புதன், 15 ஏப்ரல், 2015

ஆங்கிலம் இந்தியாவின் எதிரிகள் மொழி;

இந்திய தேசத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை போன்று FLUENT-ஆக ENGLISH பேச - எழுத முடியாமல் போனதன் காரணம் என்ன என்பதனை அறிவீரா....?
பார்ப்பனர்களாகிய நீங்கள் மட்டும் ஆங்கிலத்தில் பெரும் புலமையோடு இருப்பதன் காரணம் என்ன என்பதையேனும் தெரிவீரா....?
இந்திய தேசத்தின் மீது உயிருக்குயிரான நேசம் கொண்ட எங்கள் பாட்டனும் - முப்பாட்டனும், "ஆங்கிலேயர்கள் இந்தியாவின் எதிரிகள்; ஆங்கிலம் இந்தியாவின் எதிரிகள் மொழி; எனவே அதனை இஸ்லாமியர்கள் கற்கக்கூடாது; அது "ஹராம்" என்று தடுத்து நிறுத்திவிட்டார்கள் என்னும் வரலாற்று உண்மையேனும் உணர்வீரா...?
இந்தியன் ஒவ்வொருவனும் மதம் - இனம் - சாதி மறந்து, ஒன்றாக பிணைந்து, உயிரிழந்து - உடல் உறுப்புகள் இழந்து - குடும்பம் இழந்து - சேர்த்து வைத்த செல்வங்கள் எல்லாம் இழந்து நின்று சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்த அந்த துயரமான கால கட்டத்திலும் வெள்ளைகார துறைகளின் ஆதரவாளர்களாக - ஒற்றர்களாக - சேவகர்களாக - அரசு ஊழியர்களாக 90 சதவிகித உங்கள் பிராமண சமூகத்தினர்தான் இருந்தனர் என்பதும் திரிக்கப்படாத வரலாற்று பேருண்மை என்பதை படித்தேனும் உள்ளீரா....?
வெள்ளையர்கள் எங்கள் எதிரிகள் என்பதால் -அவர்களுடன் எவ்வித உறவுகளும் இல்லாததால், அவர்களது "தாய்மொழி" எங்களுக்கு அவசியமற்றதாக இருந்ததில் தவறேதும் இல்லையே...?
அவர்களோடு ஒட்டி - உறவாடி, பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த நீங்கள் அவர்களது "தாய்மொழியை' உங்களது "தாய்மொழியாக" ஏற்றுக்கொண்டதில் வியப்பேதும் உண்டோ.....?
நூறு சதவிகிதம் சரியாக ஆங்கிலம் பேச - எழுத ஆங்கிலம் ஒன்றும் முஸ்லிம்களின் "தாய்மொழி" அல்ல. நன்றாக தெரிந்தாலும் பேச வேண்டிய - எழுத வேண்டிய அவசியமும் இல்லை. தேவைக்கேற்றாற்போல் ஆங்கிலத்தை பயன்படுத்தும் ஆற்றலும் - நுட்பமும் எங்களுக்கு போதுமான அளவு உள்ளது.
எல்லாவற்றிகும் மேலாக -
நாங்கள் சுதந்திரமான தமிழர்கள்; உங்களைபோன்ற ஆங்கிலேய அடிமைகள் அல்ல.
thanks to --T.H.MUT