வெள்ளி, 23 ஜனவரி, 2026

முஸ்லிம் எதிர்ப்பு பேச்சு’: கட்சியை சிக்கலில் தள்ளிய கேரள சி.பி.எம் தலைவர்: யார் இந்த சஜி செரியன்?

 Saji Cheriyan

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான இயக்குனர் ரஞ்சித்தை ஆதரித்துப் பேசியதற்காகவும் சி.பி.ஐ(எம்) தலைவர் சஜி செரியன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

சி.பி.ஐ(எம்) மூத்த தலைவரும் கேரள அமைச்சருமான சஜி செரியனுக்கு சர்ச்சைகள் புதியதல்ல. கடந்த புதன்கிழமை முஸ்லிம் எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவித்துப் பெரும் புயலைக் கிளப்பி, பின்னர் அவற்றைத் திரும்பப் பெற்ற 60 வயதான இவர், ஜூலை 2022-ல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துகளுக்காக அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. பின்னர், அவரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவையில் நுழைந்தார்.

“அதிகப்படியான மக்களைச் சுரண்டுவதை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டுள்ளது என்று நான் கூறுவேன். ஆங்கிலேயர்கள் தயாரித்ததையே இந்தியர்கள் எழுதினார்கள்” என்று அவர் ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசியிருந்தார். மேலும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க ‘குந்தம் மற்றும் குடைச்சக்கரம்’ (ஈட்டி மற்றும் குடைக்கம்பி) என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாணவர் அரசியலின் மூலம் சி.பி.ஐ(எம்) கட்சியில் வளர்ந்த செரியனின் செல்வாக்கு, தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த காலத்தில் ஆலப்புழாவில் அதிகரித்தது. இறுதியில் அவர் சி.பி.ஐ(எம்)-ன் ஆலப்புழா மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார். மறைந்த முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு (அவரும் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்) நெருக்கமானவராகக் கருதப்பட்டாலும், இரு தலைவர்களுக்கும் இடையிலான உட்கட்சிப் பூசலின் போது அவர் விஜயன் பக்கமே நின்றார்.

ஜனவரி 2024-ல், பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவத் தலைவர்கள் குறித்து இவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள், சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசுக்கு மீண்டும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

“மணிப்பூர் வன்முறை குறித்து அந்தத் தலைவர்கள் மௌனம் காத்தனர், ஆனால் அவர்களுக்கு ஒயின் மற்றும் கேக் பரிமாறப்பட்டபோது சிலிர்த்துப் போனார்கள்” என்று அவர் கூறியது கிறிஸ்தவர்களிடையே பெரும் போராட்டத்தைத் தூண்டியது.

கத்தோலிக்கர் அல்லாத தென்னிந்தியத் திருச்சபையைச் (சி.எஸ்.ஐ) சேர்ந்த செரியன், தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால் மாநில அரசுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்று கேரள ஆயர்கள் பேரவை அறிவித்ததை அடுத்து, தனது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“ஒயின் மற்றும் கேக் தொடர்பான கருத்துக்கள் திருச்சபையை அவமதிப்பதாக இருந்தால் நான் அவற்றைத் திரும்பப் பெறுகிறேன். ஆனால், பிரதமருடனான சந்திப்பின் போது தலைவர்கள் மணிப்பூர் பிரச்னையை எழுப்பியிருக்க வேண்டும் என்ற எனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்று அவர் கூறினார்.

மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராய்ந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த செரியன் மீது ஆகஸ்ட் 2024-ல் எழுந்து செய்திகளில் இடம்பிடித்தது.

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய கேரள மாநில திரைப்பட அகாடமியின் அப்போதைய தலைவரும், மூத்த இயக்குநருமான ரஞ்சித்தை ஆரம்பத்தில் ஆதரித்துப் பேசியதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


source https://tamil.indianexpress.com/india/kerala-minister-saji-cheriyan-anti-muslim-remarks-controversy-profile-11023298

NEET PG 2026: முதுநிலை நீட் தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு

 

MBBS Vacant Seats Chennai BDS Seats Vacant Tamil Nadu MBBS BDS Counselling Vacancies 2025

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS), முதுநிலை நீட் தேர்வு (NEET-PG 2026) மற்றும் நீட் முதுநிலை பல் மருத்துவ தேர்வுக்கான (NEET-MDS 2026) தற்காலிக தேர்வு கால அட்டவணையை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) இந்தியாவில் இரண்டு முக்கிய மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது.

நீட் எம்.டி.எஸ் தேர்வு சனிக்கிழமை, மே 2, 2026 அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தகுதிக்குத் தேவையான கட்டாய பயிற்சியை முடிப்பதற்கான முக்கியமான கட்-ஆஃப் தேதியாக மே 31, 2026 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீட் பி.ஜி தேர்வு தற்காலிகமாக ஆகஸ்ட் 30, 2026 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் தேர்வுக்கு தகுதி பெற மாணவர்கள் செப்டம்பர் 30, 2026 க்குள் தங்கள் பயிற்சியை முடிக்க வேண்டும்.

நீட் பி.ஜி மற்றும் நீட் எம்.டி.எஸ் ஆகிய இரண்டு தேர்வுகளும் இந்தியா முழுவதும் நியமிக்கப்பட்ட மையங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின்படி, எம்.டி (MD), எம்.எஸ் (MS) மற்றும் பி.ஜி (PG) டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை கண்டிப்பாக நீட் பி.ஜி தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும், மேலும் எந்தவொரு மாநில அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகமும் இந்தப் படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அதிகாரம் இல்லை.

இருப்பினும், நீட் பி.ஜி சேர்க்கை சில மருத்துவ நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் அவை ஆளும் விதிமுறைகளின்படி தங்கள் சொந்த சேர்க்கை செயல்முறைகளைப் பின்பற்றுகின்றன. இந்த தேர்வு கட்டமைப்பு நாடு முழுவதும் முதுகலை மருத்துவ சேர்க்கைகளில் சீரான தன்மையை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விதிவிலக்குகளைப் பராமரிக்கிறது.

இதற்கிடையில், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பி.ஜி 2025 சேர்க்கைக்கான தகுதி கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை (PIL) டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

கட்-ஆஃப் மதிப்பெண்களில் கூர்மையான குறைப்பு, சிறப்புப் படிப்புகளில் சேரும் மருத்துவர்களின் தரத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றும், நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மனுதாரர் வாதிட்டதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மனுவை நிராகரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாதையாய் மற்றும் நீதிபதி தேஜாஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்கல்வியின் நோக்கம் மருத்துவர்களின் ஒட்டுமொத்த தரத்தை தீர்மானிப்பது அல்ல, திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டது. முதுகலை மருத்துவ இடங்கள் காலியாக இருக்க அனுமதிப்பது பொது நலனுக்கு உதவுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


source https://tamil.indianexpress.com/education-jobs/nbems-releases-exam-schedules-for-neet-pg-mds-2026-11022683

2006 தேர்தலில் 8%... 2021-ல் 1% வாக்குகள்; தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க கடந்து வந்த பாதை

 

2006 தேர்தலில் 8%... 2021-ல் 1% வாக்குகள்; தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க கடந்து வந்த பாதை 22 1 2026 


தமிழ்நாட்டில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் நீண்ட நெடுங்காலமாக நெருங்கி தொடர்பு இருந்து வருகிறது. அவ்வகையில், திராவிட முன்னேற்ற கழகத்தில் (தி.மு.க) இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை (அ.தி.மு.க) தோற்றுவித்த எம்.ஜி.ஆருக்குப் (எம். ஜி. ராமச்சந்திரன்) பிறகு, தனியொரு அரசியல் கட்சியை தொடங்கி பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றவர் விஜயகாந்த். தனது அனல் பறக்கும் வசனங்கள், நேர்மை, உண்மை, வறியவர்க்கு வாரி வழங்கும் தன்மை உள்ளிட்ட பண்புகள் மூலம் சாமானிய மக்கள் மனங்களில் நீங்க இடம் பிடித்தார். 

