வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

'எம்ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கினார் தீபா

'எம்ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கினார் தீபா

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை இன்று தொடங்கியுள்ளார்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.

24/2/2017, சென்னை தி.நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பேரவையின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியதால் தாம் புதிய இயக்கத்தை தொடங்கியதாக தெரிவித்தார். 

தமிழக மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தை மீட்டு ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என்றும் தீபா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய தீபா, ஆர்.கே.நகர் தொகுதியில் தாம் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதால் இடைத்தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். 

ஓ.பி.எஸ்ஸுடன் இணைவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும், பேரவையின் பொருளாளராக தாம் செயல்படுவேன் என்றும் கூறினார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/24/2/2017/deepa-began-new-movement-called-mad