புதன், 21 ஜனவரி, 2015

Hadis

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "உன் சகோதரன்
அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும்
அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருக்கும்
நிலையிலும் அவனுக்கு உதவி செய்''
என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே!
அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள்
உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள்
எப்படி உதவி செய்வோம்?'' என்று கேட்டனர். நபி (ஸல்)
அவர்கள், "அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம்
செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ
அவனுக்குச் செய்யும் உதவி)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புஹாரி (2444)