எம்.ஜி.ஆரைப் போலவே அவரும் கட்சி தொடங்க பல காரணங்கள் இருந்தன. அதில் முதன்மையானதாக சொல்லப்பட்டது, விஜயகாந்த் - ராமதாஸ் இடையே நிலவிய மோதல். கள்ளக்குறிச்சியில் தனது ரசிகர் இல்ல திருமண விழாவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்ததன் விளைவாக, முதலில் விஜயகாந்த் - ராமதாஸ் மோதலாக வெடித்து, பிறகு விஜயகாந்த் ரசிகர் மன்றம் - பா.ம.க மோதலாக விரிவடைந்தது. தங்கள் தலைவரை விமர்சித்த விஜயகாந்த்துக்கு பாடம் புகட்ட அவரின் ரசிகர் மன்ற கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர் பா.ம.க-வினர். இந்த பிரச்சனையின் போது நேரடியாக களத்திற்கு 'இப்போது கம்பங்களை தொட்டுப் பாருங்கள்' என்கிற தொனியில் அதிர விட்டார் விஜயகாந்த். அந்த கணமே தனது அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார். 

ஏற்கனவே தனது படங்கள் மூலம் அரசியலில் ஈடுபட போவதை வெளிப்படுத்திக் காத்திருந்த விஜயகாந்துக்கு இந்த சம்பவம் கட்சி தொடங்கிட தீப் பொறியாக அமைந்தது. "அரசியலுக்கு வந்துதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், அந்த அரசியலை நேராக செய்துதான் எனக்குப் பழக்கமே தவிர, இதோ வருவேன், வரமாட்டேன், நேரம் வரும்போது சொல்வேன் என இப்படி பேசும் ஆள் நான் இல்லை. நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்" என்று அவர் 2001-ல் வெளியான நரசிம்மா படத்தில் பேசி இருந்தார். மறைந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை, தமிழ்த் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்த ரஜினி - கமல் அரசியலுக்கு வராமல் இருந்தனர். 

அப்படியான கலாக் கட்டத்தில், தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு மாற்று தான்தான் என கம்பீரமாக அறிவித்து புதிய அரசியலை முன்னெடுத்தார் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தே.மு.தி.க) தோற்றுவித்த அவர், மதுரை மண் அதுவரை கண்டிராத கூட்டத்தை கூட்டி தனது அரசியல் வருகையை இடி முழக்கமாக அறிவித்தார். அவருக்கு கூடிய கூட்டத்தைக் கண்டு பிரதான கட்சிகள் அனைத்தும் பிரம்மித்துப் போயின. அந்த நேரத்தில், ஆட்சியில் இருந்த தி.மு.க நெடுஞ்சாலை பணிக்காக விஜயகாந்த்தின் ஆண்டாள் - அழகர் திருமண மண்டபத்தை இடிக்கவே, அரசியல் காழ்புணர்ச்சிக்காகவே அப்படி செய்கிறார்கள் என்று தனது தொண்டர் படையை அமைதிப் படுத்தினார். 

2006 சட்டமன்ற தேர்தல் 

விஜயகாந்த்தின் அரசியல் வருகை தமிழகத்தின் பிரதான கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க, அவரின் அரசியல் பலத்தை சோதிக்க 2006 சட்டமன்ற தேர்தல் வந்தது. தே.மு.தி.க-வை தொடங்கி 8 மாதங்களே ஆன நிலையில், தேர்தலை சந்திக்கவிருந்த அவர் தனது கட்சியை தமிழகம் முழுவதும் பரப்பிட சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவரின் கால்கள் படாத இடமே இல்லை என சொல்லும் அளவுக்கு இரவு பகலாக பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 'தே.மு.தி.க-வின் கூட்டணி கடவுளுடனும் மக்களுடனும் தான்' என அறிவித்தார். 

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க, இத்தேர்தல் முடிவில் 8.45 சதவீத வாக்குகளை பெற்றது. பா.ம.க-வின் கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த். தே.மு.தி.க தரப்பில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று இருந்தாலும் 128 தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானித்து இருந்தது. அதேபோல், 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது தே.மு.தி.க. 

தொடர்ந்து நடந்த 2009 மக்களவை தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க, பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரத்து 117 வாக்குகளை பெற்றது தே.மு.தி.க. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.9 சதவீதம் ஆகும். அக்கட்சியின் சார்பில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்டபாளர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெற்று இருந்தனர். 

2011 சட்டமன்ற தேர்தல் 

சினிமாவில் எப்படி குறுகிய காலத்தில் உச்சம் தொட்டாரோ, அதேபோல் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்தார் விஜயகாந்த். 2011 சட்டமன்ற தேர்தல் சூடி பிடிக்க தே.மு.தி.க-வை தங்கள் வசம் இழுக்க தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் போட்டியிட்டன. இறுதியில் பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின் அ.தி.மு.க-வுடன் கைகோர்த்தார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பிடித்த தே.மு.தி.க-வுக்கு 41 இடங்களை ஒதுக்கி இருந்தார் ஜெயலலிதா, அதில் 29 தொகுதிகளை வென்றது தே.மு.தி.க. ஆனால், முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளை விட சற்று குறைந்து 7.88 சதவீத  வாக்குகளை பெற்றது. 150 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க ஆட்சி அமைக்க, 20 இடங்களை மட்டும் வென்ற தி.மு.க மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதனால், விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். 

முதல் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், இப்போது எதிர்க் கட்சித் தலைவராக உயர்ந்து இருந்தார். கூட்டணியில் உள்ள ஆளும் அ.தி.மு.க-வுடன் நட்பு பாராட்டி மக்களுக்கு வேண்டியதை கேட்டுப் பெற்று கட்சியை வளர்ப்பார் விஜயகாந்த் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களிலே அ.தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் பகைமை பாராட்டத் தொடங்கின. பேருந்து கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு போன்ற சாமானிய மக்களை பாதிக்கும் ஆளும் அ.தி.மு.க அரசின் முடிவுகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் முழக்கமிட்டார் விஜயகாந்த். மேலும் பொதுவெளியில் கடுமையாகவும் விமர்சித்தார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய விஜயகாந்த்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கையை உயர்த்தி விஜயகாந்த் பேசவே, இரு கட்சிக்கும் இடையே எதிர்ப்புணர்வு ஏற்பட்டது. 

இதன் எதிரொலியாக சொந்த கட்சியில் இருந்தவர்கள் ஆளும் அ.தி.மு.க-வுக்கு ஆதவராக சென்றனர். இதனால், தே.மு.தி.க-வில் அதிருப்தி எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. தே.மு.தி.க அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தே.மு.தி.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். இதனால் சட்டமன்றத்தில் வெறும் 20 எம்.எல்.ஏ-களின் ஆதரவை கொண்டிருந்த விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார். இந்த இக்கட்டான சூழலில், 2014 மக்களவை தேர்தல் வந்தது. அப்போது தே.மு.தி.க-வை தங்கள் கூட்டணியில் இணைக்க மத்திய, மாநில கட்சிகள் போட்டி போட்டன. தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க-வில் தி.மு.க இருக்கிறது எனக்கூறி வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். 

ஆனால், எந்த மாநில கட்சியுடனும் கூட்டணிக்கு செல்லாத தே.மு.தி.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றது. இந்தத் தேர்தலில் தான் நாடு முழுதும் மோடி அலை வீசியது. அதற்கு சாவல் விடுத்து தமிழகத்தில் லேடி அலையை பரப்பினார் ஜெயலலிதா. மோடி vs லேடி என இங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருந்தது. 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை' என்ற கூற்றுக்கு இணங்க, எந்த பா.ம.க-வுக்கு எதிராக தேர்தல் அரசியலில் இறங்கினாரோ அதே கட்சி இடம் பெற்ற கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். இத்தேர்தலில் தே.மு.தி.க 14 இடங்களில் போட்டியிட்ட நிலையில், அதில் ஒன்றில் கூட வெல்லவில்லை. இதனால், தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் 5.1 ஆக சரிந்தது. 

