சனி, 3 ஜனவரி, 2015

காவல்துறையா அல்ல காவித்துறையா...??


அதிகம் பகிர்ந்து இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்...!!
தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு, பண பரிமாற்றம், ஆள் சேர்ப்பு, வன்முறையில் ஈடுபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் மேக்திக்கும் எந்தவித தொடர்புமில்லை
-காவல்துறை அறிவிப்பு...!!
ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக பெங்களூருவில் கைதான மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
பெங்களூருவை சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆள் சேர்த்ததாக பெங்களூரு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பெங்களூரு குற்றப்பிரிவு இணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த 20 நாட்களாக மேக்தியை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு, பண பரிமாற்றம், ஆள் சேர்ப்பு, வன்முறையில் ஈடுபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே போலீஸ் காவல் முடிந்து மேக்தி நேற்று பெங்களூரு மாநகர 9-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேக்தியின் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு கோரவில்லை. இதனால் மேக்திக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒரு குற்றமும் செய்யாமல் ட்விட்டர் கணக்கை மட்டுமே வைத்து ஒரு அப்பாவியை கைது செய்து அவரது வாழ்க்கையை சீரழித்த காவல்துறை...காரணம் அவர் ஒரு முஸ்லிம்..!!
இதே ட்விட்டர் கணக்கில் முஸ்லிம் பெயரில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தவுடன் அதிர்ச்சி அடைந்த காவல்துறை வேக வேகமாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்கிறது பின்னர் அவர் இந்து என தெரிந்தவுடன் கைது செய்த வேகத்தில் விடுதலை செய்கிறது...!!!
இது காவல்துறையா அல்ல காவித்துறையா...??
குண்டு வைத்தது நான் தான் என்று ஒப்புக்கொண்ட ஒரு நபரை விடுதலை செய்துவிட்டு இன்று எந்த தவறும் செய்யாத ஒரு நபரை சிறையில் அடைக்கும் நீதி எந்த வகையில் நீதி...???