வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

தமிழகத்தின் இந்தாண்டு நிதிநிலை அறிக்கை பற்றி நிதியமைச்சர் ஜெயக்குமார்


சமூக பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தின் இந்தாண்டு நிதிநிலை அறிக்கை இருக்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் புகைப்பட கண்காட்சியை நிதியமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மீனவர்களுக்கு காப்பீடு தொகை மூலம் 130 கோடி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் நிதிநிலை அறிக்கை சமூக நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரையரைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/24/2/2017/about-years-state-budget-finance-minister-jayakumar