திங்கள், 6 பிப்ரவரி, 2017

சட்டப்பேரவைத் தேர்தல்: கோவாவில் 83%, பஞ்சாபில் 70% வாக்குகள் பதிவு

கோவா, பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ‌
கோவாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் கோவாவில் நடைபெற்ற தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் மோதல்கள் நடைபெற்றதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாபை பொறுத்தவரை மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க., சிரோண்மணி அகாலிதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம் 1,145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related Posts:

  • நபிகள் நாயகத்துக்கு சூனியம்...? சூனியம் என்று பொருள் படும் ஸிஹ்ர் என்ற சொல் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டே நாம் தெளிவான முடிவுக்கு வந்து வ… Read More
  • மோடியை விட தரம் தாழ்ந்த ஏக இறைவனின் திருப்பெயரால்.... இஸ்லாத்தில் இடஒதுக்கீடு என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதில் ஷம்சுதீன் காஸிமி குத்பா… Read More
  • Money rate Top 10 Currencies   By popularity                  … Read More
  • முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு ச… Read More
  • “முஸ்லிம்களை கொல்ல வேண்டும்; குண்டு வீசி கொல்ல வேண்டும்; வெடிகுண்டு கிடைக்காவிட்டால் நாங்களே வெடி குண்டு தருகின்றோம்; அல்லது வெடிகுண்டுகளை தய… Read More