செவ்வாய், 31 டிசம்பர், 2024

கல்லூரி மாணவி கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

 பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அக்.13ம்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சத்யபிரியா என்ற மாணவி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார்....

இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர் யார்?

 இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி ஆகும். இதில் அதிகபட்சமாக ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணக்கார முதலமைச்சராக முதலிடத்தில்...

திங்கள், 30 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா

 தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 30/12/24முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.அந்த...

களைகட்டியது கன்னியாகுமரி – இன்று புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

 கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா இன்று , நாளை மற்றும் ஜன....

கருப்பை நீக்கம் செய்யும் 4.8% இந்திய பெண்கள்: ஆய்வு முடிவுகளில் தகவல்

 இந்திய பெண்களில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதுடையவர்களில் ஏறத்தாழ 4.8 சதவீதம் பேர் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இதில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பல பெண்கள் தேவையற்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு அரசு காப்பீடு திட்டங்களை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் தொழில்சார் ஆபத்துகள்...

யார் அந்த சார்?

 சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் செல்போனில் பேசிய போது சார் (sir) என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸார் அது திசை திருப்புவதற்காக சும்மா பயன்படுத்தியுள்ளார்...

இணைய வேகத்தை விட மெதுவாக செயல்படும் மனித மூளை; புதிய ஆய்வு கூறுவது என்ன?

 மனித மூளை (பிரதிநிதித்துவ படம்/ பிக்ஸபே)ஒரு புதிய ஆய்வின்படி, இணையத்தில் அனுப்பப்படும் தகவல்களின் வேக விகிதத்தை விட மனித மூளை சிந்தனை செயல்முறைகள் மிகவும் மெதுவான விகிதத்தில் உள்ளன.மனித மூளையில் தகவல் ஓட்டத்தின் வேகம் வினாடிக்கு 10 பிட்கள் (bps), ஆனால் ஒரு பொதுவான வைஃபை இணைப்பு 50 பி.பி.எஸ் வேகத்தில் செயலாக்குகிறது. ஒரு பிட் என்பது கணினியால் செயலாக்க மற்றும் சேமிக்கக்கூடிய...

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

புத்தாண்டு கொண்டாட்டம்: புதிய கட்டுப்பாடுகள் அமல் எதற்கெல்லாம் தடை, அனுமதி?

 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு2025 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னையும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.புத்தாண்டு...

பொங்கல் பரிசு அறிவித்த தமிழக அரசு; ஜனவரி 9 முதல் டோக்கன் விநியோகம்!

 பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவித்துள்ள தமிழக அரசு, வரும் ஜனவரி 9-ந் தேதி இதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே பரிசுத்தொகுப்பினை வழங்கும் வகையில், டோக்கனில் தேதி குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது,ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் முதல் வாரம் பொங்கல் பண்டிகை தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது....

சனி, 28 டிசம்பர், 2024

காவல் உதவி’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்” – மாணவிகளுக்கு அமைச்சர் கோவி செழியன் அட்வைஸ்!

 மாணவிகள் அனைவரும் ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை வழங்கியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் மாணவிகளுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்....

நாட்டிற்கு மன்மோகன் சிங் ஆற்றிய கடமைகள்

 மன்மோகன் சிங் மற்றும் அவரது அரசியல் முன்னோடி, முன்னாள் பிரதம மந்திரி பி.வி நரசிம்ம ராவ், 1990 ஆம் ஆண்டுக்குள் மாறிவரும் புதிய உலகில் ஏற்படும் விரைவான மாற்றங்கள் குறித்து பலரை விட அதிக கவனத்துடன் இருந்தனர்.2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில், நாடு அதன் புகழ்பெற்ற பொருளாதார சீர்திருத்தங்களின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் சில மாதங்களுக்கு முன்பு, தாராளமயமாக்கலின் முக்கிய சிற்பிகளில்...

இணையவழியில் பல கோடி மோசடி: மும்பையை சேர்ந்த 6 பேர் புதுச்சேரியில் கைது!

 உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்யப் போகிறோம் என பொதுமக்களை மிரட்டி 66 கோடிகளைப் கொள்ளை அடித்த மும்பையைச் சேர்ந்தவர்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தார்கடந்த 01.06.2024 அன்று முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த அழகம்மை என்பவர் இணைய வழி காவல் நிலையம் வந்து, அறிமுகமில்லாத நபர்கள் வாட்ஸ்-ஆப் மூலமாக தங்களை மும்பை போலிஸ் என்று சொல்லி, உங்களுடைய ஆதார் மற்றும்...

கொரோனா முடிந்தும் பி.எம் கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடை: 2022- 23 நிதியாண்டில் ரூ.912 கோடி பங்களிப்பு

 பிஎம் கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடை பட்டியல்கொரோனா காலத்தில் ஊரடங்கின் போது பி.எம் கேர்ஸ் நிதியை மத்திய அரசு உருவாக்கியது. இதன் மூலம் எந்தவொரு சுகாதார அவசர நிலையையும் சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு தனி நிதி இருக்கும். இந்நிலையில் கொரோனா முடிந்தும் பிஎம் கேர்ஸ் நிதிக்கு நிவாரணம் வந்தது. இதுகுறித்து பிஎம் கேர்ஸ் நிதி தகவல் தெரிவித்துள்ளது.கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகும் நன்கொடைகள்...

வெள்ளி, 27 டிசம்பர், 2024

குளிரில் நடுங்கி அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்… காசாவில் தொடரும் சோகம்!

 26 12 24 காஸாவில் கடந்த 48 மணிநேரத்தில் 3 குழந்தைகள் குளிரால் நடுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது. இஸ்ரேலின் ராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் தகர்க்கப்பட்டதுடன் 45,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் இடமாற்றப்பட்டு காசா கூடார நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.தற்போது...