புதன், 24 டிசம்பர், 2025

விசா இல்லாமல் 59 நாடுகளை ரவுண்டு அடிக்கலாம்

 

வெளிநாடு செல்வது என்பது முன்பு பலருக்கும் ஒரு பெரிய கனவாக இருந்தது. ஆனால், தற்போது நாம் நினைத்தால் விசா இல்லாமலேயே வெளிநாடு சென்றுவிடலாம். ஆமாம், இந்தாண்டு பல நாடுகள் இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் நாடுகளை விசா இல்லாமல் சுற்றிப்பார்க்க அனுமதியளித்துள்ளது. ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2025-ன் படி, இந்தியர்கள் 59 நாடுகளை விசா இல்லாமல் சுற்றி பார்க்கலாம். மலேசியா, மாலத்தீவு, தாய்லாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இந்தியர்களை விசா இல்லாமல் தங்களை நாடுகளை சுற்றி பார்க்க அனுமதிக்கிறது. மியான்மர், இலங்கை, கத்தார் போன்ற நாடுகள் வருகையின் போது (visa-on-arrival)  விசாவை வழங்குகிறது. மேலும்,  இந்தியர்கள் விசா இல்லாமல் சுற்றி பார்ப்பதற்காக பல நாடுகள் தங்கள் கதவுகளை திறந்தே வைத்துள்ளது. 

விசா இல்லாத நாடுகள் (Visa free countries)

இந்தியர்கள் விசா இல்லாமல் 59 நாடுகளை சுற்றிப் பார்க்கலாம். இதனால் விசாவிற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் என்ற தேவையில்லை. மேலும், நேரமும் மிச்சமாகும். விசா இல்லாமல் பயணிக்கும் சில நாடுகளில் நீங்கள் சில வாரங்கள் மட்டுமே தங்க முடியும் மற்றும் பல நாடுகளில் கடுமையான விதிகளும் இருக்கும். 

வருகை விசா

வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டிற்கு வந்த பிறகு பெறுவது ஆகும். அதாவது, வருகை விசா உள்ள நாடுகளுக்கு சென்றதும் முதல் வேளையாக நீங்கள் வருகை விசா கவுண்டருக்கு செல்ல வேண்டும். அதன்பின்னர், விசா விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். தொடர்ந்து, உங்கள் பாஸ்போர்ட், டிக்கெட், ஹோட்டல் புக்கிங் ஆகிய ஆவணங்களை கொடுக்க வேண்டும். விசா முத்திரையை பெற்ற பின்னர் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம்.

விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்கும் நாடுகளின் பட்டியல்

  • அங்கோலா
  • பார்படோஸ்
  • பூட்டான்
  • பிரிட்டீஸ் விர்ஜின் தீவுகள்
  • குக் தீவுகள்
  • டோமினிகா
  • பிஜி
  • கிரெனடா
  • ஹைதி
  • ஜமாய்கா
  • ஈரான்
  • கஜகஸ்தான்
  • கென்யா
  • கிரிபட்டி
  • மக்காவ்
  • மடகாஸ்கர்
  • மலேசியா
  • மொரீசியஸ்
  • மிக்ரோனேசியா
  • மொன்செராட்
  • நேபால்
  • நியுவே
  • பிலிப்பைன்ஸ்
  • ருவாண்டா
  • செனகல்
  • செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
  • செயின்ட் வின்செண்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  • தாய்லாந்து
  • டிரினிடாட் மற்றும் டோபாகோ
  • வனுவாட்டு
  • வருகை விசா நாடுகளின் பட்டியல்

    • போலிவியா
    • புருண்டி
    • கம்போடியா
    •  கேப் வெர்டே தீவுகள்
    •  கோமரோஸ் தீவுகள்
    • ஜிபூட்டி
    •  எத்தியோப்பியா
    •  கினி-பிசாவ்
    • இந்தோனேஷியா
    • ஜோர்டான்
    • லாவோஸ்
    • மாலத்தீவு
    •  மார்ஷல் தீவுகள்
    • மங்கோலியா
    • மொசாம்பிக்
    • மியான்மர்
    •  நமீபியா
    • பாலாவ் தீவுகள்
    • கத்தார்
    •  சமோவா
    • சியாரா லியோன்
    • சோமாலியா
    •  இலங்கை
    • செயின்ட் லூசியா
    • தான்சானியா
    • திமோர்-லெஸ்டே
    • துவாலு
    • ஜிம்பாப்வே
    • செய்ஷெல்ஸ் - இந்த நாட்டிற்கு எலக்ட்ரானிக் டிராவல் விசா (Electronic Travel Authority) மூலம் செல்லலாம்.


