வெள்ளி, 29 ஜூலை, 2016

தாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது

தாய் பத்திரம் தொலைந்து போய்விட்டது,பத்திரம் நகல்கள் ஏதும் இல்லை,பத்திர எண் கூட தெரியாது,என்ன செய்வது. எப்படி இந்த நிலத்திற்கு / இடத்திற்கு தாய் பத்திரம் வாங்குவது.
சுமால் ஹிண்ட்டு மாதிரி சொல்றேன்.ஏன் நா இப்போ லாம் பெருசா எழுதவே சோம்பேறி தனமாக உள்ளது.
டாக்குமெண்ட் நம்பர் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.வில்லங்கம் போட்டு பார்த்தால்,வில்லங்கத்தில் டாக்குமெண்ட் நம்பர் வரும்.அதை வைத்து டாக்குமெண்ட் நகல் போட்ட பின் ,தாய் பத்திர நகலுக்கு விண்ணப்பிக்கலாம். தாய் பத்திரம் தொலைந்து போனது குறித்து காவல் துறையில் புகார் செய்து ரசீது வாங்கிய பின் ,தின நாளிதழ் செய்தி தாளில் பத்திரம் கானாமல் போனது குறித்து விளம்பரம் செய்த பின்,இந்த ரசீதுகள் அனைத்தும் வைத்து விண்ணப்பத்துடன் இணைத்து உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.