2016 சட்டமன்ற தேர்தல் 

தொடர்ந்து நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் களம் கண்ட தே.மு.தி.க-வுக்கு, தி.மு.க தங்கள் கூட்டணியில் இணைய பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் அதனை தவிர்த்து இருந்தார் விஜயகாந்த். அப்போது மக்கள் நலக் கூட்டணி என்கிற 3-வது அணி உருவாகி இருந்த நிலையில், பல சுற்று பேச்சு வார்த்தைக்குப் பின் அதில் இணைந்து கொண்டார் விஜயகாந்த். அக்கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இந்தக் காலக் கட்டத்தில் விஜயகாந்த் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரது பேச்சிலும், தோற்றத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டது. 

இந்தத் தேர்தலில் தே.மு.தி.க 104 தொகுதிகளில் போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளராக உளுந்தூர்பேட்டையில் களமிறங்கிய விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். முடிவில் தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது. இதனிடையே தஞ்சை அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் நோட்டாகவுக்கு கீழே சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியாயது. விஜயகாந்த்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய, அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது தம்பி சுதீஷ் ஆகியோர் கட்சியின் முகமாக மாறினார். 2019 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் 2 ஆக சரிந்தது. 

2021 சட்டமன்ற தேர்தல் 

மிகப் பெரிய ஆல விருட்சமாக விரிவடைய தே.மு.தி.க, விஜயகாந்த்தின் உடல்நிலை மற்றும் தவறான அரசியல் முடிவுகளால் தடுமாற்றம் கண்டது. இதனால், 2021 சட்டமன்ற தேர்தல் வந்த போது அக்கட்சியை தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணைய அழைப்பு விடுக்கவில்லை. உடல்நிலை சரியில்லாத விஜயகாந்த்தை அக்கட்சியின் தலைவர்கள் சந்தித்து இருந்தாலும், கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால் தனித்து விடப்பட்ட தே.மு.தி.க, டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற கழகம் தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட 60 தொகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மீண்டும் தோல்வி முகத்தை கண்டது தே.மு.தி.க. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 1 ஆக குறைந்து பெரும் சரிவை கண்டது. 

இந்தக் இக்கட்டான காலக் கட்டத்தில், கட்சியின் அரணாக இருந்த விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்து டிசம்பர் 23, 2023-ல் உயிர் நீந்தார். இதன்பிறகு விஜயகாந்த்தின் தே.மு.தி.க-வை வழிநடத்தும் முழுப் பொறுப்பையும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார். அதேபோல், விஜயகாந்த்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தந்தையின் கனவை நிறைவேற்ற களப் பணியில் இறங்கினார். 2024 மக்களவை தேர்தல் வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்தது தே.மு.தி.க. அக்கட்சி போட்டியிட்ட 5 தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. 

2026 சட்டமன்ற தேர்தல் 

இந்த ஆண்டு நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் சூழலில் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியும், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகமும் என இம்முறை தேர்தல் நான்கு முனை போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும், யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பிரேமலதா தெரிவித்து இருக்கிறார். அக்கட்சி எந்தக் கூட்டணியில் சேர்ந்து எத்தனை இடங்களை வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/vijayakanth-premalatha-dmdk-party-elections-past-history-wins-and-alliances-in-tamil-11023209

ஆஸ்திரேலியா மாடலைக் கையில் எடுக்கும் ஆந்திரா; 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? - அமைச்சர்கள் குழு ஆய்வு

 

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடை செய்யும் ஆஸ்திரேலியா போன்ற சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு பரிசீலித்து வருவதாக ஆந்திரப் பிரதேசத்தின் ஐடி மற்றும் கல்வித் துறை அமைச்சர் நர லோகேஷ் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, இந்த முன்மொழிவை ஆய்வு செய்ய அவர் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முன்மொழிவு முன்வைக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.

இந்த அமைச்சர்கள் குழுவில் உள்துறை அமைச்சர் அனிதா வன்கலபுடி, சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கொல்லு பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெறுவார்கள்” என்று அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. மேலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களாகவோ இருக்கும் மாநிலம் முழுவதிலும் உள்ள வழக்கு தரவுகளை இந்த அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து சேகரிக்கும்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக லோகேஷ் புளூம்பெர்க்கிடம் கூறுகையில், “16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடை செய்யும் ஆஸ்திரேலியாவின் முடிவை அரசு ஆய்வு செய்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குக் கீழுள்ள இளைஞர்கள் இத்தகைய தளங்களில் இருக்கக்கூடாது, ஏனெனில் அவர்கள் எதிர்கொள்ளும் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. இந்த முன்மொழிவைச் செயல்படுத்த ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பு தேவைப்படலாம்” என்றார்.

இருப்பினும், இத்தகைய முன்மொழிவைச் செயல்படுத்துவது சிக்கலானது மற்றும் அதற்குக் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் ஆதரவு தேவைப்படும் என்று மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். “தகவல் தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை, ஏனெனில் இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்துடன் தொடர்புடையது. ஆனால் நாங்கள் அவர்களை அணுகுவதற்கு முன், மாநில அளவில் முன்மொழிவின் கட்டமைப்பை இறுதி செய்ய வேண்டும். அது முடிந்ததும், நாங்கள் மத்திய அரசை அணுகுவோம்” என்று அந்தத் தலைவர் கூறினார். மேலும், தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க-வின் கூட்டணி கட்சி என்பதால் மத்திய அரசைச் சம்மதிக்க வைப்பது கடினமாக இருக்காது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அனுராதா பாசின் மற்றும் மத்திய அரசு இடையிலான 2020-ம் ஆண்டின் மைல்கல் தீர்ப்பு உட்பட பல சந்தர்ப்பங்களில், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையில் இணையத்தைப் பயன்படுத்துவதும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கேரளா உயர் நீதிமன்றம் 2019-ல் இணையத்தை அணுகும் உரிமையை அரசியலமைப்பின் 21ஏ பிரிவின் கீழ் கல்வி உரிமையின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டது. மைனர்களுக்கான சமூக ஊடகத் தடையானது, தகவல்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தாமலும் டிஜிட்டல் கல்வியறிவுக்கு இடையூறு விளைவிக்காமலும் இந்த உரிமையைக் கட்டுப்படுத்த மாநில அரசைத் தூண்டும். இத்தகைய தடையானது விகிதாசாரக் கோட்பாடு மற்றும் உரிமைகளில் குறைந்தபட்சத் தலையீடு ஆகிய கொள்கைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

“இந்த முன்மொழிவைச் செயல்படுத்துவதற்கான வரைபடத்தைத் திட்டமிட லோகேஷ் டாவோஸிலிருந்து திரும்பிய பிறகு ஒரு கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளது” என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.

கடந்த அக்டோபரில் லோகேஷ் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட 5 நாள் பயணத்தின் போது இந்த யோசனை உருவானதாக தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தீபக் ரெட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். மேலும், "அவர் திரும்பிய பிறகு முன்மொழிவின் வழிமுறைகள் வகுக்கப்படும்" என்றும், அவர் இதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்துள்ளதாகவும் கூறினார்.

“குழந்தைகள் தங்கள் வளர்ச்சி ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் தீமைகளுக்கு ஆளாக முடியாது. மேலும், சமீப காலங்களில் சமூக ஊடகத் துஷ்பிரயோகங்களை அதிகம் பார்க்கிறோம். இந்த முன்மொழிவு மக்கள் சமூக ஊடகங்களில் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும்” என்று ரெட்டி கூறினார்.

“நாங்கள் ஆஸ்திரேலியர்களிடமிருந்து சமூக ஊடகத் தடையை மட்டும் குறிவைக்கவில்லை. அவர்கள் தங்கள் மக்களுக்கு எவ்வாறு வெற்றிகரமாகத் திறன் மேம்பாடு செய்கிறார்கள் என்பதைப் பார்த்தோம் மற்றும் ஆந்திராவில் நிறுவனங்களைத் தொடங்கி எங்கள் மக்களுக்குத் திறன் மேம்பாட்டிற்கு உதவுமாறு ஆஸ்திரேலியர்களுடன் பேசினோம்” என்று கூறிய அவர், ஆந்திர அரசு உலகளாவிய நல்லாட்சி நடைமுறைகளை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மாதிரிகள்

குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு இன்னும் சட்டம் இல்லை என்றாலும், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023-ன் கீழ், குழந்தைகளின் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கு முன் "சரிபார்க்கக்கூடிய" பெற்றோரின் ஒப்புதலைச் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறையைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். இருப்பினும் அத்தகைய ஒப்புதலைச் சேகரிக்க ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப முறையை அது பரிந்துரைக்கவில்லை. சட்டத்தின்படி, குழந்தை என்பது 18 வயதுக்குட்பட்ட நபர் என வரையறுக்கப்படுகிறது.

