செவ்வாய், 29 நவம்பர், 2016

வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு?.. ரிசர்வ் வங்கி தகவல்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 27ம் தேதிவரை, ரூ.8,44,982 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை ரூ.33,948 கோடி மதிப்புள்ள செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2,16,617 கோடியை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.