வியாழன், 1 ஜனவரி, 2026

போட்டித் தேர்வுகள் பாடத்திட்டத்தில் மாற்றமா? குழப்பங்களுக்கு

 


TNPSC Parbhakar

தற்போதைய பாடத்திட்டத்தின்படியே தேர்வுகள் நடைபெறும் என்று உறுதியளித்துள்ள அவர், வருடாந்திர அட்டவணையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான முக்கிய காரணத்தையும் விளக்கியுள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பாடத்திட்டம் மாற்றப்படாது என்றும், தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தின்படியே தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் மத்தியில் எழுந்த சந்தேகம்:

சமீபத்தில் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்தது. இதில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட 6 முக்கிய தேர்வுகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கமாக இடம்பெறும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இந்த முறை குறிப்பிடப்படவில்லை. இதனுடன் பாடத்திட்ட மாற்றமும் இருக்கலாம் என்ற வதந்திகள் பரவியதால் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் அளித்த விளக்கங்கள்:

பாடத்திட்டத்தில் மாற்றமில்லை: பாடத்திட்ட மாற்றம் குறித்து எழுந்த தகவல்களை மறுத்த எஸ்.கே.பிரபாகர், "2026-ம் ஆண்டுக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளும் தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, தேர்வர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி தற்போதைய சிலபஸ் அடிப்படையில் பயிற்சியைத் தொடரலாம்," எனக் கூறினார்.

காலிப் பணியிடங்கள் ஏன் அறிவிக்கப்படவில்லை? 

பணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசுத் துறைகளில் நிதியாண்டின் இறுதியில் (மார்ச் மாதம்) தான் காலிப் பணியிடங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பு நடைபெறும். சில துறைகளில் தேதிகள் மாறுபடும். அந்தந்த ஆண்டு காலி இடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுவதால், எண்ணிக்கை குறைவாகத் தெரியலாம்," என விளக்கினார்.

அறிவிப்பின் போது முழு விவரம்: தேர்வுக்கான முறையான அறிவிக்கை (Notification) வெளியாகும் போது, எந்தெந்த பதவிகளுக்கு எத்தனை இடங்கள் உள்ளன என்ற முழு விவரமும் வெளியிடப்படும். இடங்கள் அதிகரித்தால் 'பிற்சேர்க்கை' மூலம் கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தேர்வர்களுக்கு அறிவுரை:

தேர்வர்கள் வருடாந்திர அட்டவணையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பொதுவான தேர்வுகள் மற்றும் சிறப்புத் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டுத் தயாராக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tnpsc-chairman-prabhakar-no-change-in-syllabus-for-competitive-examinations-10962587

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: ரூ.8.40 கோடியில் வைகை குடிநீர் திட்டத்திற்கு டெண்டர்

 

Madurai AIIMS Hospital

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2021 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த வளாகத்திற்குத் தேவையான தடையற்ற குடிநீர் வசதியை உறுதி செய்ய புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில், வைகை ஆற்றுப் படுகையிலிருந்து மருத்துவமனைக்கு நீர் கொண்டு வர ரூ. 8.40 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. வைகை படுகையிலிருந்து கரடிக்கல் பகுதி வழியாக பிரம்மாண்டமான ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் மூலம் எய்ம்ஸ் வளாகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 2.61 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டுள்ள இந்தப் பணிகளை அடுத்த 9 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் முதற்கட்ட கட்டிடப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதனைத் தொடர்ந்து, சுமார் 2.31 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.



source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-aiims-hospital-drinking-water-project-10962702

கோவையில் பயங்கரம்: வடமாநில தொழிலாளர்களுக்கு கத்திக்குத்து

 

fight coimbatore 2

டீ கடையில் இருந்த ஊழியர்களும் , பொதுமக்களும் வட மாநில இளைஞர்களை மீட்டனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்த வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் குத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த  15ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.எம்.எஸ் பேக்கரியில் டீ குடிக்க சென்றனர்.  

அப்பொழுது அங்கு டீக்கடையில் இருந்த இருவர் , இவர்களிடம் தமிழில் கேள்வி கேட்கவே , வடமாநில இளைஞர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. அதனால், அருகில் இருந்த கட்டிடத்தை காட்டி அங்கு வேலை செய்வதாக சைகை மொழியில் பேசிய நிலையில்,  அந்த இருவரும் தகாத வார்த்தையில் பேசி வட மாநில தொழிலாளர்கள் இருவரையும் தாக்கியதுடன்  கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து டீ கடையில் இருந்த ஊழியர்களும் ,  பொதுமக்களும்  வட மாநில இளைஞர்களை மீட்டனர். 