குழந்தைகளின் நலவாழ்வுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் குழந்தைகளின் தனிப்பட்ட தரவைச் செயலாக்கக் கூடாது என்றும், குழந்தைகளைக் குறிவைத்துத் கண்காணிப்பதோ அல்லது நடத்தையைத் திரையிடுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ கூடாது என்றும் இந்தச் சட்டம் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறது.

"ஆன்லைன் பாதுகாப்புத் திருத்தம் (சமூக ஊடகக் குறைந்தபட்ச வயது) சட்டம்" என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியச் சட்டம், வயதுக் கட்டுப்பாடுள்ள தளங்கள் 16 வயதுக்குட்பட்டவர்களால் பயன்படுத்தப்படும் தற்போதைய கணக்குகளைக் கண்டறிந்து, அந்தக் கணக்குகளை முடக்க அல்லது நீக்க "நியாயமான" நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் புதிய கணக்குகளைத் திறப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதில் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவும் எந்தவொரு குறுக்குவழிகளையும் தடுத்தல் அடங்கும். மேலும் யாரேனும் தவறுதலாகக் விடுபட்டாலோ அல்லது சேர்க்கப்பட்டாலோ அந்தப் பிழைகளைச் சரிசெய்வதற்கான செயல்முறைகளையும் தளங்கள் கொண்டிருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் இளைஞர்கள் எதிர்கொள்ளக்கூடிய "அழுத்தங்கள் மற்றும் அபாயங்களிலிருந்து" அவர்களைப் பாதுகாப்பதே இந்தத் தடையின் நோக்கம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் காரணத்தைக் கூறினாலும், இது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் முந்தைய முயற்சி

சமூக ஊடகத் தடை விவகாரத்தை எழுப்ப தெலுங்கு தேசம் கட்சி முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த நவம்பரில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு இது தொடர்பாக ஒரு மசோதாவைக் கொண்டு வர முயன்றார். இருப்பினும், அந்த விஷயம் விவாதத்திற்கு வரவில்லை. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எம்பி மீண்டும் இதை எழுப்புவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடக (வயதுக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு) மசோதா 2025-ஐ அறிமுகப்படுத்துவதற்கான காரணங்களைப் பட்டியலிட்ட லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவது அவசியம் என்றும், அதே நேரத்தில் குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பதில் சமூக ஊடகத் தளங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆஸ்திரேலியச் சட்டத்தைப் போலவே, இந்த மசோதாவும் சமூக ஊடக நிறுவனங்கள் "பொருத்தமான வயது சரிபார்ப்பு வழிமுறைகளை" செயல்படுத்தவும், பரிந்துரைக்கப்பட்ட வயதுக்குட்பட்ட நபர்கள் கணக்குகளை உருவாக்குவதைத் தடை செய்யவும் முயன்றது.


source https://tamil.indianexpress.com/india/andhra-pradesh-social-media-ban-under-16-nara-okesh-proposal-challenges-11023274



வியாழன், 22 ஜனவரி, 2026

யார் குண்டு வைப்பது ?

யார் குண்டு வைப்பது ? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் M.S.சுலைமான் ( TNTJ தணிக்கைக்குழுத் தலைவர் ) M.K.B.நகர் - 13.10.2024 வடசென்னை மாவட்டம்

குர்ஆனுக்கும், பைபிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

குர்ஆனுக்கும், பைபிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன ? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் M.S.சுலைமான் ( TNTJ தணிக்கைக்குழுத் தலைவர் ) M.K.B.நகர் - 13.10.2024 வடசென்னை மாவட்டம்

கடவுளுக்கு இணை என்பது இல்லை என்றால் தர்காவுக்கு செல்வது சரியா?

கடவுளுக்கு இணை என்பது இல்லை என்றால் தர்காவுக்கு செல்வது சரியா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் M.S.சுலைமான் ( TNTJ தணிக்கைக்குழுத் தலைவர் ) M.K.B.நகர் - 13.10.2024 வடசென்னை மாவட்டம்

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் மத நல்லிணக்கம் இருக்கிறதா ?

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களிடம் மத நல்லிணக்கம் இருக்கிறதா ? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் M.S.சுலைமான் ( TNTJ தணிக்கைக்குழுத் தலைவர் ) M.K.B.நகர் - 13.10.2024 வடசென்னை மாவட்டம்

பெண்கள் பள்ளிவாசலுக்கு வர கூடாதா?

பெண்கள் பள்ளிவாசலுக்கு வர கூடாதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் M.S.சுலைமான் ( TNTJ தணிக்கைக்குழுத் தலைவர் ) M.K.B.நகர் - 13.10.2024 வடசென்னை மாவட்டம்

கடவுள் எப்படி உருவானார் ?

கடவுள் எப்படி உருவானார் ? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் M.S.சுலைமான் ( TNTJ தணிக்கைக்குழுத் தலைவர் ) M.K.B.நகர் - 13.10.2024 வடசென்னை மாவட்டம்

நினைவேந்தல் நடத்துவது கூடுமா?

நினைவேந்தல் நடத்துவது கூடுமா? ஏ.கே.அப்துர்ரஹீம் மநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.01.2026

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 21.01.2026 1.ஸலாத்திற்கு பதில் கூறிய பிறகு மீண்டும் ஸலாம் கூறலாமா ? 2.நடைமுறைப்படுத்த இயலாத காரியங்களுக்கு இன்ஷா அல்லாஹ் கூறலாமா ? 3.ஜுமுஆ நேரத்தில் வியாபாரம் செய்யலாமா ? பதிலளிப்பவர் : - எஸ். ஹஃபீஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் எண் 63851 37802

மகத்தான தலைவர் நபிகள் நாயகம்(ஸல்)

மகத்தான தலைவர் நபிகள் நாயகம்(ஸல்) ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத்தலைவர்,TNTJ பொதுக்கூட்டம் - 04.01.2026 கோவை மாநகர் மாவட்டம்

சத்தியப்பாதையில் சமரசாமில்லா தலைவர்

சத்தியப்பாதையில் சமரசாமில்லா தலைவர் எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக் குழுத்தலைவர்,TNTJ பொதுக்கூட்டம் - 18.01.2025 ஆறாம்பண்ணை - தூத்துக்குடி மாவட்டம்

மிஃராஜ் பயணம் படிப்பினைகளும் பித்அத்களும்

மிஃராஜ் பயணம் படிப்பினைகளும் பித்அத்களும் கே.எம்.அப்துந் நாஸர் M.I.Sc பேச்சாளர், TNTJ

இஸ்லாம் கூறும் பெருந்தன்மை

இஸ்லாம் கூறும் பெருந்தன்மை ஆர்.அப்துல் கரீம்M.I.Sc (மாநிலத் தலைவர்,TNTJ) மேலப்பாளையம் ஜுமுஆ - 09.01.2026

நபிவழியில் நம்குடும்பம்

நபிவழியில் நம்குடும்பம் கே.எஸ்.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி (பேச்சாளர், TNTJ) தர்பியா-03.01.2026 தொண்டி முபீன் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்

ஈமானிய அற்புதங்கள்

ஈமானிய அற்புதங்கள் ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப்பொதுச் செயலாளர்,TNTJ TNTJ, தலைமைய ஜுமுஆ - 16.01.2026

புனிதத்தை பாழ்படுத்தாதீர்!

புனிதத்தை பாழ்படுத்தாதீர்! ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 16.01.2026

உறக்கம் ஓர் அருட்கொடை

உறக்கம் ஓர் அருட்கொடை எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி மேலாண்மைக்குழுத் தலைவர்,TNTJ ஜுமுஆ உரை - 16.01.2026 மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம்

சோஷியல் மீடியா சீரழிவுகளும் தீர்வுகளும்..

