செவ்வாய், 23 ஜனவரி, 2024

எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரம்: 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

 

sasa

 எல்லை தாண்டி மீன்  பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள்  6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக  கூறி இலங்கை கடற்படையினர்  சிறைப்பிடிக்கும்  சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கச்சத்தீவு, நெடுத்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடம்  இருந்த 2 படகுகளையும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன்  கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் ராமெஷ்வரத்தை சேந்தவர்கள் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் பெற்றோர், அவர்களை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வெண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/srilankan-army-arrested-6-fisherman-2396852