செவ்வாய், 26 ஜூலை, 2016

குழந்தைகளுக்கான சிறப்பு இல்லம் துவக்க விழா

ராதா கிருஷ்ணா அன்பாலயா தொண்டு நிறுவனத்தின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு இல்லம் துவக்க விழா
புதுகை, ஜுலை.25-
புதுக்கோட்டை டவுன், ராஜகோபாலபுரம், பெரியார் நகரில் அமைந்துள்ள ராதா கிருஷ்ணா அன்பாலயா தொண்டு நிறுவனத்தின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு இல்லம் துவக்க விழா நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட வளர் இளம்பருவ சிகிச்சை மையம் அன்பு தனபாலன் வரவேற்புரையாற்றினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை பொறுப்பேற்றார். மாவட்ட கலெக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகர்மன்றத்தலைவர் ராஜசேகரன், நகராட்சி ஆணையர் ராஜாராம், 39வது வட்ட நகர்மன்ற உறுப்பினர் ரூபாராணி, வைத்தீஸ்வரன் கிளினிக் இராமதாஸ், மாமலர் மருத்துவமனை மாரிமுத்து, தில்லைமலர், மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிர்வாக உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கமலம்மாள், சலீம், ரகு, ஆறுமுகம், முத்துக்குமார், செல்வராஜ், மதியழகன், ஜெயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். ராதா கிருஷ்ணா அன்பாலயா தொண்டு நிறுவன இயக்குனர் ராதா நன்றியுரை கூறினார்.