புதன், 30 நவம்பர், 2016

கைது செய்த உடனேயே தீவிரவாதிகள் தான் என்று எப்படி ஊடகங்களால் அத்தனை உறுதியாக சொல்ல முடியும் ??

கைது செய்த உடனேயே தீவிரவாதிகள் தான் என்று எப்படி ஊடகங்களால் அத்தனை உறுதியாக சொல்ல முடியும் ?? விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்கள் எல்லாமே தீவிரவாதிகள் அதுவும் இஸ்லாமியர்கள் என்றால் 100% அக்மார்க் தீவிரவாதிகள் என்று மட்டுமே ஏன் பதிவு செய்கின்றனர். இதையே பொது புத்தியில் ஏற்றிக் கொண்டு, அக்கம் பக்கம் இருக்கும் தாடி வைத்து குல்லா போடுபவன் எவனைப் பார்த்தாலும் சந்தேகத்தோடுப் பார்க்க வைப்பதே நீங்கள் செய்யும் சாதனை. எப்படியும் ஓரிரு தினங்களில் அப்படி எந்த குற்றத்திலும் தொடர்புடையவர்கள் இல்லை என்று ஏதோ ஓர் மூலையில் கிசு கிசு போல் எழுத போகிறீர்கள். அவர்கள் படத்தைப் பேப்பர், டிவி என்று பார்த்த அனைவரும் இனி அவனை சந்தேகத்துடனே பார்ப்பார்கள். அவன் வீட்டில் பெண் எடுக்க, பெண் கொடுக்க, வேலைக்குப் போக இன்னும் எவ்வளவோ இருக்கு.. இதில் எல்லாம் போற போக்குல மண் அள்ளிப் போட அசாத்திய அறிவின்மை வேணும். அது இப்போ நிறைய பேருக்கு இருக்கு. இஸ்லாமிய இயக்கங்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் நன்று.
பிரியாணி செய்றவன் எல்லாம் தீவிரவாதின்னா அதைத் திருடி தின்ன நீங்க யாருடா...
FB Subha D