனை தெரிவித்தார். “தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஒருபோதும் முடிவடையாது” என்றும், “ரவுடிகள் துப்பாக்கி காட்டி மிரட்டினாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்” என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/permanent-employment-wage-hike-chennai-sanitation-workers-protest-intensifies-after-failed-talks-9645825

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு முறிவு ஏன்? இந்தியா ஏன் உறுதியாக நிற்கிறது?

 trump

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சு முறிவு ஏன்? இந்தியா ஏன் உறுதியாக நிற்கிறது?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றான பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) ஒப்பந்தத்தில் இருந்து 2019-ம் ஆண்டு கடைசி நேரத்தில் இந்தியா விலகியதற்கான காரணம், டெல்லியில் எழுந்த திடீர் மறுபரிசீலனையே ஆகும். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக் குரல்களுக்கு மத்தியில், குஜராத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களின் கையெழுத்துப் போட்ட கடிதங்கள் இந்த முடிவுக்கு முக்கிய காரணியாக அமைந்தன.

ஒரே மாதிரியான வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதங்களில், இந்த ஒப்பந்தம் விவசாயத் துறையிலும், தங்கள் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகள் குறித்து அந்தப் பெண்கள் கவலை தெரிவித்தனர். இந்த கடிதங்கள் அனைத்தும் தென் பிளாக் (South Block) தபால் பெட்டிக்கு வந்த குவிந்தன. இந்த கடிதங்களின் எண்ணிக்கை, ஏற்கனவே கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் நிலவி வந்த கவலைகளை மேலும் உறுதிப்படுத்தியது. அதாவது, சீனா இந்த கூட்டமைப்பில் இருப்பதாலும், அதன் மூலம் மலிவான சீனப் பொருட்கள் இந்திய சந்தையில் குவிய வாய்ப்புள்ளதாலும், உள்நாட்டு பால்வளம், விவசாயம், எஃகு போன்ற துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் வலுப்பெற்றது. இதன் விளைவாக, சில வாரங்களுக்குப் பிறகு இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.


தற்போது, RCEP ஒப்பந்தத்தின்போது நடந்த அதே நிகழ்வுகள், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்கா இந்தியா மீது 50% சுங்கவரியை விதிக்கப்போவதாக அச்சுறுத்திவரும் நிலையில், பால் மற்றும் விவசாயத் துறைகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் (GM Crops) தொடர்பான விஷயங்களில் இந்தியா எந்த சமரசமும் செய்யாது என்பதில் உறுதியாக உள்ளது. இந்த முடிவின் பின்னால் உள்ள அரசியல் விளைவுகளை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது.

ஜூன் மாத இறுதியில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லியில் நம்பிக்கை இருந்தது. ஆனால், அதன் பிறகு "ராஜதந்திர மற்றும் வர்த்தகம் அல்லாத விஷயங்கள்" காரணமாக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பல நாடுகள் வரியைக் குறைப்பதற்காக அடிபணிந்ததைப் போல இந்தியா செய்யாததால், அதிருப்தியில் அழுத்தத்தை அதிகரிக்கிறார். அதே சமயம், சில ராஜதந்திர விவகாரங்களில் இந்தியா டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்ததும் 2 நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

தற்போது, இந்தியாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 50% வரி யதார்த்தமான நிலவரமாக உள்ளது. இந்த உயர் வரியின் உண்மையான தாக்கத்தை இந்தியா இப்போது கணக்கிட முடியும். இந்த உயர் வரி, இந்தியா நம்பகமான "சீனாவுக்கு மாற்று" நாடு என்ற நிலையைப் பாதிக்கும். இந்தியா ஏற்கனவே மொபைல் போன்கள் போன்ற உயர் மதிப்புள்ள பொருட்களின் உற்பத்தியில் சீனாவிற்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.

உயர் வரிகளை விதிப்பது என்பது டிரம்ப்பின் பேச்சுவார்த்தை உத்தியின் ஒரு பகுதி. மற்ற நாடுகளுடன் அவர் கையாண்ட விதமும் இதேபோல் தான்: அதிக வரி விகிதங்களை அச்சுறுத்தி, பின்னர் பேச்சுவார்த்தையில் அதிக பலன்களைப் பெறுவது. சீனா மீது 145% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தி, பின்னர் அது 30% ஆகக் குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இதேபோல் 30% வரி அச்சுறுத்தப்பட்டு, ஒப்பந்தத்திற்குப் பிறகு 15% ஆகக் குறைந்தது.

