Home »
» போலீசின் உழைப்பு, புத்திக் கூர்மை, புலனாய்வுத் திறன் இவற்றைப் பாராட்டவும் கடமை உள்ளது.
ஒரு வார தீவிர புலனாய்வுக்குப் பிறகு ஸ்வாதியை கொலை செய்த ராம்குமாரை போலீஸ் கைது செய்துள்ளது..போலீசின் மெத்தனம், அலட்சியம், பொறுப்பற்றத்தனம் என்று வசைபாடி கண்டிக்க உரிமை உள்ள நமக்கு போலீசின் உழைப்பு, புத்திக் கூர்மை, புலனாய்வுத் திறன் இவற்றைப் பாராட்டவும் கடமை உள்ளது.
தனிப் படைகள் அமைத்து.. இரவு பகலாக தீவிரமாக உழைத்து..ஒரே ஒரு வீடியோ காட்சியை வைத்துக் கொண்டு அத்தனை சாத்திய வழிகளிலும் இறங்கி..அடையாள அட்டைகள் உள்ள பான் கார்ட், ஓட்டர்ஸ் கார்டு, ஆதார் கார்ட், டிரைவிங் லைசென்ஸ் என்று அத்தனை டேட்டா பேஸ்களிலும் தேடி..
சூளைமேடு பகுதியில் உள்ள செல்போன் டவரில் கடைசியாக பிங் ஆன ஸ்வாதியின் செல்போன் சிக்னல் வைத்து லட்சக்கணக்கான மொபைல் அழைப்புகளை ஆராய்ந்து.... சூளைமேடு பகுதியில் வீடு வீடாக விசாரித்து ஒரு மேன்ஷன் காவலாளி மூலம் தலைமறைவான ராம்குமார் அடையாளம் காட்டப்பட்டு.. அவன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தி.. அவன் செங்கோட்டை அருகில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து.. அங்கு விரைந்து..அவனை மடக்கி.. தற்கொலைக்கு முயன்ற அவனை உயிருடன் பிடித்து..தன் காலரை நிமிர்த்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போலீசுக்கு விரைப்பான ஒரு ராயல் சல்யூட்.
ஒரே ஒரு கேள்வி: ஆக.. ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையான திறமையான புத்திசாலித்தனமான தமிழ்நாடு போலீஸ் நினைத்தால் எந்தக் குற்றத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்தானே? பல பிரபலமான கொலைகளில் வருடக் கணக்காக துப்பறிந்துகொண்டே டே டே.. இருப்பதால் இதையும் கேட்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு விஷயம் உண்மை என்று நிரூபனமாகிறது. அரசியல் தலையீடுகள் இல்லை என்றால் தமிழ்நாடு போலீசால் எந்த வழக்கையும் கண்டுபிடிக்க முடியும்!
Related Posts:
ம.பி. முதல்வர் கமல்நாத் ராஜினாமா - மக்களின் வெற்றி : ஜோதிர் ஆதித்ய சிந்தியா கமல் நாத் ராஜினாமா செய்ததையடுத்து, சட்டசபை, காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னரே, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்.
Tamil News
… Read More
மார்ச் 31 வரை தமிழக எல்லைகள் மூடல்: ஞாயிற்றுக்கிழமை அரசு பஸ்கள் முழுமையாக ரத்து
அதன்படி, 22.3.2020 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எதுவும் இயங்காது என்பதையும், மெட்ரோ ரயில்களும் அன்றைய...… Read More
நாளை சுய ஊரடங்கு.. எவையெல்லாம் இயங்கும்?
நாளை சுய ஊரடங்கு.. எவையெல்லாம் இயங்கும்?
வணிக வளாகங்கள், திரையங்குகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், கடைகள், உணவகங்கள் திறக்கப்படாது.
Web Desk | Mar… Read More
சிட்டுக்குருவிகளுக்கான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் சூழ்நிலை உருவாகிஉள்ளது
ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்.
முன்பு வீடுகளுக்குள் கூட்டமாக வந்து செல்லும் சிட்டுக்குருவி, இன்று அழிந்து வரும் பறவையினங்கள… Read More
அறிவியல் ஆதாரமற்ற தகவலை வீடியோவாக வெளியிட்டதால் ரஜினிகாந்தின் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
அறிவியல் ஆதாரமற்ற தகவலை வீடியோவாக வெளியிட்டதால் ரஜினிகாந்தின் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்த… Read More