வடமாநில இளைஞர்களுக்கு மிரட்டல் விடுத்து விட்டு அந்த  இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில்  வடமாநில தொழிலாளர்கள் கோவிந்த் கோல்ட் மற்றும் ராகேஷ் ஆகிய  இருவரும் அனுமதிக்கபட்டனர்.  

இந்நிலையில் இந்த தாக்குதல்  சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்து 3 வாரத்திற்கு மேலாகியும், சிசிடிவி காட்சிகள் போன்றவை கிடைத்தும் தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிய முடியாமல் கருமத்தம்பட்டி போலீசார் திணறி வருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-karumathampatti-bakery-attack-north-indian-workers-cctv-viral-10962577

டன் கணக்கில் குவிக்கப்பட்ட கோல்ட்; இந்த நாடு தான் முதலிடம்

 1 01 2026

gold

தங்கம் உலகின் நீடித்த சேமிப்புகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது. மத்திய வங்கிகள் தங்கத்தை சாதனை அளவில் தொடர்ந்து குவித்து வருவதால் 2025-ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் என்ற வராறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தை அதிக அளவு கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜெர்மனி, 3-வது இடத்தில் இத்தாலி மற்றும் 8-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்தை பாதுகாத்து வைத்துள்ளது. இதன் மூலம் அந்நாடு உலகில் மிக அதிக அளவு தங்கத்தை வைத்திருக்கும் நாடாக முன்னிலையில் தொடர்ந்து உள்ளது. இந்த வரிசையில் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க மாற்றமின்றி நிலைத்திருக்கிறது. இதில் பெரும்பாலான தங்கம் ஃபோர்ட் நாக்ஸ் (Fort Knox) மற்றும் நியூயார்க் மத்திய வங்கி (Federal Reserve Bank of New York) ஆகிய இடங்களில் பாதுகாக்கப்படுகிறது.
தற்போதைய தங்க விலைகளின் அடிப்படையில், அமெரிக்காவின் இந்த தங்க கையிருப்பின் மதிப்பு $1 டிரில்லியனைக் கடந்துள்ளது. இது அமெரிக்க டாலரின் மீது உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான மூலோபாய சொத்தாக செயல்படுகிறது.

மற்ற நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு

ஐரோப்பாவின் முக்கிய பொருளாதார நாடுகளான ஜெர்மனி (3,352 டன்), இத்தாலி (2,452 டன்) மற்றும் பிரான்ஸ் (2,437 டன்) ஆகியவை ஒன்றிணைந்து சுமார் 8,200 டன் தங்கத்தை வைத்துள்ளன. இது அமெரிக்காவின் மொத்த தங்க கையிருப்புக்கு நிகராக உள்ளது. 

சீனாவின் தங்க கையிருப்பு 2019-ஆம் ஆண்டில் 1,948 டன்களிலிருந்து 2024-ஆம் ஆண்டில் 2,280 டன்களாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இது அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களில் இருந்து விலகி யுவானை சர்வதேச அளவில் வலுப்படுத்தும் நோக்கில் பீஜிங் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா 876 டன் தங்கத்தை கையிருப்பாக வைத்துள்ளது. இதர வளர்ந்து வரும் சந்தைகளான துருக்கி (595 டன்) மற்றும் போலந்து (448 டன்) போன்ற நாடுகளும், பணவீக்கம், நாணய மாற்றம் தொடர்பான அதிர்வுகள் மற்றும் புவியியல் அரசியல் நிச்சயமற்ற நிலைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தங்களின் தங்க கையிருப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளன.

நாடுகளின் தங்க பட்டியல்

அமெரிக்கா - 8,133.5

ஜெர்மனி - 3,351.6

இத்தாலி - 2,451.9

பிரான்ஸ் - 2,437.0

ரஷ்யா - 2,331.1

சீனா - 2,279.6

சுவிட்சர்லாந்து - 1039.9

இந்தியா - 876.2

ஜப்பான் - 846.0

நெதர்லாந்து - 612.5

துருக்கி - 595.4

போலாந்து - 448.2

போர்ச்சுக்கல் - 382.7

உஸ்பெகிஸ்தான் - 382.6

சவுதி அரேபியா - 323.1



source https://tamil.indianexpress.com/international/which-country-hold-the-most-gold-reserves-read-full-story-10961223