சனி, 30 ஜூலை, 2016

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் நான்காவது காவிாிப்படுகைப் பாதுகாப்பு பயணம் இன்று (20-07-2016) திருவாரூாில் தொடங்கியது. பரப்புரைப் பயணக் குழுவில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிாியர். த. செயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா செயராமன், கோவி. அசோகன், கோவி. இரவி சந்திரன், ந. விஜயராகவன், மாாி பன்னீர் செல்வம், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. செ. பாண்டியன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோ. யோபு ஞானப்பிரகாசம், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள், சிவகுமார், இராஜா,ஹுசைன், தாஹி மற்றும் பால்ராஜ், இராதா ரவிசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் தெய்வ சிகாமணி தலைமையேற்றார், வணிகர் சங்க பொதுச் செயலாளர் திரு. குமரேசன் பயணத்தை தொடங்கி வைத்தார். ஜவுளி ரெடிமேட் சங்கத் தலைவர் சாதிக் அலி. சகாரா சூப்பர் மார்க்கெட் திரு. சாக்கர்,பூக்கடை சங்கத் தலைவர் இரயில் பாஸ்கர் முன்னிலை வகித்தார் பரப்புரைப் பயணம் தொடங்கியது.