அமெரிக்காவின் இந்த புதிய வரி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா நிதி உதவி செய்கிறது என்ற பெயரில் விதிக்கப்பட்டாலும், இதன் உண்மை காரணம் ரஷ்யாவை விட இந்தியாவை நோக்கியதாகவே தெரிகிறது. ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கும் சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்தியாவின் மீது மட்டும் இந்த வரி விதிக்கப்படுவது ஒரு வியப்புக்குரிய விஷயம். ஐரோப்பாவும் ரஷ்யாவிடம் இருந்து கனிமங்களை வாங்குகிறது, அமெரிக்காவும் கூட யுரேனியம், பல்லேடியம் வாங்குவதை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பார்வையில், இந்த வரிவிதிப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. ஏனெனில், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்தாலும், மருந்துப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட இந்தியாவின் ஏற்றுமதியில் கால் பகுதிக்கு ஏற்கனவே சலுகை வரி உண்டு.

ஜூன் மாதத்திலிருந்து, ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் குறைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. 2022-ல் பிரென்ட் கச்சா எண்ணெய் மற்றும் ரஷ்யன் உரல்ஸ் கச்சா எண்ணெய் இடையே இருந்த விலை வித்தியாசம் $30 ஆக இருந்தது, இப்போது ஒரு பீப்பாய்க்கு $5 ஆகக் குறைந்துள்ளது. எனவே, பிற கச்சா எண்ணெய் வகைகளுக்கு மாறுவது பொருளாதார ரீதியாகப் பெரிய சிரமம் இல்லை.

பால் மற்றும் விவசாய வர்த்தகத்தில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லி இதற்குப் பதிலாக வேறு சில சலுகைகளை வழங்கத் தயாராக உள்ளது. உதாரணமாக, அமெரிக்கா வாங்க விரும்பும் பெரிய மதிப்புள்ள பொருட்களான பாதுகாப்பு உபகரணங்கள், இயற்கை எரிவாயு மற்றும் அணு உலைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது. கார் உற்பத்தி போன்ற சில குறிப்பிட்ட துறைகளில், சந்தை அணுகலை பல ஆண்டுகளுக்கு படிப்படியாக அதிகரிக்கக்கூடிய ஒரு "கோட்டா" முறையை அறிமுகப்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இது, கடந்த வாரம் பிரிட்டனுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்ட அதே உத்தி.



source https://tamil.indianexpress.com/business/indias-last-minute-pullout-from-rcep-offers-cues-to-why-the-us-trade-talks-have-hit-a-wall-9646483

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

அரசின் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கியது” – மாணிக்கம் தாக்கூர் பேட்டி!

 

9 8 2025

டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மோடி அரசின் தொடர் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கி வருகின்றன.

வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒரு முறை கூட எதிர்க்கட்சி தலைவருக்கும் அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இது குறித்து பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. மத்திய அமைச்சர்கள் தினம்தோறும் வேதம் ஓதுவது தொடர்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பெங்களூரு திருட்டு வாக்கு குறித்து ராகுல் காந்தி வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று இதன் மீதான விவாதம் கோரினோம். ஆனால் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. இது கவலை அளிக்கக்கூடிய நடைமுறையாக உள்ளது. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் திங்கட்கிழமை காலை இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி நடைப்பயணமாக செல்ல உள்ளோம். கனிமொழி, டி ஆர் பாலு திருச்சி சிவா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி எடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனோம். இதைவிட மிகப்பெரிய உறுதியான ஆவணம் கிடையாது. தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் செயல்படவில்லை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. பாஜக எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு என்ன காரணம் என்பது இப்பொழுதுதான் ஒன்றின் பின் ஒன்றாக வெளி வருகிறது. இதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குத் திரட்டு உள்ளடங்கும். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை உரிய முறையில் ஆய்வில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/the-parliament-houses-were-paralyzed-due-to-the-modi-governments-wrong-approach-interview-with-manickam-thakur.html

வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” –

 

வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” –

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகல்விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அகல்விளக்கு திட்டம் குறித்து வழிகாட்டு சிற்றேடுகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்ய நாதன் ஆகியோர் மாணவிகளுக்கு வழங்கினர்.

மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அகல் விளக்கத் திட்டம் மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தான் இன்று முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒன்பதாம் வகுப்பு வரை பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் இணையம் மூலமாக வரும் பிரச்சனை, டிஜிட்டல் டிவைஸை பாதுகாப்பாக பயன்படுத்துவது, இணையவழி குற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, சைபர் புல்லிங் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்கவும் டிஜிட்டல் உலகில் இருத்து பாதுகாக்கவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் வழிவகை செய்யும் திட்டம்தான் அகல் விளக்கு.

