வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஜின்களையும், மனிதர்களையும் இரட்சிக்கக்கூடியவர்!


انت غوث الثقلين *انت زين الحرمين

ومنير الملوين *اجعلنا مقبلينا

ஜின்கள், மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக் கூடியவர் நீங்களே! மக்கா,மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாகத் திகழ்பவர் நீங்களே! வானம், பூமிகளைப்பிரகாசிக்கச் செய்பவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்!

முட்டாள்தனமான இந்த வரிகளைக் கண்ட பின்பும் யாரேனும் இதை ஆதரிக்க முடியுமா? மனித இனத்தை மட்டுமின்றி ஜின்களையும் இவர் தாம் இரட்சிப்பாராம்! வானம் பூமியை இவர் தாம் பிரகாசிக்கச் செய்கிறாராம்! இது நாம் மேலே எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.


انت اتقى الاتقياء *انت اصفى الاصفياء

صرت تاج الاولياء *آتنا فتحا مبينا

இறையச்சமுடையவர்களிலெல்லாம் அதிக இறையச்சமுடையவர் நீங்களே!சிறந்தவர்களிலெல்லாம் மிகச் சிறந்தவர் நீங்களே! இறை நேசர்களின் கிரீடமாக நீங்கள் மாறிவிட்டீர்கள். எங்களுக்குத் தெளிவான வெற்றியை வழங்குங்கள்!

இறையச்சம் என்பது உள்ளத்தின் பாற்பட்ட ஒன்று. யாருக்கு இறையச்சம் உள்ளது? எந்த அளவுக்கு இது உள்ளது? என்பதையெல்லாம் இறைவன் மட்டுமே அறிவான் என்ற சாதாரண உண்மைக்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானியின் இறையச்சத்துக்கு நற்சான்று வழங்குகின்றது இந்தக் கவிதை.

நபிமார்களை விடவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி அதிக இறையச்சமுடையவர் என்ற கருத்தையும் இந்தக் கதை தருகின்றது. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை மதிக்கின்ற எந்த முஸ்லிமாவது இதை ஒப்புக் கொள்ள முடியுமா? மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும். தெளிவான வெற்றியை வழங்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியவன் யார்? நபிகள் நாயகம் (ஸல்) கூட பல சந்தர்ப்பங்களில் தோற்றுள்ளனர்.

என்று இறைவன் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட இந்தஅதிகாரத்தை தான் வழங்கவில்லை என்று இறைவன் கூறும் இந்த வசனத்துடனும், மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களுடனும் இந்தக் கவிதை நேரடியாக மோதுகின்றது.

انت مبدع النوادر* مظهر ما فى الضمائر

 مخبر ما فى السرائر* رحمة دنيا ودينا

அரிதான அற்புதமான நிகழ்ச்சியை நிகழ்த்தக் கூடியவர் நீங்களே. பிறரது உள்ளங்களில்உள்ளவற்றை வெளிப்படையாக அறிவிக்கக் கூடியவர் நீங்களே.

மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதை தக்கசான்றுகளுடன் விளக்கியுள்ளோம். அதற்கு முரணாக இந்தக் கவிதை அமைந்துள்ளது.

كن لنا حرزا كنينا *كن لنا كهفا منيعا

عن بليات شفيعا *فى خطيات وسيعا

من عطيات تفينا

எங்களுக்குப் பாதுகாப்பு அரணாக ஆகி விடுங்கள். எங்களுக்கு துன்பங்களைத் தடுக்கும் குகையாகஆகி விடுங்கள். தவறுகளுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் எங்களுக்கு வழங்கக்கூடியஅருட்கொடைகளில் தாரளமாக நடந்து கொள்ளுங்கள்!

எல்லா அதிகாரங்களும் அப்துல் காதிர் ஜீலானியிடம் குவிந்து கிடப்பதாக முஹ்யித்தீன்மவ்லிதின் பாடல்கள் கூறுகின்றன. அல்லாஹ்விடம் எந்த அதிகாரமும் இல்லை. அல்லாஹ்என்று ஒருவன் தேவையில்லை என்ற அளவுக்கு அப்துல் காதிரே அல்லாஹ்வாக்கப்படுகின்றார்.

இத்தகைய நச்சுக் கருத்துக்களைத் தான் பொருள் தெரியாமல் வணக்கமாகக் கருதி இந்தச்சமுதாயம் பாடிக் கொண்டிருக்கின்றது. இதைப் படிப்பதால், இதை நம்புவதால் அல்லாஹ்வின்கோபத்திற்கு ஆளாக நேருமா? அல்லாஹ் அருள் கிடைக்குமா? நடுநிலையுடன் மவ்லிதுஅபிமானிகள் சிந்திக்கட்டும்.

பொதுவாக மவ்லிதுகளும் குறிப்பாக முஹ்யித்தீன் மவ்லிதும் திருக்குர்ஆனுடனும், நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுடனும் நேரடியாக மோதும் வகையில் அமைந்துள்ளன.அதைத் தெளிவான சான்றுகளுடன் நாம் அறிந்தோம். இது போன்ற நச்சுக் கருத்தைக் கொண்டமுஹ்யித்தீன் மவ்லிதின் மற்றொரு வரியைப் பாருங்கள்.

