செவ்வாய், 29 நவம்பர், 2016

உச்சவரம்பிற்கு அதிகமாக பணம் எடுக்க அனுமதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாடிக்கையாளரின் தேவையைப் பரிசீலித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு அதிகமாகவும் பணத்தை அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 500 மற்று 2,000 ரூபாய் நோட்டுகளாக வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிகளில் பணத்தை செலுத்த மக்கள் தயங்குவதாகக் கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.