source https://tamil.indianexpress.com/international/which-59-countries-can-indian-passport-holders-travel-visa-free-details-10940774

அசாமில் கலவரம்: ஐ.பி.எஸ் அதிகாரிகள் காயம், கடைகளுக்குத் தீவைப்பு; இணைய சேவை துண்டிப்பு

 

Assam Violence

அசாமில் கலவரம்: ஐ.பி.எஸ் அதிகாரிகள் காயம், கடைகளுக்குத் தீவைப்பு; இணைய சேவை துண்டிப்பு

அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து, செவ்வாய்க் கிழமை மாலை முதல் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கேரோனி பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 38 போலீசார் காயமடைந்துள்ளனர்.

வன்முறை பின்னணி என்ன?

கர்பி பழங்குடியின அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் எல்லைக்கு உட்பட்ட அரசு மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறி குடியேறியுள்ள பீகார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அக்கோரிக்கை. இதனை வலியுறுத்தி மேற்கு கர்பி ஆங்லாங்கின் பெலங்பி பகுதியில் கடந்த 2 வாரங்களாக 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திங்கட்கிழமையன்று, உண்ணாவிரதம் இருந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்காக போலீசார் வலுக்கட்டாயமாக குவஹாத்திக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

திங்கட்கிழமை தொடங்கிய மோதல், செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் சந்தைப் பகுதியில் இருந்த கடைகளுக்குத் தீ வைத்தனர். கடைகளிலிருந்து சிலிண்டர்களை வெளியே இழுத்துப் போட்டு வெடிக்கச் செய்ததாகவும், அம்புகள் மற்றும் கற்களை கொண்டு போலீசாரைத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த அசாம் டிஜிபி ஹர்மீத் சிங் கூறுகையில், நான் மக்களிடம் நேரடியாகப் பேசச் சென்றேன். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாரை இருபுறமிருந்தும் தாக்குகிறார்கள். கடைகளைச் சேதப்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது சிலிண்டர்களை வெடிக்கச் செய்கிறார்கள். வன்முறை மூலம் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றார்/

அரசின் நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை

வன்முறை பரவாமல் தடுக்கவும், வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கவும் உள்துறை அமைச்சகம் இணைய சேவையை உடனடியாக முடக்கியுள்ளது. முன்னதாக, மாநில அமைச்சர் ரனோஜ் பெகு போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட போராட்டக்காரர்கள் ஒப்புக் கொண்டனர்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில், கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும், அமைச்சர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் வன்முறை வெடித்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


source https://tamil.indianexpress.com/india/violence-worsens-in-assams-karbi-anglong-ips-officers-injured-shops-set-on-fire-internet-snapped-10941934

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை; கோவையில் கைகளை கட்டி, கண்களை மூடி செவிலியர்கள் நூதன போராட்டம்

 


Nurses 2

கோவையில் எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட  செவிலியர்கள் கைது செய்யபட்டது பெரும் கண்டனங்களுக்கும் உள்ளானதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எம்.ஆர்.பி செவிலியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அதன்படி கோவையிலும் எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாள் தோறும் இரவு பனியையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில செவிலியர்கள் அவர்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Nurses protest

இந்நிலையில் 6 வது நாளான இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்கள் சிலர் கைகளை கருப்பு துணியால் கட்டி கொண்டும், சிலர் கண்ணை கருப்பு துணியால் கட்டி கொண்டும் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர்ந்து இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-nurses-protest-covering-their-hands-and-eyes-with-black-cloth-they-demand-permanent-employment-10942330

டித்வா புயலால் ரத்தான அண்ணா பல்கலை. தேர்வுகள்: புதிய அட்டவணை வெளியீடு

 

Q8J6mtwpnrVYNecnezjE

புதிய தேர்வுத் தேதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

டித்வா புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள், வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பின்னணி: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பருவத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வந்தன. அந்தச் சமயத்தில் உருவான ‘டித்வா’ புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்: மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, கடந்த நவம்பர் 24, 25, 29 மற்றும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
புதிய தேர்வுத் தேதிகள்: தற்போது மழைக்காலம் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், தள்ளிவைக்கப்பட்ட அந்தத் தேர்வுகள் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்: புதிய தேர்வுத் தேதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்த விரிவான கால அட்டவணையை மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.