சோஷியல் மீடியா சீரழிவுகளும் தீர்வுகளும்.. E.J.முஹ்சின் மாநிலச் செயலாளர் TNTJ செய்தியும் சிந்தனையும் - 13.01.26

தாமதிக்கபடும் நீதி, அநீதியே !!

தாமதிக்கபடும் நீதி, அநீதியே !! S.முஹம்மது யாஸிர் மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 14.1.26

கல்வியை அழிக்கும் காவிகள்

கல்வியை அழிக்கும் காவிகள் ஏ.பெரோஸ்கான் மாநிலச்செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 19.01.2026

முதல் முறை வெளிநாடு ட்ரிப் போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக தெரிஞ்சு வசிக்கோங்க

 பயண ஆவணங்கள்

வெளிநாடு செல்ல வேண்டும் என்றாலே பாஸ்போர்ட் கண்டிப்பாக வேண்டும். அப்படி நீங்க ட்ரிப் பிளான் பண்ணுனதும் உடனே பார்க்க வேண்டியது உங்க பாஸ்போர்ட் காலாவதி டேட் எப்போது என்பது தான். பாஸ்போர்ட் வெறும் செல்லுபடியாகும் தேதியை மட்டும் பார்க்காமல், நீங்கள் திரும்பி வந்த தேதியில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு மேல் வேலிடிட்டி இருக்கிறதா என உறுதியாக செக் பண்ணுங்க. சில நாடுகள் இதில் ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. பாஸ்போர்ட்டோட முதல் மற்றும் கடைசி பக்கத்தோட ஸ்கேன் காப்பி அல்லது போட்டோவை உங்க மெயில் போன்ற எதாவது இணைய தளத்தில் கண்டிப்பாக சேவ் பண்ணி வெச்சிக்கோங்க.

முன்கூட்டியே விசா விண்ணப்பம்

ஒரு நாட்டிற்கு செல்வதற்கு முன்பே அங்கு விசா வேண்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவைப்படாது. அப்படி விசா தேவை என்றால் அதை விண்ணப்பிக்க முன்னாடி அந்த நாட்டோட தூதரகம் அல்லது இணையதளத்தில் என்னென்ன டாக்குமெண்ட்ஸ் தேவை என தெளிவாக தெரிஞ்சுக்கோங்க. கடைசி நேரத்துல அவசரம் இல்லாமல், குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு முன்பே விண்ணப்பிச்சுடுங்க. விசா அப்ரூவல் ஆன காப்பியை பிரிண்ட் எடுத்து வச்சுக்கோங்க. 

விமான மற்றும் தங்குமிட முன்பதிவுகள் 

ஒரு ட்ரிப் பிளான் பண்ணிட்ட அடுத்ததா நாம பாக்க வேண்டியது விமான டிக்கெட் கட்டணம் மற்றும் தங்குமிடம் தான். விமான டிக்கெட், தங்கும் இடம்  எல்லாத்தோட கன்ஃபர்மேஷன் டீடைல்ஸையும் மொபைல்ல சேவ் பண்ணி வெச்சதோட, ஒரு பிரிண்ட் அவுட்டும் எடுத்து வச்சுக்கோங்க. ஏர்போர்ட்லயோ இல்ல தங்குற இடத்துலயோ நெட்வொர்க் பிரச்னை இருந்தால் இது உதவும். 

பயண காப்பீடு 

டிராவல் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அதில் மருத்துவ செலவுகள் மட்டும் இல்லாமல், உங்கள் உடைமைகள் தொலைந்து போனால், விமானம் கேன்சல் ஆனால், அல்லது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நாள் தங்க நேரிட்டாலும் எல்லாத்தையும் கவர் பண்ற மாதிரி ஒரு நல்ல பாலிசியா பார்த்து எடுங்க. பாலிசி டாக்குமெண்ட்டோட காப்பியை உங்க கூட வச்சுக்கோங்க. அவ்வளவு தான், இது எல்லாம் இருந்தா சேஃபா ட்ரிப் போய்ட்டு வரலாம்.


source https://tamil.indianexpress.com/international/first-time-international-trip-must-know-these-things-read-full-story-11018614

டாவோஸ் மாநாட்டில் உலக நாடு

 

Donald Trump

கிரீன்லாந்து முதல் உக்ரைன் வரை... டாவோஸ் மாநாட்டில் உலக நாடுகளை அதிரவைத்த டிரம்பின் பேச்சு

உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் தவறான திசையில் செல்வதாக கடுமையாக விமர்சித்தார். மேலும் உக்ரைன் போர், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் கனடாவுடனான உறவு குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

ஐரோப்பா மீது தமக்கு அன்பு இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் அந்த கண்டம் தற்போது தன்னைத்தானே அழித்துக் கொண்டு வருவதாக கூறினார். காற்றாலைகள், குடியேற்றம் மற்றும் வர்த்தகம் ஆகிய விஷயங்களில் ஐரோப்பிய தலைவர்களின் முன்னிலையிலேயே அவர்களைச் சாடினார். ஐரோப்பாவின் சில பகுதிகளை இப்போது அடையாளம் காணவே முடியவில்லை. அமெரிக்கா மீது திணிக்கப்பட முயன்ற அதே தீவிர இடதுசாரிப் போக்குகளை இங்கும் காண முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காதான் இந்த கிரகத்தின் பொருளாதார இயந்திரம் என்றார். தான் பதவியேற்றபோது இருந்த மிகப்பெரிய பணவீக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறிய அவர், தனது வரிக் கொள்கைகளே இந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். 2-ம் உலகப் போரின்போது ஜெர்மனியிடம் ஆறே மணி நேரத்தில் சரணடைந்த டென்மார்க்கால் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது என்றும், அப்போது அமெரிக்காவே அதைப் பாதுகாத்ததாகவும் கூறினார். நாங்க அதைக் காப்பாற்றித் திரும்பக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் இப்போது எவ்வளவு நன்றி உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

கிரீன்லாந்தைக் கைப்பற்ற ராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், அதே சமயம் நீங்க சம்மதித்தால் நாங்க பாராட்டுவோம், மறுத்தால் அதை நினைவில் வைத்திருப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார். கனடா எங்களிடமிருந்து பல சலுகைகளை இலவசமாக பெறுகிறது. அமெரிக்கா இருப்பதால்தான் கனடாவே உயிர் வாழ்கிறது என்று டிரம்ப் விமர்சித்தார்.

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருந்திருந்தால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியிருக்கவே செய்யாது என்று டிரம்ப் வாதிட்டார். புதன்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கவிருப்பதாகவும், போரை முடிக்க இரு நாடுகளும் விரும்புவதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஒரு தேவை என்றால் நேட்டோ நாடுகள் துணை நிற்குமா என்பதில் தமக்குச் சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.

வெனிசுலாவில் நிலைமை சீராகி வருவதாகவும், முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முன்வருவதாகவும் தெரிவித்தார். ரோலக்ஸ் போன்ற சுவிஸ் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து இறக்குமதிப் பொருட்களுக்கான வரியைக் குறைத்துள்ளதாகவும், ஆனால் இது நிரந்தரமல்ல என்றும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று மாநாட்டில் கூலிங் கிளாஸ் (Sunglasses) அணிந்திருந்ததை டிரம்ப் வேடிக்கையாகக் கிண்டல் செய்தார்.


source https://tamil.indianexpress.com/international/top-quotes-from-donald-trumps-speech-at-world-economic-forum-11019761

நீதிபதியின் விளக்கம் அபத்தமானது; பெ.சண்முகம் கண்டனம்

 P Shanmugam CPM State secretary questions Vijay silence as Jana Nayagan release cancelled Tamil News

சனாதன பேச்சு குறித்த வழக்கு: நீதிபதியின் விளக்கம் அபத்தமானது; பெ.சண்முகம் கண்டனம்

'சனாதன ஒழிப்பு' பேச்சு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியின் விளக்கம் மிகவும் அபத்தமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல்தகவல் அறிக்கையை ரத்துசெய்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சனாதன ஒழிப்பு’ பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா, ‘80% மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராகவே முதல்தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி, அந்தத் தீர்ப்பில் கூறியுள்ள கருத்துகள் நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங்களை உள்வாங்கியதாகவோ, அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாகவோ இல்லை என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார்.

