புதன், 23 நவம்பர், 2016

பிக் பஜாருக்கு ’வங்கி’ அனுமதி தரப்பட்டது எப்போது? என்னதான் நடக்கிறது இங்கே?: சீதாராம் யெச்சூரி

பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை மறு நாள் முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி,
“இங்கே என்ன நடக்கிறது? இந்த தனியார் நிறுவனத்துக்கு வங்கிக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்திருக்கிறதா? ஏன் இந்த தனியார் நிறுவனம் மட்டும்?” என கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், இங்கே பணத்தை விநியோகிப்பது மட்டும் பிரச்னை இல்லை.  போதுமான அளவு பணத்தை வங்கிகளுக்கு மோடி அரசு அளிக்கவில்லை என்பதே பிரச்னை என்றும்
தனியார் நிறுவனங்களுக்கு பணத்தை அளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசு வங்கிகளுக்கு குறிப்பாக கிராமப்புற வங்கிகளுக்கு போதிய பணத்தை அளிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts:

  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளா… Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வ… Read More
  • பாம்பு என்றால் விஷம் – யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More