/indian-express-tamil/media/media_files/2025/12/26/mk-stalin-x-2025-12-26-02-37-24.jpg)
“சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் குணமும் அடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டைப் பிளவுபடுத்தி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் வன்முறைக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அனைவரின் கடமை” எனத் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் குணமும் அடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டைப் பிளவுபடுத்தி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் வன்முறைக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அனைவரின் கடமை” எனத் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள மெக்னடோ மாலில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சிலர் தடுத்து நிறுத்தினர். அங்கே அமைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களையும் சரமாரியாக உடைத்து சேதப்படுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும், பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலம், நல்பாரியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் நுழைந்து, கிறிஸ்துமஸ் விழாவிற்கு உபயோகித்த பொருட்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் தீயிட்டு எரித்தனர்.
கிறிஸ்துமஸ் நாளில் இப்படியான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது.
பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-condemns-attack-on-minority-people-in-jabalpur-raipur-christmas-day-10947235