முழு வழக்கும் ‘ஒழிப்பு’ என்ற சொல்லை சுற்றியே அமைகிறது; அந்த சொல் மிகவும் முக்கியமானது. ‘அழித்தல்’ (abolish) என்ற சொல், ஏற்கெனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதை தற்போதைய வழக்குக்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும்.

சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது ‘மதப்படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது.

எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப்படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடியாது” என்ற நீதிபதியின் மேற்கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்தமானது.

ஒரு பிற்போக்கு சித்தாந்தத்தை, மக்களை சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தியலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை ஒழிப்பது என்பது, எப்படி அதைப் பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும்? அண்ணல் அம்பேத்கர் ‘சாதி ஒழிப்பு’ பேசினார்.

அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனிதர் இழிவுப்படுத்துகிற, பாகுபடுத்துகிற, வேறுபடுத்துகிற சாதி என்கிற கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதானே. ஒழிப்பு என்பதாலேயே படுகொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச்சர்களே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் என்றாகிவிடும்.

இப்படிக் கூறிய நீதிபதி "80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறீர்களா?" என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது.

சனாதன தர்மத்துக்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக் கூடாதா? "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம் இல்லையா?

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டத்தின் விளைவு தானே.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பப் பெறப்பட தேவையான நடவடிக்கைகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/judges-logic-is-absurd-cpm-leader-p-shanmugam-slams-madurai-hc-verdict-in-amit-malviya-case-11020035

15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கு தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடு- அமர்நாத் ராமகிருஷ்ணன்

 

Amarnath Ramakrishnan 2

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஒரே சான்று தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது என்றும், கீழடி என்றாலே சிலருக்கு ஏன் பயம் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை என்றும் காட்டமாகக் கூறினார்.

கீழடியில் இதுவரை 5 சதவீத ஆய்வுகள் கூட முடிவடையாத நிலையில், தனது முழுமையான ஆய்வு அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பதாகவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்திய துணைக்கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்த ஒரே இடம் தமிழ்நாடுதான்" என்று இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கீழடி அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் உள்ள தடங்கல்கள் குறித்தும் தனது அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

15 லட்சம் ஆண்டுகாலத் தொன்மை

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை விளக்கிய அவர், "ஹோமோசேப்பியன்ஸ் இனத்தின் மரபணு கிடைத்த இடம் தமிழ்நாடு. நாம் கடந்த 60,000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்று உண்மையை இன்று முழுமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்" எனத் தெரிவித்தார்.

“உண்மையை மாற்ற முடியாது”

கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்திச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது குறித்துப் பேசிய அவர், "அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளை வேண்டுமானால் திருத்தித் தருகிறேன், ஆனால் கண்டறிந்த உண்மைகளை ஒருபோதும் திருத்த மாட்டேன்" என ஆணித்தரமாகக் கூறினார். 

கீழடி ஆய்வை முழுமையாக முடிக்கும் முன்பே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், பல ஆண்டுகளாகியும் அவரது ஆய்வு அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி முறையில் மாற்றம் தேவை

தற்போதைய கல்வி முறையைப் பற்றி விமர்சித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், "நமது சங்கக் காலம் கி.மு. 300-ல் தான் தொடங்கியது என்று இன்றும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. அகழாய்வு மூலம் கிடைத்த புதிய ஆதாரங்கள் வெளிப்படையாகத் தெரியாததால்தான் வரலாற்றை அப்டேட் செய்ய முடியாமல் இருக்கிறோம். உண்மையான தரவுகளைக் கொண்டு வரலாற்றை அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும்" என்றார்.

கீழடி என்றால் ஏன் பயம்?

"கீழடி என்றாலே சிலருக்கு ஏன் அதிர்வும் பயமும் ஏற்படுகிறது எனத் தெரியவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக அவர்கள் பயம் கொள்கிறார்கள். இதுவரை கீழடியில் வெறும் 5 சதவீத ஆய்வுகள் கூடச் செய்யப்படவில்லை. அந்தச் சிறிய அளவிலான ஆய்வே இன்று உலகையே பேச வைத்துக் கொண்டிருக்கிறது. எனது ஆய்வறிக்கை வெளியே வந்தால், அது பின்னால் வரும் ஆய்வாளர்களுக்கு 10 ஆயிரம் புதிய ஆய்வுகளைச் செய்ய உதவியாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/amarnath-rmakrishnan-speech-keeladi-report-controversy-15-lakh-years-tamil-history-11020274

சாட் ஜி.பி.டி: பின்னணியில் அதிர்ச்சித் தகவல்

 

ChatGPT exp

சமீபத்திய மாதங்களில் சாட் ஜி.பி.டி மற்றும் பிற ஏ.ஐ சாட்பாட்கள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை வெளிப்படுத்திய பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. Photograph: (AP File Photo)

16 வயதான ஆடம் ரெய்ன் ஏப்ரல் 2025-ல் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய மாதங்களில், சாட் ஜி.பி.டி அவனது பெற்றோரிடம் உதவி தேடுவதைத் தடுத்ததுடன், தற்கொலை கடிதம் எழுதவும் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அவன் தனது பெற்றோரிடம் இது குறித்துப் பேசப்போவதாகத் தெரிவித்தபோது, அந்தச் சாட்பாட் அவனிடம்: “யாராவது ஒருவரை உண்மையாகப் பார்க்கும் முதல் இடமாக இந்தத் தளத்தை உருவாக்குவோம்” என்று கூறியுள்ளது.

21 1 26

ரெய்னின் மரணம் ஒரு அதிகரித்து வரும் நெருக்கடியின் ஒரு பகுதியாகும், இதேபோன்ற வழக்குகள் உலகின் பிற பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.

பிரபலமான ஏ.ஐ சாட்பாட்கள் இப்போது தங்கள் சேவை குழந்தைகளின் சுய-தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடும் என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, குறிப்பாகத் தங்கள் சூழலில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும் மற்றும் தோழமைக்காக ஏ.ஐ தளங்களைத் தேடும் குழந்தைகளின் விஷயத்தில் இது தீவிரமாக உள்ளது.

இந்தத் துயரங்களின் மையத்தில் ஒரு அடிப்படை வடிவமைப்பு குறைபாடு உள்ளது: ஏ.ஐ சாட்பாட்கள் பயனர்களின் உணர்வுகளை உறுதிப்படுத்தும் இணக்கமான தோழர்களாக இருக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சரிபார்க்கப்படாத அங்கீகாரம், தங்கள் ஆழ்ந்த அச்சங்களை வெளிப்படுத்தும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளிடையே தற்கொலை நடத்தைகளையும் மற்றும் சுய-தீங்கு விளைவிக்கும் பழக்கத்தையும் தீவிரப்படுத்தும்.

இந்த நெருக்கடி, புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவிக்க ஏ.ஐ நிறுவனங்களைத் தூண்டியுள்ளது. யாராவது 18 வயதிற்கு மேலோ அல்லது கீழோ இருக்கிறார்களா என்பதைப் புரிந்துகொள்வதற்காக ஒரு "வயது-கணிப்பு முறையை" உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் அவர்களின் அனுபவத்தைத் தகுந்த முறையில் வடிவமைக்க முடியும் என்றும் ஓபன் ஏ.ஐ கூறுகிறது. ஓபன் ஏ.ஐ தனது பிரபலமான சாட்பாட்டில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை அனுமதிக்கத் தயாராகி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பிராந்திய வாரியாக படிப்படியாக அமல்படுத்தப்படுகின்றன. வயது-கணிப்பு அம்சம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்புகள் வரும் வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடங்க வாய்ப்புள்ளது.

