வெள்ளி, 31 ஜனவரி, 2025

ஆப்பிரிக்காவில் தொடரும் வன்முறை – உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு !

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு பொதுமக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசார் மற்றும் கிளர்ச்சியளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஐ.நா அமைப்பை சேர்ந்த வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வரும் நிலையில் 1 லட்சம் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில் வன்முறையில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/violence-continues-in-africa-death-toll-rises-to-17.html

Related Posts:

  • பைதுல்மா நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி)அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்தஉடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை.ஏனென்றால் நபி (ஸல்) அவர்க… Read More
  • வித்ர் தொழுகை வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்… Read More
  • Quran & Hadis நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண்குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது.அப்போது (கொஞ்சம்) தண்ணீர் க… Read More
  • ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தைநபிமொழிகள் சிறப்பித்துக் கூறுகின்றன. ஆனால்முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாகஎண்ணுகின்றனர்,நபிகளா… Read More
  • உதிரப் போக்கு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அபூஹுபைஷின் மகள் ஃபாத்திமா வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு தொடர் உதிரப் போக்கு உள்ளது. நான் ஒரு நாளும் சுத்தமாவதேய… Read More