வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

###### ஜியாரத் என்றால் என்ன ? ஏன் ? எப்படி ? ####


''ஜியாத்தின் இன்றைய நிலை!!!''
ஜியாரத் என்ற செயல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் தான் இதில் யாருக்கும் கருத்து வேருபாடு கிடையாது. இன்று முஸ்லீம்கள் பெரும்பாலும் ஜியாரத் என்ற சொல்லை விளங்கிய அளவுக்கு அதை ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர்.
அதனால் தான் ஜியாரத்தின் பெயரால் இன்று பல விதமான அனாச்சாரங்கள் நடைபெறுகிதை பார்க்கிறோம்.
'''ஜியாரத் என்றால் என்ன?'''
ஜியாரத் என்பது உலகில் பிறந்து வாழ்ந்து மரணித்தவர்களுக்கும் அதாவது மண்ணரை வாசிகளுக்கும் மரணிக்க இருக்கிற நமக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் (துஆ) செய்வதாகும்.
இங்கு கவணிக்கவேண்டிய முக்கியமான விசயம் என்னவேனில் மண்ணறைவாசி முஸ்லீமாக இருப்பின் அவருக்கும் நமக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் (துஆ) செய்ய வேண்டும்.
மண்ணரைவாசி காஃபிராக இருந்தால் அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்ய கூடாது.
நமக்கு மட்டும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைச்(துஆ)செய்து கொள்ளவேண்டும். இதிலிருந்து தெறிவது என்வென்றால் முஸ்லீமகள்; மற்றும் காஃபிர்கள்; மண்ணறைப்பக்கம் சென்றால் அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் (துஆ)செய்வதாகும்.
''ஜியாரத் ஏன்?''
இஸ்லாமிய மார்க்கத்தில் ஜியாரத் என்ற செயல் மூலம் இரண்டு நோக்கங்கள் வேண்டப்படுகிறது,
ஒன்று செயல்கள்(மரணித்த) முடிந்து மண்ணறையை அடைந்த நம் மூஃமினான சகோதரனுக்கு அவர்களின் நற்ச்செயல்களின் கூலிகள் கிடைக்கவும், இவர்களுக்கு பிறகு வாழ்ந்து வரும் நாம் குளப்பம் அடையாமல் இருக்கவும், இரண்டு நாமும் மரணித்து மண்ணறைக்கு செல்வோம் உலக வாழ்க்கை நிலையற்றது, மறுமை வாழ்க்கை நிலையானது, ஆகவே இந்த உலக வாழ்வில் இஸ்லாமிய ஷரியத்தை பேணி நடந்து நம்முடைய மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய நமக்காகவும் அவர்களுக்காகவும் நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
'''ஜியாரத் எப்படி செய்ய வேண்டும் ?'''
நம் மூஃமினான சகோதரனின் மண்ணறைக்கு(கப்ரு)சென்றால், கீழ்காணும் காணும் பிரார்த்தனையை தான் அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
“மண்ணறை (கப்ரு) இருக்கின்ற மூஃமின் மூஸ்லீம்களே அல்லாஹ்வின் சாந்தியும் ஈடேற்றமும் என்றும் உங்களுக்கு உண்டாகட்டும், இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேருவோம்.
முற்காலங்களில் மரணமடைந்த எதிர்காலத்தில் மரணமடைய போகின்ற அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாளிக்கட்டும்.
எங்களுக்கும் உங்களுக்கும் சுகத்தை அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
யா அல்லாஹ் இவர்களின் கூலியை நீ பாழக்கிவிடதே இவர்களுக்கு பிறகு நீ எங்களை நீ குழப்பங்களில் தள்ளிவிடாதே என்றும் பிரார்த்தனை(துஆ)செய்வார்கள்”
முஸ்லீமல்லாதரின் மண்ணறைக்கு(கப்ரு)சென்றால் அந்த மண்ணறைவாசிக்காக நாம் அல்லாஹ்விடம் பாவமண்ணிப்பு கோரவும் மற்றறும் பிரார்த்தணைச்செய்யகூடாது.