அகல்விளக்கு திட்டத்தில் ஆறு வகைகள் உள்ள நிலையில் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆறு வாரங்களில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்து ஒவ்வொரு வகைக்கும் காணொளியும் தயார் செய்யப்பட்டுள்ளது. அகல்விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,

“குறிப்பாக ஒரு திட்டம் சென்னை போன்ற தலைநகரிலோ அல்லது திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் தான் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் தான் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் அறிவுறுத்தியதால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அகல் விளக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரது கையிலும் போன் உள்ளது. மொபைல் போனுக்கு நாம் அடிமையாகி உள்ளோம். பெண் பிள்ளைகள் மிகுந்த கவனமாக இருக்க கூடிய காலகட்டம். டெக்னாலஜி வரமாகவும் சில நேரத்தில் சாபமாகவும் இருக்கிறது. ஒரு லிங்கை கிளிக் செய்தால் பரிசு பொருள் கிடைக்கும் பணம் கிடைக்கும் என்று எண்ணி அதனை தொட வேண்டாம் எப்பொழுது உழைத்தால் தான் ஊதியம் கிடைக்கும். வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் தான் கூறும். வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும், அதனால் புத்தகத்தை படியுங்கள். ஒரு தவறான புகைப்படத்தில் உங்களது முகம் வருகிறது உடனடியாக நீங்கள் தவறான முடிவுக்கு சென்றுவிடக்கூடாது.

சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதித்த பெண்களை பற்றி தெரிந்து கொண்டு அவர்களை ரோல் மிடலாக எடுத்துக் கொள்ளுங்கள். நமது பண்பாடு கலாச்சாரம் மொழி இவற்றை மறந்துவிடாதீர்கள். பண்பாடு கலாச்சாரம் இவற்றையெல்லாம் பறைசாற்ற வேண்டும் என்றால் அதற்கு மொழிதான். அதை நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும். பெற்றோர்கள் உங்களது குழந்தைகள் ஏதாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வந்தால் கடிந்து கொள்ளாதீர்கள்.

வஞ்சித்து விடாதீர்கள், அவர்களும் மனித இனம்தான் சில தவறுகளை செய்திருப்பார்கள் தான், ஒன்பதாம் வகுப்பு படிக்க தொடங்கிவிட்டால் நண்பர்களாக பாருங்கள். குழந்தைகளை முதலில் கண்காணித்து புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் மனதில் இருப்பதை பெற்றோர்களாகிய நீங்கள் தான் தெரிந்து கொள்ள முடியும். டெக்னாலஜியில் எந்த எல்லை வரை செல்ல வேண்டும் எந்த எல்லை தாண்டி போகக்கூடாது என்பதை பெண்கள் ஆகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், “பெண்கள் நாட்டின் கண்கள் நாம் போற்றி பாதுகாக்க வேண்டியது பெண்கள். ஒரு பெண்ணின் ஆதிக்கம் வீட்டில் இருக்கிறது என்றால் அந்த வீடு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் பாதுகாப்போடு இருப்பது தற்போது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எந்தக் கதைக்கும் ஆளாகாமல் நம் சொந்தக் கதையை மட்டும் பார்த்தால் நம்மை வெல்ல யாரும் கிடையாது. நம் வெற்றி நம் கையில் இருக்கிறது என்ற எண்ணத்தோடு இருந்தால் நம்மளை யாரும் திசை திருப்பி விட முடியாது என்று தெரிவைத்துள்ளார்.


source https://news7tamil.live/a-book-says-you-can-read-it-a-mobile-phone-says-you-can-read-it-anbil-maheshs-lie.html

ஜார்க்கண்டில் சரக்கு ரயில் விபத்து

 9 8 2025

 

ஜார்க்கண்ட் மாநிலம், செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள சாண்டில் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்களின் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து காரணமாக, சாண்டில்-டாடாநகர் இடையிலான ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு ரயில்வேயின் அத்ரா பிரிவுக்கு உட்பட்ட சாண்டில் மற்றும் நிம்திஹ் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது. சனிக்கிழமை அதிகாலை 2:45 மணியளவில், ஒரு சரக்கு ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு, எதிரே வந்த மற்றொரு ரயிலின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்கள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக, பெரிய அளவிலான உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து ஒரு பயணிகள் ரயிலுக்கு ஏற்பட்டிருந்தால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருந்திருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியும், சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரிவில் இயங்கும் விரைவு ரயில்கள், மெயில் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. ரயில் சேவையை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

source https://news7tamil.live/freight-train-accident-in-jharkhand-train-service-affected.html