புதன், 18 டிசம்பர், 2024

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

 

ora aler

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவில் லேசான மழை பெய்தது. புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.

தொடர்ந்து  காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (டிச.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. 

காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில்  10 மணிக்கு பிறகு கனமழையாகவும், படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை நேரத்தில் கனமழை இருக்கும் என்றும் கூறியுள்ளது. 

இதேபோல, நாளையும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/bay-of-bengal-depression-rain-orange-alert-chennai-weather-8448766

Related Posts:

  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளா… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More
  • பாம்பு என்றால் விஷம் – யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே… Read More
  • பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல் பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு க… Read More