وهوالذي من كان نادى باسمه *فى شدة ينجو بغير تنجم

بل انه لم قط يفعل فعله *الا باذن الهه المتكلم

அவர் (அப்துல் காதிர் ஜீலானி) எத்தகையவர் என்றால் யாரேனும் கஷ்டத்தின் போது அவரைஅழைத்தால் அவர் உடனடியாக ஈடேற்றம் பெறுவார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட ஒருவரை அழைத்தால் அவர் ஈடேற்றம்அளிப்பார் என்பதும், அவரை அழைக்கலாம் என்பதும் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கைகளையே தகர்க்கக் கூடியவையாகும். இறைவன் அல்லாதவர்களை அழைப்பது பற்றிதிருக்ககுர்ஆன் கூறுவதைக் கவனியுங்கள்.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களேபடைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள்உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள்உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும்உங்களைப் பொறுத்த வரை சமமானது. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோஅவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களைஅழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:191,194)

அல்லாஹ்வை விடுத்து நல்லடியார்களையும், மகான்களையும் அழைத்துப் பிரார்த்தித்து வந்தமக்களிடம் தான் அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே என்று இறைவன் கூறுகிறான்.

எத்தனைப் பெரிய மனிதர் என்றாலும் அவர்கள் இறைவனுக்கு அடிமைகள் தாம் என்பதையுமஅடிமைகளிடம் பிரார்த்திக்க முடியாது என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ்தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்!அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

(அல்குர்ஆன் 22:73)

அழைத்துப் பிரார்த்தனை செய்யப்படுபவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அப்துல்காதிர் ஜீலானி உட்பட யாராக இருந்தாலும் ஈயைக் கூட அவர்களால் படைக்க முடியாது என்றுஇவ்வசனத்தில் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரைஅழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களைஅழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்றுவைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்கமுடியாது. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வேதேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன் 35:13,14,15)

அப்துல் காதிர் ஜீலானி உட்பட எந்த மனிதராக அல்லாஹ்விடம் தேவையாகக் கூடியவர்கள் தாம்.தேவையாகக் கூடியவர்களிடம் பிரார்த்திக்க முடியாது என்பதற்காகவே இங்கே இதை இறைவன்கூறுகிறான். மேலும் இறந்தவர்கள் எந்தப் பிரார்த்தனையையும் செவியேற்கும் நிலையில்இல்லை எனவும் கூறுகிறான்.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும்வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன் 46:5)

அல்லாஹ்வை விடுத்து எவரையும் அழைக்க முடியாது. அழைப்பதை அவர்கள் செவியுறமுடியாது. அழைப்பதை அறியவும் முடியாது. அணுவளவு அதிகாரமும் அவர்களுக்குக்கிடையாது என்றெல்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்யும் இவ்வசனங்களுடன் இந்த மவ்லிதுவரி நேரடியாக மோதுவதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த காபிர்கள் சாதாரண நேரத்தில் அல்லாஹ்அல்லாதவர்களிடம் பிரார்த்தித்து வந்தனர். ஆனால் அவர்களுக்குத் தாங்க முடியாதபெருந்துன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்து வந்தனர். கஷ்டமானநேரத்தில் அவரை அழைத்தால் ஈடேற்றம் பெறுவார் என்ற வரிகள் மக்கத்துக் காபிர்களின்கொள்கையை விட மோசமான கொள்கைக்கு அழைப்பதை மவ்லிது அபிமானிகள் சிந்திக்கவேண்டும்.

இதோ மக்கத்துக்குக் காபிர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தைஉரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும்அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறுஎவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன் 31:32)

 'உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது அந்த நேரம் வந்து விட்டால் அல்லாஹ்அல்லாதவர்களையா அழைக்கிறீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில்சொல்லுங்கள்!' என்று கேட்பீராக! மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணைகற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோஅதை நீக்கி விடுகிறான்.

(அல்குர்ஆன் 6:40,41)

கடுமையான துன்பங்கள் ஏற்படும் போது மட்டுமாவது மக்கத்துக் காபிர்கள் ஏக இறைவனைமட்டும் நம்பி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றுகளாகும். இதேகருத்தை 39.8, 10.12, 39.49, 27.62, 7.189, ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

மக்கத்துக் காபிர்களின் கொள்கையை விட மோசமான கொள்கையை முஸ்லிம்களிடம்திணிக்கக் கூடிய இந்த மவ்லிதை முஸ்லிம்கள் ஆதரிக்க முடியுமா? இதைப் படிப்பதால்அல்லாஹ்விடம் நன்மை கிடைக்குமா? இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு கூட அறியாதமூடர்களால் எழுதப்பட்ட இந்த மவ்லிதுக்காக நமது ஈமானை இழந்து விடலாமா?

இந்த மவ்லிதில் உள்ள இன்னும் பல அபத்தமான பாடல்களைப் பாருங்கள்.

