திங்கள், 23 டிசம்பர், 2024

பொங்கல் பரிசு தொகுப்பு என்ன? எப்போது வழங்கப்படும்?: செயலர் ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்

 radhakrishnan

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப் பணம் வழங்கப்படும். 

இலவச வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் அரசால் வழங்கப்படும். இந்த நிலையில் அடுத்தாண்டு 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அரசு இன்னும் வெளியிடப் படவில்லை. இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாகையில் கூட்டுறவுத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. 

முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜன.11ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pongal-gift-hamper-commissioner-radhakrishnan-8549036

Related Posts:

  • News Drops Copy from Dailythanthi … Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More
  • எல்லாம் தெரியும் - முபட்டி TNTJ TNTJ, தவறுசெய்தல் - சரி என்று ஆகாது TNTJ - பாங்கு  8.00  - தொழுகை  9.15   (இஷா) தொழுகை  நேரம்   குறிக்கப்பட்ட  … Read More
  • போலி என்கவுன்ட்டர்:  இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு கரும்புள்ளி ஒரு போலி என்கவுண்டர் கொலை மற்றும் ஏழு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தனது முதல் குற்ற அறிக்கை தாக்கல்… Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More