சனி, 27 ஜனவரி, 2024

ஜனநாயகம்- சட்டங்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்: டி.ராஜா

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க திருச்சிக்கு வந்த டி. ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று ஆட்சிக்கு வந்த மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தந்தாரா?

மோடி ஆட்சியில் பாராளுமன்றம் நிலைகுலைந்து போயுள்ளது. ஜனநாயகத்தை அழித்தொழித்து பாசிஸ்ட் ஆட்சியை நிலைநிறுத்தும் சூழல் உள்ளது.

நாம் இந்தியாவை, ஜனநாயகத்தை, குடியரசு சட்டங்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதை பார்த்து பாஜக பயந்து ED, CBI மூலம் அச்சுறுத்த பார்க்கிறது.

நாடு முழுவதும் உள்ள மக்கள், இந்தியா கூட்டணியை வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். இந்தியா கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சினைகள் பேசித் தீர்த்துக் கொள்ளும் பிரச்சினைதான்.

அரசியல் நிலைமை எல்லா மாநிலங்களிலும் ஒரே போன்று இருக்காது. இன்றைய சூழலில் மக்கள் விழிப்புடன் உள்ளனர்.

இவ்வாறு டி.ராஜா பேசினார்.

செய்தியாளர் க. சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/d-raja-said-that-we-are-in-a-position-to-save-democracy-and-laws-2402428