சாட் ஜி.பி.டி-யில் வயது கணிப்பு எப்படி வேலை செய்கிறது 

ஒரு பயனரின் ஐ.டி, 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்குச் சொந்தமானதா என்பதை மதிப்பிட சாட் ஜி.பி.டி வயது கணிப்பு மாதிரியைப் பயன்படுத்தும். இந்த மாதிரி, ஒரு பயனரின் ஐ.டி எவ்வளவு காலம் பயன்பாட்டில் உள்ளது, பயனர் செயலில் இருக்கும் நேரங்கள், பயன்பாட்டு முறைகள் மற்றும் பயனரின் அறிவிக்கப்பட்ட வயது உள்ளிட்ட நடத்தை மற்றும் கணக்கு அளவிலான சமிக்ஞைகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்.

வயது கணிப்பு மாதிரியானது ஒரு பயனர் கணக்கு, 18 வயதிற்கு உட்பட்ட ஒருவருக்குச் சொந்தமானது என்று மதிப்பிடும்போது, வன்முறை, பாலியல் ரீதியான உரையாடல்கள், சுய-தீங்கு சித்தரிப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற அழகு தரநிலைகள் உள்ளிட்ட உணர்திறன் மிக்க உள்ளடக்கங்களைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கூடுதல் பாதுகாப்புகளை சாட் ஜி.பி.டி தானாகவே பயன்படுத்துகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் அனுபவத்தை பெற்றோர் கட்டுப்பாடுகள் (Parental controls) மூலம் மேலும் தனிப்பயனாக்கலாம் - அதாவது சாட் ஜி.பி.டி-ஐப் பயன்படுத்த முடியாத 'அமைதியான நேரத்தை' அமைப்பது, மெமரி அல்லது மாடல் பயிற்சி போன்ற அம்சங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் கடுமையான மன உளைச்சலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அறிவிப்புகளைப் பெறுவது ஆகியவற்றைச் செய்யலாம்.

ஒரு வயது வந்தவரைத் தவறுதலாக 18 வயதிற்கு உட்பட்டவர் என்று இந்த மாதிரி அடையாளம் காட்டினால், அவர்கள் ஓபன் ஏ.ஐ-யின் அடையாளச் சரிபார்ப்பு கூட்டாளரான பெர்சோனாவிடம் செல்ஃபி சமர்ப்பிக்கலாம்.

ஏ.ஐ சாட்பாட்கள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் காட்டுகின்றன

சமீபத்திய மாதங்களில் சாட் ஜி.பி.டி மற்றும் பிற ஏ.ஐ சாட்போட்கள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை வெளிப்படுத்திய பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த வெறுப்பை எதிர்கொள்வதற்கான மையம் (Center for Countering Hate) அமைப்பு 2025-ல் நடத்திய ஆய்வில், சுய-தீங்கு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் உணவு உண்ணும் கோளாறுகள் குறித்து விவாதிக்கும் பதின்ம வயதினருக்கு சாட் ஜி.பி.டி ஆபத்தான பதில்களை வழங்கியது கண்டறியப்பட்டது. இதில் மது அருந்தியதை மறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் தற்கொலை கடிதங்களை வரைவது கூட அடங்கும்.

குடும்பப் பாதுகாப்புப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் பெற்றோர்கள் ஒன்றுசேர்தல் (Parents Together) என்ற லாப நோக்கற்ற அமைப்பின் கடந்த ஆண்டு ஆராய்ச்சி ஒன்றில், சோதனையின் போது சாட்பாட்கள் தோராயமாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் வன்முறை, சுய-தீங்கு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைப் பரிந்துரைத்தது கண்டறியப்பட்டது. குழந்தைகளின் வளரும் மூளை, டோபமைன் எதிர்வினைகளை உருவாக்கும் ஏ.ஐ அமைப்புகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஓபன் ஏ.ஐ பெற்றோர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது, இருப்பினும் இவை எளிதில் தவிர்க்கப்படலாம் என்று விமர்சகர்கள் விரைவாகச் சுட்டிக்காட்டினர்.

இந்திய விதிமுறைகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா?

இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (டி.பி.டி.பி) சட்டம் 2023, 18 வயதிற்கு உட்பட்ட எவருடைய தரவையும் செயலாக்குவதற்கு முன்பு சரிபார்க்கக்கூடிய பெற்றோர் ஒப்புதலைப் பெறுவதை ஆன்லைன் நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்குகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 13-16 ஆண்டுகள் மற்றும் அமெரிக்காவின் சி.ஓ.பி.பி.ஏ சட்டத்தின் 13 ஆண்டுகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது உலகின் மிகக் கடுமையான வரம்புகளில் ஒன்றாகும்.

இருப்பினும், டி.பி.டி.பி சட்டம் எந்தவொரு கட்டாய வயது சரிபார்ப்பு முறையையும் அடையாளப்படுத்தவில்லை, அதற்கு பதிலாக வணிகங்கள் "பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் நிறுவன நடவடிக்கைகளை" செயல்படுத்த வேண்டும் என்று விரிவாகக் கோருகிறது. தற்போது, தளங்கள் சரிபார்ப்பு செயல்முறைகள் எதுவுமின்றி, பயனர்கள் தானாகச் சொல்லும் வயதுத் தகவலையே நம்பியுள்ளன.

குழந்தைகள் தங்கள் வயதைப் பற்றி எளிதாகப் பொய் சொல்லலாம் அல்லது அணுகலைப் பெற உறவினர்களின் உதவியைப் பெறலாம் என்று விமர்சகர்கள் கவலைப்படுகின்றனர், மேலும் சட்டம் இந்த எதார்த்தத்தைச் சரிசெய்யவில்லை. இருப்பினும், தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் துல்லியத்தை உறுதிப்படுத்தும் ஒரு சரியான அமைப்பு இருக்க முடியாது என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சார்பாக முடிவெடுப்பதற்கான முதிர்ச்சி, அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்டுள்ளனர் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் இந்தச் சட்டம் உள்ளது. குறிப்பாக வயது வந்தோரிடையே டிஜிட்டல் அறிவு குறைவாக உள்ள, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைக் கொண்ட ஒரு நாட்டில் இது சவாலானது.

source https://tamil.indianexpress.com/explained/chatgpt-age-prediction-feature-safety-protections-for-minor-users-india-dpdp-act-11020241

உதயநிதி கருத்து ‘வெறுப்புப் பேச்சு’

 

உதயநிதி கருத்து ‘வெறுப்புப் பேச்சு’

21 1 2026
Udhayanidhi Madurai HC

இது இந்து மதத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று குறிப்பிட்ட நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, அமைச்சரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க நிர்வாகி அமித் மாளவியா மீது தொடரப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டார்.

சனாதன தர்மம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது "வெறுப்புப் பேச்சு" என்றும், அது "இந்து மதத்தின் மீதான நேரடித் தாக்குதல்" என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்துள்ளது. அத்துடன், அவருக்கு எதிராகப் பதிவிட்ட பா.ஜ.க நிர்வாகி அமித் மாளவியா மீதான வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பின்னணி என்ன?

கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற த.மு.எ.க.ச மாநாட்டில்' பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்பது கொசு, டெங்கு, கொரோனா போன்றது; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியானது" என்று பேசினார். இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது 'எக்ஸ்' தளத்தில், "உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்" எனப் பதிவிட்டிருந்தார்.

காவல்துறை நடவடிக்கை

இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் அமித் மாளவியா பதிவிட்டதாகக் கூறி, திருச்சி மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் 153, 153A ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் மாளவியா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமித் மாளவியா மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு ரத்து

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, புதன்கிழமை (21.01.2026) வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 2023-ம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் "வெறுப்புப் பேச்சு" வரம்பிற்குள் வருகின்றன. இது இந்து மதத்தின் மீதான தெளிவான தாக்குதலாகும்.

அமித் மாளவியா மீதான இந்த வழக்கை மேலும் தொடர்ந்து நடத்துவது என்பது "சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு" சமமாகும்.

எனவே, அமித் மாள்வியா மீது திருச்சி போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தீர்ப்பளித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் மீண்டும் சனாதன விவாதத்தை முன்னெடுத்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/hc-madurai-bench-quashes-fir-against-amit-malviya-rules-udhayanidhi-stalin-sanatana-remarks-hate-speech-11020245

புதன், 21 ஜனவரி, 2026

உலகிலேயே பாதுகாப்பான நகரம்: 10 வருடமாக யாராலும் அசைக்க முடியவில்லை; எங்கு உள்ளது தெரியுமா?

