-------------------------------------------------------------
காயம் பட்டு ஆம்புலன்ஸில் அனுமதிக்கப்பட்ட ஒரு காஷ்மீர் இளைஞனை ஐந்து ராணுவத்தினர் ரவுண்டு கட்டி அடிக்கின்றனர். இந்த அளவு தனது நாட்டு மக்களிடம் ஒரு ராணுவம் நடந்து கொண்டால் அந்த நாட்டின் மீது பற்றும் மதிப்பும் எவ்வாறு எற்படும். இந்த தருணத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் வஞ்சக வலையில் இந்த இளைஞர்கள் வீழ்ந்தால் அது மிகப் பெரும் அச்சுறுத்தல் அல்லவா? எல்லைகளை மூடி அந்த மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டாமா? ராணுவத்தை திரும்ப அழைத்து அங்கு அமைதி திரும்பிட ஒரு அரசு முயல வேண்டாமா?
பிஜேபி அரசிடம் இந்த நாட்டை நாம் ஆள ஐந்து வருடம் அனுமதி கொடுத்ததற்கு பலனாக ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பிஜேபிக்கு வாக்களித்த மக்கள் இந்த உண்மையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.