source https://tamil.indianexpress.com/education-jobs/anna-university-announce-semester-exams-new-dates-instead-for-postponed-exams-10942374

செவ்வாய், 23 டிசம்பர், 2025

பல ஆண்டுகளாக குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றம்… இடிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பத்தின் வீட

பல ஆண்டுகளாக குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற்றம்… இடிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பத்தின் வீடு… வீட்டில் இருந்தவர்களை விரட்டியடித்த திமுக பிரமுகர்…. ஒசூர் அருகே நடந்தது என்ன?

Credit instagram https://www.instagram.com/q7tvnews/?e=f9ba9668-28f0-44c9-9daa-42e6f070dc9c&g=5

தேர்தல் அறக்கட்டளைகள் தாக்கல் செய்த அறிக்கை: நன்கொடை இத்தனை கோடியா?

 

2024 - 2025 ஆம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை டாடா குழுமம், ஓ.பி ஜிந்தால் குழுமம், எல்&டி, மேகா எஞ்சினியரிங், அசோக் லேலண்ட், டி.எல்.எஃப், மகேந்திரா ஆகிய ஏழு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது.

22 12 2025 

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தேர்தல் அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகள் அரசியல் கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 19 தேர்தல் அறக்கட்டளைகள் உள்ளன. இந்த தேர்தல் அறக்கட்டளைகள் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் 95 சதவீதத்தை அந்த நிதியாண்டிலேயே கட்சிகளுக்கு வழங்கிவிட வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நிதியை பகிர்ந்து அளித்தது தொடர்பான அறிக்கையை அறக்கட்டளைகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ. 3,811.37 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில், மேற்குறிப்பிட்ட ஏழு குழுமங்கள் மட்டும் ரூ. 2,107 கோடி வழங்கியுள்ளது. இது தேர்தல் அறக்கட்டளையின் மொத்த நிதியில் 55 சதவிகிதம் ஆகும். 

ப்ரூடெண்ட்  (Prudent Electoral Trust), புராகிரெஸ்ஸிவ்  (Progressive Electoral Trust), நியூ டெமோக்ராடிக்  (New Democratic Electoral Trust) ஆகிய மூன்று தேர்தல் அறக்கட்டளைகள் தாங்கள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 98 சதவிகிதத்தை கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. 

electora;

ப்ரூடெண்ட் அறக்கட்டளையானது ரூ. 2,668.46 கோடியை நன்கொடையாக பெற்ற நிலையில் இதில் ரூ. 2,181 கோடியை பா.ஜ.கவிற்கு வழங்கியுள்ளது. இது மொத்த நன்கொடையில் சுமார் 82 சதவீதம் ஆகும். நன்கொடை தரவுகளின் அடிப்படையில் எல்&டி குழுமத்துடன் தொடர்புடைய  ‘எலிவேட்டெட் அவென்யூ ரியால்டி’ (Elevated Avenue Realty) தான் அதிகபட்சமாக ரூ.500 கோடியை தேர்தல் நன்கொடையாக வழங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

2024 - 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தேர்தல் நன்கொடையாளர் என்றால் அது டாடா குழுமம் தான். இக்குழுமம் புராகிரெஸ்ஸிவ் தேர்தல் அறக்கட்டளைக்கு மொத்தம் ரூ. 915 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நிதியில், சுமார் 83 சதவீதம் அதாவது ரூ. 758 கோடி பா.ஜ.க-விற்கு வழங்கப்பட்டுள்ளது. 
அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 77 கோடிக்கும் சற்று அதிகமாக அதாவது மொத்த நிதியில் சுமார் 8.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

புராகிரெஸ்ஸிவ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, பிஜு ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ர சமிதி, லோக் ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜனதா தளம் (யூனைடெட்),  திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) உள்ளிட்ட மேலும் எட்டு அரசியல் கட்சிகள் தலா ரூ. 10 கோடி பெற்றுள்ளன.

2024 -2025 ஆம் ஆண்டின் மற்றொரு பெரிய நன்கொடையாளர் என்றால் அது மேகா எஞ்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) ஆகும். இந்த நிறுவனம் ப்ரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளைக்கு ரூ. 175 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.  

தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையளித்த குழுமங்கள் விவரம்:

மகிந்திரா குழுமம் –  ரூ. 160 கோடி

ஓ.பி. ஜிந்தால் குழுமம் –  ரூ. 157 கோடி

டி.எல்.எஃப்  –  ரூ. 100 கோடி

அசோக் லேலண்ட் – ரூ. 100 கோடி


source https://tamil.indianexpress.com/india/big-donors-to-electoral-trust-read-full-story-10930054

புத்தகங்கள் படிக்க ஸ்டாலின் அறிவுரை

 

CM MK Stalin 3

நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது. என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய தீரர்கள் கோட்டம் தி.மு.க, திராவிட அரசியல் - திராவிட அரசு இயல், முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர், ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கும், இந்தப் புத்தகங்களை வாங்கக் கூடியவர்களுக்கும் நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், “புத்தகம் என்பது அறிவாயுதம்!” பயன்படுத்தாமல் விட்டால் ஆயுதம் துருப்பிடித்துவிடும்.

அதேபோல, புத்தகங்களையும் அலங்காரத்திற்காக அலமாரியில் வைக்காமல் தினமும் எடுத்து வாசிக்கவேண்டும். அப்போதுதான், நம்முடைய மூளையும் துருப்பிடிக்காமல் இருக்கும். புதிய சிந்தனைகள் பிறக்கும், இன்றைக்கு முப்பது செகண்ட்ஸ் ரீல்ஸ் வீடியோவை கூட முழுவதும் பார்க்ககாமல் ஸ்கிப் செய்கின்ற அளவுக்கெல்லாம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த அடிக்‌ஷனால் (Addiction) எந்த விஷயத்திலும், ஆழ்ந்து கவனம் செலுத்த முடியாமல் இளைஞர்கள் தவிக்கிறார்கள். ஆனால், Good Things Take Time என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இதுபோன்ற சூழ்நிலையில், புத்தக வாசிப்புதான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற மெடிடேஷன்! அதனால், நீங்கள் எவ்வளவு பிசியான வேலையில் இருந்தாலும், ஒரு நாளைக்கு அரை மணி நேரம்… அல்லது 15 நிமிடமாவது புத்தகங்களை வாசியுங்கள்! உங்களைப் பார்த்து வீட்டில் உள்ள குழந்தைகளும் இதை ஃபாலோ செய்வார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தான் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள், ஜனவரியில் நான் தொடங்கி வைக்க இருக்கின்ற சென்னை புத்தகக் கண்காட்சி, அண்மையில், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்திய அறிவுத்திருவிழா, இது எல்லாமே ஆழ்ந்த வாசிப்பை நோக்கி இளைஞர்களை நகர்த்துகின்ற முயற்சிகள்தான்!

நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியாது. இங்கே அறிவுத்தீ அணையாமல் இருப்பதால்தான் நம்முடைய ஊரில், கலவரத்தீயை பற்ற வைக்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதை உணர்ந்து, காலத்திற்கேற்ற கருத்து ஆயுதங்களை கூர்தீட்டிக் கொடுக்கக்கூடிய திருமாவேலன் அவர்களை மீண்டும் பாராட்டி, திராவிடம் எனும் அறிவொளி இயக்கத்தால் நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது. பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது. வரலாற்றைப் படிப்போம்! தொடர்ந்து வரலாறு படைப்போம்.” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-advice-to-youths-to-read-books-and-alert-an-addiction-10939314

கெடு வைத்த ஸ்டாலின்: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ, குத்தம்பாக்கம் பஸ் நிலையம் இந்த மாதத்திற்குள் முடிக்க உத்தரவு

 

mk stalin

தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டம் 155 திட்டங்களுடன் தொடங்கப்பட்டு தற்போது 24 துறைகளைச் சேர்ந்த 288 திட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறும் 27 திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், மதுரை வண்டியூர் ஏரி மேம்பாட்டு திட்டத்தையும், குத்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையப் பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் ஆணையிட்டார். கிளாம்பாக்கத்தில் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து சாலையை கடப்பதற்கான வான்வழி நடைப்பாதையை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல், பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பணிகளை முடித்து வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

ஆறு துறைகளால் ரூ.87,941 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் 27 முக்கிய திட்டங்களும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/finish-poonamallee-vadapalani-metro-stretch-by-february-cm-mk-stalin-order-10939428

தமிழக அரசு பள்ளிகளில் ரூ6 கோடியில் ரோபோடிக் லேப்: இந்த 15 மாவட்டங்கள் செம்ம லக்கி!