யார் தமது தேவைகளுக்காக அவரை (அப்துல் காதிர் ஜீலானியை) வஸீலாவாக ஆக்கிக்கொள்வார்களோ அவர்களின் தேவைகள் குல்சும் கடலளவு இருந்தாலும் நிறைவேற்றப்படும்.

இஸ்லாத்திற்குள் இணை வைக்கும் கொள்கையை உருவாக்கியவர்கள் அதைநியாயப்படுத்துவதற்காக வஸீலா எனும் ஆயுதத்தைக் கையில் எடுப்பது வழக்கம். வஸீலாதேடுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளான். நாங்கள் அவ்லியாக்களை வஸீலாவாகத் தான்பயன்படுத்துகிறோம். எனவே இது இணை வைத்தலில் சேராது என்று வாதிடுகின்றனர்.

இறந்து போனவர்களிடம் பிரார்த்திப்பதும் இன்னாரின் பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பதும் தான் வஸீலா என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே வஸீலாபற்றி அறிந்து கொண்டால் தான் இந்த வரிகளில் உள்ள அபத்தத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.

வஸீலா தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளது உண்மை தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ்விடம் கண்டிப்பாக வஸீலா தேட வேண்டும் என்பதிலும் இரண்டாவதுகருத்துக்கு இடமில்லை. வஸீலாவை மறுப்பவன் அல்லாஹ்வின் வேதத்தையேமறுத்தவனாவான் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வஸீலாவுக்கு இவர்கள் தரும் விளக்கத்தில் தான் நமக்கு ஆட்சேபனை உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒருவஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றிபெறுவீர்கள். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கிஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றிபெறுவீர்கள்.

(அல்குர்ஆன் 5.35)

இது தான் வஸீலா தேடுமாறு கட்டளையிடும் வசனம். இன்னாரின் பொருட்டால் இதைத் தாஎன்று பிரார்த்திப்பது தான் வஸீலாவாகும் என்ற கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதைஅறிந்து வஸீலாவின் சரியான பொருள் என்ன என்பதை அறிவோம்.

இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டவர்களே என்று இறைவன் அழைக்கிறான். இந்தஅழைப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை இனி உலகம் அழியும்வரை உள்ள அத்தனை மூஃமீன்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்இந்த அழைப்பில் முதலில் அடங்குவார்கள். இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தவசனத்தை ஆராய்வோம்.

மூஃமீன்களே என்று இறைவன் அழைத்துவிட்டு அவர்கள் செய்ய வேண்டிய சில கடமைகளை இவ்வசனத்தில் கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று ஆரம்பமாகக்கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுகின்ற இந்தக் கடமையை அனைத்து முஸலிம்களும்நிறைவேற்றியாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம்அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வை அவ்வாறேஅதிகம் அஞ்சினார்கள்.

இந்தக் கட்டளையில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. எந்த மூஃமீனும் அல்லாஹ்வைஅஞ்சாதிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டவரல்லர்.

அடுத்ததாக அல்லாஹ்விடம் வஸீலாவைத் தேடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.அல்லாஹ்விடம் வஸீலாத் தேடும் இந்தக் கடமையையும் அனைத்து மூஃமீன்களும்நிறைவேற்றியாக வேண்டும். மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின் பால் அதிகமதிகம் வஸீலாத் தேடியாக வேண்டும். இன்னொருவரின்பொருட்டால் இதைத் தா என்று இறைவனிடம் கேட்பது தான் வஸீலா என்றால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் யார் பொருட்டால் தமது தேவைகளைக் கேட்டார்கள்? யார் பொருட்டாலும்அவர்கள் கேட்கவில்லை என்றால் வஸீலாத் தேடுங்கள் என்ற கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?

இந்தப் பெரியாரின் பொருட்டால் இதைத் தா என்று கேட்கின்றனர். இதன் மூலம் வஸீலாத்தேடுங்கள் என்ற கட்டளையை நிறைவேற்றி விட்டதாக நம்புகின்றனர். எந்தப் பெரியாரும்மூஃமீன்களில் ஒருவர் தாமே அவரும் கூட வஸீலாத் தேட வேண்டுமே? அவர் யார் பொருட்டால்தேடினார்? இதைச் சிந்தித்தால் வஸீலாவுக்கு இவர்கள் கூறும் விளக்கம் அபத்தமானது என்பதைஅறியலாம்.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும்நெருக்கமானவர்களே. தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனதுஅருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின்வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(அல்குர்ஆன் 17:57)

சாதாரண மக்கள் அல்லாஹ்வின் பால் வஸீலாத் தேடுகிறார்களோ இல்லையோஅல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான அடியார்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் பால் வஸீலாத்தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை இவ்வசனம் கூறுகிறது.

எல்லா மூஃமீன்களும் குறிப்பாக நல்லடியார்களும் அதிலும் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்களும் தேடக்கூடிய வஸீலா என்பது எது? நிச்சயமாக இவர்கள் கூறக்கூடிய வஸீலா அன்று.