வியாழன், 11 டிசம்பர், 2014

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம் வெளி வந்து கொண்டிருக்கிறது!!!!



விஸ்வரூபம் படமெடுத்து பொய்யான விஷக்கருத்துக்களை பதிவு செய்த கூத்தாடி கமல்ஹாசன் அவர்கள் அமெர்க்க உளவுதுறையான CIA வின் உண்மை முகத்தை தோலுரித்து திரைபடம் எடுக்க தயாரா???????
விசாரணை என்ற பெயரில்
பொதுமக்களை கொடுமைப்படுத்தியுள்ளது சிஐஏ:
செனட் புலனாய்வுக் குழு
பதிவு செய்த நாள் - டிசம்பர் 10, 2014, 8:08:55 AM
மாற்றம் செய்த நாள் - டிசம்பர் 10, 2014, 9:58:27 AM
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, விசாரணை என்ற
பெயரில்
பொதுமக்களை கொடுமைப்படுத்தியுள்ளதாக
அந்நாட்டு செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது.
இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் அல்கய்தா பயங்கரவாத
அமைப்பினருக்கு எதிராக சிஐஏ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த
அறிக்கையை செனட் புலனாய்வு குழு வெளியிட்டது. அதில்,
விசாரணைக்காக கொடுமையான வழிமுறைகள்
கையாளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விசாரிக்கப்பட்டவர்களிடம்
பெறப்பட்ட தகவல்கள்களுக்கும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில்
வெற்றி என்று கூறப்படுவதற்கும் எந்தவிதமான
தொடர்பும் இல்லை என்று அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை,
நீதித்துறை உள்ளிட்டவற்றிற்கு சிஐஏ சரியான
தகவல்களை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள
செனட் புலானாய்வுக் குழு, சிஐஏவின் நடவடிக்கைகள் நாட்டின்
மதிப்பை கறைப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த
அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா,
சிஐஏவின் நடவடிக்கைகள் அமெரிக்காவின்
நிலைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத்
தெரிவித்துள்ளார். செனட் புலனாய்வுக் குழுவின்
அறிக்கைக்கு பதில் அளித்துள்ள சிஐஏ, இந்த நடவடிக்கைகள் மூலம்
அல்கய்தா செயல்பாடுகளை தெரிந்துகொள்ள
முடிந்ததாகவும் அவை பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறியுள்ளது.