 

தமிழக அரசு பள்ளிகளில் ரூ6 கோடியில் ரோபோடிக் லேப்: இந்த 15 மாவட்டங்கள் செம்ம லக்கி! 23 12 2025 

Robotic AI Generated

இந்த ஆய்வகங்களுக்கான சிறப்புப் பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வடிவமைத்துள்ளது. Photograph: (Gemini AI Generated Image)

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை நவீனத் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக மாற்றும் நோக்கில், 15 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தலா ஒரு ரோபோட்டிக் ஆய்வகம் வீதம், மொத்தம் 6.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டிற்கான முயற்சி

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலை வளர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் முதற்கட்டமாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு

இந்த ஆய்வகங்களுக்கான சிறப்புப் பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) வடிவமைத்துள்ளது. இதற்காக 11 வகையான அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 10 பாடத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீதப் பாடங்கள் செய்முறைப் பயிற்சி வழியாகவே கற்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வகத்தின் சிறப்பம்சங்கள்

இந்த ரோபோட்டிக் ஆய்வகங்களில் மாணவர்கள் கீழ்க்கண்ட நவீனத் தொழில்நுட்பங்களைக் கற்க உள்ளனர்:

குரல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்கள்.

வண்ணங்களைப் பிரித்தறியும் மற்றும் ஸ்மார்ட் குப்பைத் தொட்டி ரோபோக்கள்.

டிரோன்களை இயக்குவதற்கான பயிற்சிகள்.

விர்ச்சுவல் லேப்ஸ் கொண்ட ஸ்டெம் பணிநிலையங்கள்.

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எளிய மின்சுற்றுகளைக் கையாளும் முறைகள்.

வருங்கால கண்டுபிடிப்பாளர்கள்

இது குறித்துப் பள்ளிக் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆய்வகங்கள் வெறும் தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் மட்டுமல்ல; இவை மாணவர்களின் சிந்திக்கும் முறையைச் சீரமைக்கும் ஒரு கல்விப் புரட்சியாகும். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதோடு, புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவெடுப்பார்கள்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/education-jobs/robotic-labs-rs-6-crore-installed-in-some-tn-govt-schools-in-15-districts-10939320

அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் நீக்கம்: தமிழகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு

 தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்வேறு மண்டலப் போக்குவரத்துக் கழகங்களின் (TNSTC) கீழ் இயங்கும் பேருந்துகளில், வழக்கமாக இடம்பெறும் 'தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்' என்ற வாசகத்தில் இருந்து 'தமிழ்நாடு' என்ற சொல் நீக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் அரசுப் பேருந்துகளின் முகப்பு கண்ணாடி, பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் 'தமிழ்நாடு' என்ற பெயர் விடுபட்டுள்ளது. அதற்குப் பதிலாக 'அரசுப் போக்குவரத்துக் கழகம்' என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பணிமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாகத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றத்திற்குத் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் இந்தப் பெய மாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த சில நாட்களுக்கு முன் ஓசூர் மற்றும் சேலத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

போராட்டக்காரர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயர் விடுபட்ட பேருந்துகளை மறித்து, தாங்களாகவே அந்தப் பெயர் கொண்ட ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். "கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்படும் போது, தமிழகத்தில் மட்டும் பல ஆண்டுகளாக இருந்த நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்?" எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தமிழக அரசு திட்டமிட்டே இந்தப் பெயரை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்துப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் எஸ்.ஜே.சிரு கூறுகையில், "தமிழக அரசு திட்டமிட்டே 'தமிழ்நாடு' என்ற பெயரைத் தவிர்க்கிறது என்று கூறுவது தவறானது. இந்த நடைமுறை ஏற்கனவே சில காலமாகப் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும், இது தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் துறை ரீதியாகப் பரிசீலனை செய்வோம்." போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இது குறித்துத் தற்போது வரை அதிகாரப்பூர்வமான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. 



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-removed-from-govt-buses-transport-department-10939390

திங்கள், 22 டிசம்பர், 2025

Second Killing of Mahatma Gandhi.