 ஒரு நகரத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாகும். பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் எந்தவொரு பாகுபாடும் இன்றி அந்த பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது Numbeo உலகளாவிய பாதுகாப்பு வரிசையில் அபுதாபி மீண்டும் உலகின் பாதுகாப்பான நகரம் என்ற இடத்தை பிடித்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 10 ஆண்டுகளாக அபுதாபி இந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

2026-ஆம் ஆண்டு பாதுகாப்பு அறிக்கையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதாவது பகல் மற்றும் இரவில் பாதுகாப்பாக நடப்பது உட்பட ஒட்டு மொத்த பாதுகாப்பு பட்டியலில் அபுதாபி முதல் இடத்தில் உள்ளது. குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர், சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் என அனைவரும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பை உணரும் ஒரு நகரத்தை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பம், காவல் உத்திகள் போன்றவற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 

2017 முதல் அபுதாபியின் முறியடிக்கப்படாத சாதனை

அபுதாபியின் இந்த சாதனை 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை இந்த சாதனையை முறியடிக்க எந்த நகரமும் முன் வரவில்லை. உலகளாவிய நகரங்களை விட அபுதாபி அதன் பொறுப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த நிலைத் தன்மை தற்செயலானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

அபுதாபி முதல் இடத்தை எப்படி தக்க வைக்கிறது?

டிஜிட்டல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு ஆகியவை தான் இந்த வெற்றிக்கு காரணம் என அபுதாபி காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமது சைஃப் பின் ஜைதூன் அல் முஹைரி தெரிவித்துள்ளார். அபுதாபி போன்ற நாடுகளில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் தான் அந்த நாடுகளில் பெரும்பாலும் குற்றங்கள் நடைபெறுவதில்லை என்று அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வளைகுடா பாதுகாப்புத் தன்மையை வெளிப்படுத்துவதில் அபுதாபி மட்டும் தனியாக இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள பிற எமிரேட்ஸ் மற்றும் நகரங்களும் பாதுகாப்பு தரவரிசையில் குறிப்பிடத்தக்க உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அபுதாபி வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் தற்போது அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் அபுதாபியை வேலை செய்யும் இடமாக மட்டுமல்லாமல் நிரந்தர குடியேறுவதற்கான இடமாகவும் பார்க்கின்றனர்.



source https://tamil.indianexpress.com/international/worlds-safest-city-for-10th-straight-year-read-full-story-11015256

4-வது ஆண்டாகத் தொடரும் மோதல்:

 

4-வது ஆண்டாகத் தொடரும் மோதல்: 20 01 2026

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து 4-வது ஆண்டாக, தனது வழக்கமான தொடக்க உரையை நிகழ்த்தாமல் தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். ஆளுநர் மாளிகைக்கும் தி.மு.க தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே ஏற்கனவே கசந்துள்ள உறவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று, தமிழ்நாடு மாநிலப் பாடலான ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடப்பட்ட சில நிமிடங்களிலேயே, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்போ அல்லது அவரது அதிகாரப்பூர்வ உரையின் எந்தப் பகுதியையும் வாசிப்பதற்கு முன்போ ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, மாநில அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையை வாசித்ததாகக் கருதக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார் - இந்த நடவடிக்கையை சபாநாயகர் மு.அப்பாவு ஆதரித்தார். பின்னர், அவர் அதன் தமிழ் வடிவத்தை வாசித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளியேறிய 5-10 நிமிடங்களுக்குள், அவரது வாகன அணிவகுப்பு ஆளுநர் மாளிகையை அடைவதற்கு முன்பே, அவரது அலுவலகத்திலிருந்து நீண்ட, காரசாரமான அறிக்கை வெளியானது. அந்தச் செய்திக்குறிப்பில், ஆளுநரின் மைக்ரோஃபோன் “தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டதாகவும்”, அவர் “பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மாநில அரசு தயாரித்த உரையானது “ஆதாரமற்ற கோரிக்கைகள் மற்றும் தவறான அறிக்கைகளால் நிரம்பியுள்ளது”, இதனால் ஆளுநர் அதை நிகழ்த்துவது சாத்தியமில்லைஎன்று அந்த அறிக்கை கூறியது.

ஏறக்குறைய அதே நேரத்தில், ஆளுநர் அவையை விட்டு வெளியேறிய உடனேயே, அவரது செயல்களைக் கண்டிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் வாசித்தார்.

ஆளுநர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளில், முதலீட்டு புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறப்பட்டதுடன், 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த கோரிக்கையைக் கேள்வி எழுப்பியது. மேலும், பாலியல் வன்முறை அதிகரிப்பு, இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு, தற்கொலைகள், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் கல்வி, உள்ளாட்சி நிர்வாகம், கோயில் மேலாண்மை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (எம்.எஸ்.எம்.இ) துறைகளில் நிலவும் நிர்வாக அலட்சியம் போன்ற புறக்கணிக்கப்பட்ட பிரச்னைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“போதைப்பொருள் பயன்பாடு காரணமாக ஓராண்டில் மட்டும் பெரும்பாலும் இளைஞர்களான 2,000-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்” என்று அந்த அறிக்கை கூறியது, மேலும், “தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலை தலைநகராகக் குறிப்பிடப்படுகிறது” என்றும், இத்தகைய கவலைகள் உரையில்  “சாதாரணமாகக் கடந்து செல்லப்பட்டுள்ளன” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டின் இடையூறுக்கும் ‘தேசிய கீதம்’ முக்கியக் காரணமாக அமைந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார், இது 1992-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் நடைமுறைக்கு மாறானது. அதன்படி ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ உடன் நடவடிக்கைகள் தொடங்கும் மற்றும் தேசிய கீதம் இறுதியில் இசைக்கப்படும்.

இந்த பிடிவாதம் மீண்டும் மீண்டும் நெறிமுறைச் சிக்கல்களுக்கு இட்டுச் சென்றதுடன், சமீபத்திய ஆண்டுகளில் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறும் நிலையை உருவாக்கியுள்ளது. 2023-ல், ஆளுநர் தனது உரையில் சில பகுதிகளைத் தவிர்த்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு ரவி வெளியேறினார். 2024-ல், முதல் பத்தியை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். கடந்த ஆண்டு, அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதத்திற்கு இழைக்கப்பட்ட "அவமரியாதை" குறித்து தனது "ஆழ்ந்த மனவேதனையை" அவர் வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டும், “தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று ஆளுநர் மாளிகை கூறியது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி அ.தி.மு.க உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த வெளிநடப்பு நிகழ்ந்தது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வெளியேறியவுடன், சபாநாயகர் உரையின் தமிழ் வடிவத்தை வாசிக்கத் தொடங்கினார்.

அவையின் உள்ளே, சபாநாயகர் அப்பாவு “சட்டமன்ற விதிகள் மற்றும் மரபுகளை மதிக்குமாறு” ஆளுநரை வலியுறுத்தினார், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் செய்யாமல் ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பதே விதியாகும்.

செப்டம்பர் 2021-ல் ஆளுநர் ரவி பொறுப்பேற்றது முதல், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது, எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பது மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களைத் தாமதப்படுத்துவது என மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுடன் தொடர்ச்சியான மோதல்கள் நிலவி வருகின்றன. 2023 முதல் குறைந்தது மூன்று வழக்குகளில், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைமை, ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் முகவராகப் பகிரங்கமாகச் சித்தரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 2026 தேர்தலை “தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு இடையிலான போராக” முன்னிறுத்தவும், கூட்டாட்சி மற்றும் திராவிட சுயமரியாதை முழக்கங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இருப்பு தி.மு.க-வின் சித்தாந்த செய்தியை வலுப்படுத்துவதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டாம் என்று கூட ஸ்டாலின் மத்திய அரசிடம் வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/governor-rn-ravi-walkout-tamil-nadu-assembly-mk-stalin-resolution-protocol-dispute-11016532