வியாழன், 23 ஏப்ரல், 2015

மாதவிலக்கு சீரா வெளியேற.....வைத்தியம்
வருத்து பாக்கெட்டுல வச்சிருக்கிற தின்பண்டங்கள், எண்ணெய் பதார்த்தம், இனிப்பு வகை இவைகள நொருக்குத் தீனியா சாப்பிடறது, ஐஸ் பொட்டியில வச்ச உணவுகள சாப்பிறது.. அப்புறம் இப்ப ரொம்ப பேஷனா வந்திருக்கே.. வறுத்த சோறு.. இவைகள சாப்பிறது வளர்ற பெண்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் அது உடம்புக்கு கேடுதான்...
சத்தான உணவு.. தேவையான ஓய்வு ரெண்டும் வயசுப் பொண்ணுகளுக்கு அவசியம்.. இத யாரும் புரிஞ்சிக்கிறதில்ல.. முதல்ல இந்த மாதிரி உள்ள பிரச்சனைகள சரிபண்ணிக்கணும்..
அதோட,
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்
இவைகள எடுத்து தண்ணி விட்டு சூப் மாதிரி செஞ்சு தேவையான அளவு உப்பு சேத்து காலையிலயும மாலையிலயும் சாப்பாட்டுக்கு முன்போ பின்போ சாப்பிட்டுக்கிட்டு வா..
மாத விலக்கு நேரத்துல 10 நாளுன்னு 3 மாசத்துக்கு தொடர்ந்து இத சாப்பிட்டுக்கிட்டு வந்தா மாதவிலக்கு பிரச்சனை காணாம போயிடும்..
இந்த சூப்ப சாதாரண நாட்கள்ள கூட மற்ற பெண்களும் சாப்பிடலாம். இது உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்த தரும்..