This is the Second Killing of Mahatma Gandhi. - Former Finance Minister, Thiru P Chidambaram MP #MahatmaGandhi #MGNREGA

credit fb page Indian National Congress - Tamil Nadu

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் அது எப்படி? இந்தியில் டைப் செய்ய முடியும்.

22 12 2025 

வரைவு வாக்காளர் பட்டியலில்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என்னுடைய பூத் எண் ; 76 ல் இரண்டு வாக்காளர்கள் வரிசை எண் ;551,552 உள்ள பெயர் மட்டும் இந்தியில் சேர்க்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியாகவுள்ளது.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் அது எப்படி? இந்தியில் டைப் செய்ய முடியும்.
அப்போ டைப் அடிக்கிற வேலை எங்க நடக்குது ?இங்க நடக்குத இல்ல வெளிமாநிலத்தில நடக்குதா ? ....
என்றுபல சந்தேகங்கள் எழும்புகிறது.

























source 

https://www.facebook.com/photo/?fbid=1388677205960805&set=a.524145122414022

திராவிட மாடல் ஆட்சியில், 16% GSDP வளர்ச்சி..!

 இன்றைய முரசொலியில் கருத்துச் சித்திரம் (கார்ட்டூன்)..!

ஒன்றிய பாஜக அரசின் நிதி தடையை தாண்டி, திராவிடப் பேரரசர்.! மாண்புமிகு முதல்வர் அவர்களின் தித்திக்கும் திராவிட மாடல் ஆட்சியில், 16% GSDP வளர்ச்சி..!

18 12 2025



இது யார் ? எந்த கட்சி தெரியுமா மக்களே ?

 நீட் தேர்வு ஆதரவு!

CAA ஆதரவு!
முத்தலாக் ஆதரவு!
வேளாண் சட்டம் ஆதரவு!
உதய் மின் திட்டம் ஆதரவு!
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவு!
கனிமவளக் கொள்கை ஆதரவு!
SIR ஆதரவு!
100 நாள் வேலை திட்டம் பெயர் நீக்கம் ஆதரவு!
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கும்!

இது யார் ? எந்த கட்சி தெரியுமா மக்களே ?

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.?

அதி நவீன ஊழல் ..!!

 இதுவரை உலகம் பார்த்திராத அதி நவீன ஊழல் ..!!

இல்லாத தொழிற்கூடத்தில் பயிற்சி....!! அற்புதம்..!!
பல லட்சம் பேருக்கு சான்றிதழ்..!! பிரமாதம்..!!
பல ஆயிரம் பேருக்கு ஒரே நபரின் போட்டோ..!! அடடே..!!
ஒரே வங்கிக்கணக்கு
பல லட்சம் பேருக்கு இல்லாத வங்கி கணக்கில் பணம்....!! அபாரம் ..!!
மோடியின் திட்டம் ரூ.14,450 கோடி மோசடி.
அம்பலப்படுத்தியது CAG(மத்திய தணிக்கைக்குழு) ஆய்வறிக்கை...!!
பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா(PMKVY) என்ற பெயரில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்க தொடங்கிய திட்டம் இது..!!
இதில் இது வரை 1.1 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறி பயிற்சி முடிவில் ரூ.500 மற்றும் ரூ.8,000 வரை உதவித்தொகை கொடுத்ததற்கான கணக்கை ஆய்வு செய்ததில் பெரும் அதிர்ச்சியை அடைந்தது CAG ..!!
மொத்தம் பயிற்சியாளர்கள் சேர்த்தது 95,90,801 நபர்கள் ..!!
இதில்
90,66,264 பேருக்கு வங்கி கணக்கு பொருந்தவில்லை அல்லது கணக்கு இல்லை..!!
மீதமுள்ள 5,24,537 பேரில்
12,122 பேருக்கு வங்கி கணக்கு உள்ளது...!!
52,381 பேருக்கு ஒரே வங்கிகணக்கு.
மேலும் வேடிக்கை என்னவென்றால்
பலரின் வங்கிக்கணக்கு
111111111(Account number)
என்றும்
123456(Account number)
என்றும் உள்ளது.
Email ID (இமெயில் முகவரி) 36.51% போலியானது..!!
அதிலும் CAG அனுப்பிய
171-இமெயிலுக்கு 131- பேர் ஒரே
ID-( முகவரி)யில் இருந்து பதில் அனுப்பியுள்ளனர்..!!
மேலும், மேலும் CAG மட்டுமல்ல உலகமே அதிர்ந்து வருகிறது..!!
உலகில் இது போன்ற ஒரே எண்ணில் வங்கிக்கணக்கு கிடையாது...!!
பாஜக ஆளும்
உத்தர பிரதேசம்
மகராஷ்டிரா
பீகார்
ராஜஸ்தான்
மாநிலங்களில் இந்த உலகமகா மோசடி மக்கள் பணம் ஏழை, எளிய மாணவர்களுக்கு கொடுத்ததாக ரூ.14,450 கோடி சூறையாடப்பட்டுள்ளது..!!
இதுதான் மோடியின்
மோடியின் முகமூடியை மக்கள் கழட்டி வீசுவார்களா..?




