ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

வெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு :



நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு பிச்சைகார கும்பல் அரசாங்கம் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ..
அந்த திட்டம் தான் 12.36 % சேவை வரி .
அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் ,
ரூ . 100 க்கு - ரூ .12.36.
ரூ. 1000 க்கு - ரூ . 126.36
ரூ. 10000 க்கு - ரூ. 1236.
ரூ. 100000 க்கு - ரூ. 12360.
சேவை வரியாக செலுத்த வேண்டும் ..
நம்ம அரசாங்கம் நமக்கு எந்த சேவை பண்ணி கிளிச்சானுங்கனு இந்த சேவை வரி கேக்குரானுங்கனு .தெரியல.
வெளிநாடுகளில் சம்பாதிக்க வரும் அனைவருமே தன்னுடைய குடும்ப தேவைகளுக்கு தான் இங்கு வருகிறோம். அதுவும் கூலி வேலை செய்யும் சகோதரர்கள் எவ்வளவு பாதிக்க படுவார்கள்.
நாம் இங்கிருந்து அனுப்பும் பணத்திற்கு நாம் ஏற்கனவே இங்கு சேவை வரியாக 14 முதல் 20 ரியால் , திர்ஹம் கொடுக்கிறோம் . இந்த சேவை வரி மூலம் நமது அரசாங்கத்திற்கு ஒரு வருடத்திற்கு 350 முதல் 400 கோடி வரை கிடைக்கிறது .. இருந்தாலும் நமது அரசாங்கம் இது போதவில்லை இவர்களிடம் இருந்து மேலும் பிடுங்கவேண்டும் இந்த சேவை வரி திட்டத்தை அமல் படுத்தி உள்ளது.
இவர்களுக்கு சுவிஸ் வங்கியில் லட்ச கோடி கணக்கில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க வக்கில்லை .. வெளிநாடுகளில் இருந்து மாதம் 5000 , 10000 அனுப்பும் நபர்களிடம் இருந்து சேவை வரியாக பிச்சை கேட்கிறார்கள்.
இதை அதிகமாக ஷேர் பண்ணுங்கள்.. இதை பற்றி இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் ...
அனைவரும் ஒன்றிணைந்து இந்த சேவை வரியை நீக்குவோம்..
இதற்கு லைக் போடுவதை விட அதிகமாக ஷேர் செய்யுங்கள் .
நன்றி.