கீழ் காணும் முறையில் தான் நம்முடைய பிரார்த்தனை அமையவேண்டும், நாமும் நிலையாக வழப்பேவதுமில்லை, நாமும் மரணமடைபவர்கள் தான்.
அவர் ஈமான் கொள்ளாமல் மரணமடைந்து விடட்டார்கள், நாம் ஈமான் கொள்ள கிருபைச்செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்ந்து நாமும் இஸ்லாமிய ஷரியத்தை பேணி ஈமானுடன் மரணிக்க அல்லாஹ்விடம் நமக்காக பிரார்த்தனைச்(துஆ)செய்யவேண்டும்.
'''ஜியாரத்தின் இன்றைய நிலை !!!'''
இன்று ஜியாரத் என்ற பெயரால் உலகில் பிறந்து வாழ்ந்து மரணித்து மண்ணறையை(கப்ரு)களில் அடங்கி இருக்கும் பெரியார்கள்,நல்லடியார்கள். வலியுல்லாக்கள்,நாதக்கள்,ஆகியோரின் மண்ணறைக்கு சென்று தம்முடைய தேவைகளை கேட்டு மன்றாடுவது,அவர்களின் பெயரால் நேர்ச்சைகள் செய்வது,மேலும் அவர்களின் மண்ணறையில் தங்குவது போன்ற செயல்கள் மூலம் மண்ணறையில் அடங்கி இருப்பவர்களின் அன்பை பெற்று அல்லாஹ்விடம் நெருக்கத்தை அடையலாம் அதன் மூலம் தன் தேவைகளை எளிதில் பெற்றுவிடலாம் என்று முயற்ச்சிக்கிறார்கள்.
இவர்களிடம் இவ்வகை செயல்பாடுகள் ஷிர்க் என்று சொன்னால் நாங்கள் மண்ணறைவாசிகளிடமா கேட்கிறோம் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய வேண்டி தான் இவர்களிடம் கேட்கிறோம்.
அல்லாஹ்வின் சமீபத்தை அடையவே இவர்களை நாடி செல்கிறோம் என்கிறார்கள் இவ்வகை செயல்பாடுகள் குர்ஆன் சுன்னா பார்வையில் முஷ்ரிக்களின் செயல்காளாகவும்.
நபி(ஸல்)அவர்களின் தூதை ஏற்பதற்க்கும், மறுப்பதற்க்கும், உள்ள வேறுபாடு இந்த செயல்கள் ஆகும் மேலும் இஸ்லாத்தின் அடிப்படையில் இவ்வகை செயல்கள் ஷிர்க் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்று ஜியாரத் செய்கிறோம் என்று சொல்லக்கூடிய பெரும்பாலோர் எப்படி ஜியாரத் செய்வது என்றே விளங்காமல் மேற்கண்ட செயல்கள் தான் ஜியாரத் என்று விளங்கி உள்ளார்கள்.
இவர் தன் தாய் தந்தைக்கு அவர்களுக்கு பிரார்தனைச்(துஆ)செய்வது கிடையாது உண்மையில் பரிதாபம் தான்.
'''முஸ்லிமான முன்னோர்களை முஷ்ரிக் ஆக்கிய செயல்கள்!!!'''
மக்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட்டு வந்தனர் காலம்ச்செல்ல செல்ல மார்க்க அறிவு குறைவாழூம் ஷைத்தானின் தீயவழிகாட்டலாலும் அதாவது தீமையை அழகானதாக காட்டி மக்களை மயக்கும் ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் மக்கள் சிக்கினார்கள்.
இதோ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
“ஆதம் நபி முதல் நூஹ் நபி வரை பத்து நூற்றாண்டடுகள் இடைவெளியுண்டு இந்த காலங்களில் அனைத்து மக்களும் முற்றிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிப்பட்டு வந்தனர் என்றிலிருந்து சமூகத்தில் வாழந்து மரணித்து (செயல்கள் முடிந்து போன) மண்ணறைக்கு சென்றுவிட்ட நல்லடியார்கள்.
