புதன், 10 டிசம்பர், 2014

மதத்திற்கு மாறினார்களா


உபியில் 200 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினார்களா ?
இந்தியாவில் நான்கு முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS 200 முஸ்லிம்களை இந்து மதத்திற்கு மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிலும் விகடன் வெளியிட்டுள்ள செய்தியில்....
ஆக்ரா நகரின் பிரதான பகுதியொன்றில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர், ஆர் எஸ் எஸ் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் பங்கேற்று தங்களை இந்து மதத்தில் இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக இந்து மதத்தில் இணைந்த 76 வயதான சுபையா பேஹம் கூறுகையில், ஒரு நாளைக்கு 5 முறை குரான் ஓதி தொழுகையில் ஈடுபடுவேன். ஆனால் தற்போது கணேச துதிப் பாடல்களைப் பாடி வணங்குகிறேன். என்னை பொறுத்தவரை இரண்டு மதத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்கிறார்.
-----------------------------------------
மேற்கண்டவாறு விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது உண்மையான செய்தி அல்ல....
இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசூர வேகத்தில் இருப்பதால் அதற்கு மாற்றமாக மதவெறியுடன் எதையாவது செய்ய வேண்டும் என்று RSS ம் ஊடகமும் இணைந்து நடத்தும் நாடகமே இது....
// 76 வயதான சுபையா பேஹம் கூறுகையில் ஒரு நாளைக்கு 5 முறை குரான் ஓதி தொழுகையில் ஈடுபடுவேன். ஆனால் தற்போது கணேச துதிப் பாடல்களைப் பாடி வணங்குகிறேன். என்னை பொறுத்தவரை இரண்டு மதத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்கிறார் //
இறைவனுக்கு இணையாக எதையும் கற்பிக்காத உலகிலேயே ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே....
ஏக இறைவன் ஒருவனே என்று இதயத்தில் சுமந்து வளர்ந்து வரும் ஒரு முஸ்லிம் போலியாக கற்பிக்கப்பட்ட கல்லை கடவுளாக நினைப்பானா ?
தெளிவான கடவுள் கொள்கை கொண்ட இஸ்லாத்தை விட்டு பல கடவுள் கொள்கை கொண்ட இந்து மதத்திற்கு யாரேனும் செல்வார்களா என்ற சாதாரண அறிவு கூட ஆர்.எஸ்.எஸ் ஸுக்கும் இல்லாமல் போய்விட்டது,
ஊடகங்களுக்கும் இல்லாமல் போய்விட்டது.
ஜாதியே இல்லாத இஸ்லாத்தை விட்டு ஜாதியை கொண்டு மக்களை பிரித்தாளும் இந்து மதத்திற்கு யாரேனும் செல்வார்களா ?
இந்தியாவில் தினந்தோறும் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறும் மக்களை கூட்டம் கூட்டமாக காணலாம், இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு சாரை சாரையாக வருகிறார்கள்.
அதைப்பற்றி முகநூல் முஸ்லிம் மீடியாவும் தினந்தோறும் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு வருகிறது.
இஸ்லாமியர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளதாக அவதூறு பரப்புவதற்கு பதிலாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு உள்ள காரணத்தை ஆராய்ந்து RSS இயக்கத்தினரும் இஸ்லாத்திற்கு வருகை தந்தால் மறுமையில் வெற்றி பெறலாம்...