அட நம்புங்கப்பா... தேர்தல் ஆணையம் நேர்மையானது என்று....







































source fb page INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி


 அட நம்புங்கப்பா... தேர்தல் ஆணையம் நேர்மையானது என்று....


இந்த இந்தி பெயர் எப்படி இந்தியில் டைப் செய்யப்பட்டது? தமிழ்நாட்டில் இந்தியில் எப்படி டைப் செய்யப்பட்டிருக்கும்?

அப்படியே இருந்தாலும் இவர்களை எங்கே கண்டு பிடித்து படிவம் கொடுத்து வாங்கியது தேர்தல் ஆணையம்? 

எதிர்க் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய நிதி பலம்: 12 மடங்கு அதிகம்; வருவாய் சுமார் 50% உயர்வு

 

2024 பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் முறையை அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. இருப்பினும், இது பா.ஜ.கவின் நிதி சேகரிப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 2024-25 நிதியாண்டில் பா.ஜ.க பெற்ற நன்கொடைகள் கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளன.

21 12 2025 

2024-25 நிதியாண்டில், பா.ஜ.க பெற்ற மொத்த நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இது 2023-24 நிதியாண்டில் பெறப்பட்ட ரூ.3,967 கோடியுடன் ஒப்பிடுகையில் 53% அதிகம் ஆகும். காங்கிரஸ் கட்சி அதே ஆண்டில் ரூ.522.13 கோடி மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸை விட பா.ஜ.க சுமார் 12 மடங்கு அதிக நிதியைக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

12 முக்கிய எதிர்க்கட்சிகளின் மொத்த நன்கொடை ரூ.1,343 கோடி மட்டுமே. இது பா.ஜ.க பெற்ற தொகையில் வெறும் 4-ல் ஒரு பங்குதான். பா.ஜ.க தாக்கல் செய்த 162 பக்க அறிக்கையின்படி, நிதியின் பெரும்பகுதி பல்வேறு வழிகளில் கிடைத்துள்ளது. சுமார் ரூ.3,744 கோடி (மொத்த நிதியில் 61%) தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் வந்துள்ளது. மீதமுள்ள ரூ.2,344 கோடி நேரடியாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைத்துள்ளது.

bjp donation

முக்கிய நன்கொடையாளர்கள் (2024-25) - பா.ஜ.கவிற்கு அதிக நிதி வழங்கிய முதல் 30 நிறுவனங்கள்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா: ரூ.100 கோடி

ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ.95 கோடி

வேதாந்தா லிமிடெட்: ரூ.67 கோடி

மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்: ரூ.65 கோடி

ஐ.டி.சி (ITC) குழுமம்: சுமார் ரூ.72.5 கோடி (இரு நிறுவனங்கள் மூலம்)

donation

2017-18ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை, அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்க வழிவகை செய்தது. இதில் சுமார் ரூ.16,000 கோடிக்கும் அதிகமான நிதி கட்சிகளுக்குச் சென்றது, இதில் பெரும்பகுதி பாஜகவிற்கே கிடைத்தது. தற்போது பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் (DD) மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் நிறுவனங்கள் நிதி வழங்கலாம். ஆனால், ரூ.20,000-க்கு மேல் நிதி வழங்கும் அனைவரது விவரங்களையும் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதியாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019-20 முதல் தற்போது வரை) பா.ஜ.க பெற்ற மிக உயர்ந்தபட்ச நிதி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/bjps-2024-25-donations-jumped-50-to-nearly-12-times-more-than-the-congress-party-10930008