செவ்வாய், 30 ஜனவரி, 2024

கர்நாடகாவில் காவிக்கொடி ‘அகற்றம்’:கலவரத்தை தூண்டுவதாக சித்தராமையா குற்றச்சாட்டு

 29 01 2024

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் காவி கொடியை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துபா.ஜ.க.,வின் கர்நாடக பிரிவு பாதயாத்திரை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில்பா.ஜ.க மற்றும் சங்பரிவார்களின் திட்டமிடப்பட்ட செயலின் விளைவுதான் இந்த பிரச்சனை என்று முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

கெரகோடு கிராம பஞ்சாயத்து வழங்கிய அனுமதி கடிதத்தை ட்வீட் செய்த முதல்வர் சித்தராமையா, "விதிகளை மீறி தேசியக் கொடிக்கான கம்பத்தில் அனுமன் கொடியை ஏற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தற்செயல் நிகழ்வு அல்ல" என்று ட்வீட் செய்துள்ளார்.

ஜனவரி 18ஆம் தேதியிட்ட அனுமதி கடிதத்தில்தேசியக் கொடி மற்றும் மாநிலக் கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றலாம் என்றும்மதஅரசியல் கொடியை அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில்மாண்டியாவில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க தலைவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை என சித்தராமையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கிராமத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக்இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்றார். பாதயாத்திரை நடத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். தத்தா பீடம் போராட்டம் எந்த வழியில் நடந்ததோஅதே வழியில் அதை முன்னெடுப்போம்,” என்றும் அசோக் கூறினார். தத்தா பீடம் என்பது சிக்கமகளூருவில் உள்ள ஒரு கோவிலைக் குறிக்கிறதுஇது 90 களில் ஒரு வகுப்புவாத கலவரத்தைத் தொடர்ந்து சர்ச்சையின் மையமாக மாறியது.

கொடியை அகற்றும் போது பக்தர்களுக்கும்போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து போலீஸார் அவர்களைத் தாக்கியதாக அசோக் குற்றம் சாட்டினார். இச்சம்பவத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும்ஜே.டி.எஸ் உடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அசோக் கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/saffron-flag-removed-in-mandya-bjp-to-intensify-protest-conspiracy-to-create-communal-tensions-says-karnataka-cm-siddaramaiah-2405503

Related Posts:

  • சிறந்த நிர்வாகத்தை இந்த புள்ளிவிபரங்களின் படி மோடியை விட சிறந்த நிர்வாகத்தை தமிழகத்தில் கலைஞரும், பீகாரில் நிதீஷ்குமாரும் கொடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த நிர்வாகத்… Read More
  • Jobs (16/05/2013) Ahmed Ali Our Organization is a leader in events andexhibitions production in the Middle East basedin Jeddah, Saudi Arabia.Job OpportunitySALES MANAG… Read More
  • கூச்சலும் குழப்பமும் ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது க… Read More
  • விபத்து 17/09/2013 துவரங்குறிச்சி: அரசு டவுன் பஸ்ஸூம், டாடா இண்டிகா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை… Read More
  • வேட்பாளராக  மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ள பிஜேபி யை கரும்புலி செம்புளி குத்தி கழுதையில் ஏற்றும் காலம் வந்துவிட்டது. இது வரை பிஜேபி வெற்றி பெற்ற த… Read More