ஸாலிஹ_ன்கள், பெரியார்களின் மண்ணறைகளுக்கு அளவு கடந்த மரியாதை செய்ய ஆரம்பித்தனர் அன்று முதல் இணைவைப்பு (ஷிர்க்) தலைதூக்கியது.அதனால் முஷ்ரிக்குகள் என்று ஒரு சாரார் வெளிப்பட்டனர்.
நூஹ் நபியின் காலத்து மக்கள் தங்களிடையே வாழ்ந்து மரணித்த நல்லடியார்கள், பெரியார்கள், ஆகியோருக்கு மண்ணறைகளை கட்டி உயர்த்தி அங்கு தங்குவது, அவர்களின் உருவச்சிலைகளை நிறுவி அல்லாஹ்விடம் செய்யவேண்டிய நேர்ச்சை மற்றும் பிரார்த்தனை(துஆ)க்களை இவர்கள் அந்த மண்ணறை வாசிகளிடம் கேட்டனர் எனவே இவர்கள் முஷ்ரிக்கானார்கள்.
இரண்டாவதாக நபி இப்ராஹிம(அலை); அவர்களின் சமூகமாகும் இந்த சமூகத்தில் வந்தவர்கள் தான் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் சமூகமும் இரண்டு வகையான செயல்களில் ஈடுப்பட்டனர் ஒன்று தங்களிடையே வாழ்ந்து மரணித்த நல்லடியார்கள்,பெரியார்களின் சிலைகளை செதுக்கி அதற்க்கு வழிபாடு செய்துவந்தனர் இரண்டு மேலும் இவர்கள் சூரியன் சந்திரன் நட்ச்சத்திரங்கள் வழிபட்டனர் இந்த தீய செயல்களை ஒழிக்கவே நபி இப்ராஹிம்(அலை)அவர்கள் பாடுபட்டார்கள்.
அல்லாஹ்வை வணங்க ஆலயம் அமைத்தார்கள்,சிலைகளை உடைத்தார்கள்,ஹஜ் செய்ய அழைப்பு விட்டார்கள் என்பதையெல்லம் நாம் குர்ஆனில் காணலாம்.
மேலும் அவர்களின் சமூகத்தையே முதலாவதாக முஸ்லீம்கள் என்று அல்லாஹ் பெயர் சூட்டினான். ஆனால் அவர்களின் வழித்தோன்றல்கள் ஏன் முஷ்ரிக் ஆனார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறுத்தார்களா இல்லைவே இல்லை அல்லாஹ்வை நெருங்க அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர்களும் காட்டி தராத புதிய வழியை கையான்டார்கள் என்பதை தான் காணமுடிகிறது.
காலங்கள் உருண்டோடின இப்ராஹிம்(அலை) மற்றும் இஸ்மாயில்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களான மக்கத்து குரைஷிகள் மார்க்க அறிவு குறைவாழ் நேர்வழியை தவறவிட்டு தீயவழியில் செயல்பட்டனர். இவர்களுக்கு ஷைத்தான் தீய வழிமுறையை அழகாக்கி காட்டினான் இவர்கள் இறை ஆலயத்தை பராமரித்தார்கள் மேலும் ஹஜ் செய்தார்கள்.
சட்டங்களை மாற்றினார்கள், ஒன்று தங்களிடையே வாழ்ந்து மரணித்த நல்லடியார்கள்,பெரியார்களின் சிலைகளை செதுக்கி அதற்க்கு வழிபாடு செய்துவந்தனா இதற்க்கு பெயர் அஸ்னாம் என்று அறியப்பட்டது, இரண்டு தங்களிடையே வாழ்ந்து மரணித்த நல்லடியார்கள்,பெரியார்கள் தங்கிய இடங்கள் மற்றும் அவர்கள் அடக்கமாகியுள்ள மண்ணறைகளில் போய் வழிபாடு செய்து வந்தனர் இதற்க்கு பெயார் அவ்ஜான் என்று அறியப்பட்டது.
