சனி, 14 செப்டம்பர், 2024

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 14 9 24

 Tamilnadu cyclone warning

Tamilnadu weather Forecast Today

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கதேச கடற்கரை பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது .

இதனை தொடர்ந்து சென்னைகடலூர்நாகப்பட்டினம்எண்ணூர்காட்டுப்பள்ளிபுதுச்சேரிகாரைக்கால்பாம்பன்தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாகதமிழகத்தில் நாளைமுதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடாதென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும்16, 17-ம் தேதிகளில் அதிகபட்சமாக 50 கி.மீ. வேகத்திலும் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம், என்று தெரிவித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-forecast-chennai-rains-bay-of-bengal-low-pressure-area-cyclone-warning-7067137