/indian-express-tamil/media/media_files/2025/02/25/RwaxgZwA2BXhCPfKRWbz.jpg)
கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், எஸ்.பி வேலுமணி, மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சந்தித்து அம்மன் அர்ச்சுணனிடம் சோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே. அர்ச்சுனன் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அம்மன் கே அர்ச்சுணனை நேரில் சந்தித்து சோதனை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். மேலும், அங்கு கூடியிருந்த கழக தொண்டர்களையும் சந்தித்து நீண்டநேரம் உரையாடினார்.
25 2 25
மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி வ.ஜெயராமன், செ.தாமோதரன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி ஆகியோரும் அம்மன் அர்சுணனை சந்தித்து பேசினார்கள்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/sengottaiyan-and-sp-velumani-met-admk-mla-house-amid-dvac-raid-8756183