யார் சிலைகளை உடைத்தார்களோ அவர்களுக்கு(இப்ராஹிம்(அலை) இஸ்மாயில்(அலை) ஆகியோர்க்கு சிலைசெய்ததோடு இந்த சமூகத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் பெரியார்களுக்கு சிலைகளையும் அவர்களின் மண்ணறைகளையும் தங்கி தரிசிப்பது தங்கள் தேவைகளை அவர்களிடம் கேட்பது போன்ற செயல்களை செய்து வந்தார்கள் என்பதை குர்ஆன் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
மொத்ததில் நன்மைக்கு பதில் தீமையில் இருந்தார்கள் என்பதை அறிகிறோம். இந்த சூழலில் தான் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக இந்த மக்களிடம் அனுப்பப்பட்டார்கள்.
அன்னார் அந்த சமூகத்தில் தங்கள் தூதை எடுத்து சொன்னபோது நடைபெற்ற உரையாடலை குர்ஆன் ஒளியில் பார்ப்போம்.
உங்களுக்கு வானத்திலிருந்து பூமியிலிருந்து உணவளிப்பவன் யார்?
செவிப்புலன்கள்மீதும் பார்வைகளின்மீதும் சக்தியுடையவன் யார்?
இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிர் உள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன யார்?
என்று (நபியே) நீர் கேளும் உடனே அவர்கள் அல்லாஹ் தான் என்று பாதிலளிப்பார்கள். அவ்வாறாயின் அவனிடம் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா? என்று (நபியே) நீர் கேட்பீராக (யூனுஸ் 10:31)
நீங்கள் அறிந்திருந்தால் இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச்சொந்தம்) என்று (நபியே) நீர் கேட்பீராக அல்லாஹ்வுக்கே (சொந்தம்) என்று அவர்கள் கூறுவார்கள் (அவ்வாறாயின்) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
(முஃமினூன் 23:84,85)
ஏழூ வானங்களுக்கும் இறைவனும் மகத்தான அர்ஷீக்கும் இறைவனும் யார்?என்று (நபியே) நீர் கேட்பீராக அல்லாஹ்வே என்று அவர்கள் சொல்வார்கள் (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்க மாட்டீர்களா? என்று (நபியே) நீர் கூறுவிராக!(முஃமினூன் 23:86,87)
எல்லாப்பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? யுhர் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாகவும் ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்) என்று (நபியே) நீர் கேட்பீராக அதற்கவர்கள் அல்லாஹ்வுக்கே என்று கூறுவார்கள்(உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்? என்று(நபியே) நீர் கேட்பீராக (முஃமினூன் 23:88,89)
மேலும் (நபியே) நீர் இவர்களிடத்தில் வானங்களையும், ப+ம்யையும் படைத்துச் சூரியனையும், சந்திரனையும் வசபடுத்தியிருப்பவன் யார்? என்று கேட்டால் அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் அவ்வாறாயின் அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள் (அல் அன்கப+த் 29:61)
இன்னும் அவர்களிடம் வானத்திலிருந்து நீரை இறக்கி பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை அது(காய்ந்து)மரித்தப்பின் உயிர்பிப்பவன் யார்? என்று நீர் கேட்டால் அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள் (அதற்க்கு நீர்) அல்ஹம்துலில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்
(அல் அன்கப+த் 29:63)
தங்களுக்கு நன்மையோ, தீமையே செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள் இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை என்று கூறுகிறார்கள். (நபியே, இவர்களிடம்) நீர் கேளும்: வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவையை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன் என்று கூறும் (யூனுஸ் 10:18)
மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்கள் வாயிலாக நபி(ஸல்) அவர்களின் தூது பற்றியும், அதை ஏற்காத மக்கத்து குறைஷிகளின் இறைக் கோட்பாடு பற்றியும், அவர்களை முஷ்ரிக் ஆக்கிய செயல் பற்றியும், தூதுத்துவத்தை ஏற்பதற்க்கும் மறுத்ததற்க்கும் உள்ள வேறுபாடு பற்றியும், நாம் அறியமுடிகிறது.
அவர்கள் அல்லஹ்வை அல்லாஹ் என்றே உச்சரித்தார்கள், மனிதனின் இயற்கை தேவையான பார்வைப்புலன் மற்றும் செவிப்புலன் மீது சக்தியுடையவன் என்றும், அவனே உணவளிப்பவன், இறந்தவற்றிலிருந்து உயிர் உள்ளதையும், உயிர் உள்ளதிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் மேலும் அவனே பாதுகப்பவன் அவன் இல்ல வேறு பாதுகாவலன் இல்லை,எல்லா பொருட்கள் மீதும் ஆட்சி செலுத்துபவன், சூரியன் மற்றும் சந்திரனை வசப்படுத்தியிருப்பவன், இறந்த பூமியை நீரைக்கொண்டு உயிர்ப்பிப்பவன், என்று நம்பிய இவர்கள் அல்லாஹ்வின் சமிபமாக செல்லவும் அல்லாஹ்விடம் தம் தேவைகளை மன்றாட்டம் செய்து பெற்றுதரவே மேற்கண்ட செயல்களை செய்வதாக கூறுகிறார்கள்.
'இவர்களிடம் மேற்சொன்ன வசனங்கள் சொல்லப்பட்டால் இவர்கள் இது முஷ்ரிக்குகளுக்கு சொல்லப்பட்டது.முஸ்லிம்களுக்கு அல்ல என்று சொல்கிறார்கள் .'
இவர்கள் சிந்திக்க வேண்டும் மக்காவில் அன்று வாழ்ந்த மக்கள் யார், குரைஷிகள் யார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நபி இப்ராஹிம் (அலை) இஸ்மாயில்(அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் இல்லையா அவர்களின் வழித்தோன்லைத்தான் முஸ்லிம் என்று பெயர் சூட்டினான்.
மேற்சொன்ன செயல்கள் செய்ததன் மூலம் தான் அவர்களை முஷ்ரிக்குகள் என்று அல்லாஹ் அறிவித்தான்.
மேற்கண்ட செயல்களை அல்லாஹீவின் தூதர் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சமீபமாக செல்லவும், சிபாரிசு செய்யவும் அவ்ஸான் மற்றும் அஸ்னாம் நாடுவதை மறுத்தார்கள்.
அதன் காரணமாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை அந்த மக்கள் மறுத்தார்கள். எனவே இந்த செயல் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் தூதை ஏற்பதற்க்கும் மற்றும் மறுப்பதற்க்கும் உள்ள வேறுபாடாக இருக்கிறது.
'''மனிதன் மரணமடைவான்''
மனிதன் பிறந்தால் நிச்சயமாக மரணமடைவன் அது நபியாகட்டும் வலியாகட்டும் நாதக்கள் ஆகட்டும் பெரியார்கள் ஆகட்டும் எல்லோரும் மரணம் அடைபவர்கள்.இரணமும் மரணமும் வந்தடைந்தே தீரும் நபியே நீரும் மரணிப்பவர்தான்.
இங்கு நாம் கவணிக்கவேண்டிய ஒரு செய்தி நபிகளார் மரணம் அடைந்த போது மரணச்செய்தி பரவிய உடன் அதை கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்று சொன்னால் அவர்களின் தலையை கொய்து விடுவேன் என்று சூழூரைத்தார்கள் அப்போது அங்கு வந்த அபுபக்கர் (ரலி) அவர்கள் பெருமானாரின் உடலை பார்த்துவிட்டு யார் பெருமானாரை வணங்கிகொண்டு இருந்தார்களோ அவர்களுக்கு சொல்கிறேன் பொருமானார் மரணமடைந்து விட்டார்கள் என்று அறிவிப்பு செய்தார்கள் .29.57