சனி, 14 செப்டம்பர், 2024

ஒன்றிய அமைச்சர்கள் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் - கனிமொழி காட்டம்

 

Kanimozhi DMK MP on CM MK Stalin and Ministers attend TN Governor RN Ravi Tea Party Tamil News

தி.மு.க துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற ஜி.எஸ்.டி குறைதீர்க் கூட்டத்தில், சிறு,குறு தொழில் முனைவோர் , பஞ்சாலை  உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துரையாடினார். இதில் அனைத்து துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளையும் கருத்துகளையும்தெரிவித்தனர். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன்,  கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ  வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

அப்போது, பேசிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், “பன்னுக்கு ஜி.எஸ்.டி இல்லை, ஆனால், அதுக்குள்ள வைக்குற கிரீம்க்கு 18% ஜி.எஸ்.டி வரி. உங்க எம்.எல்.ஏ எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் வந்து சாப்பிட்டுவிட்டு சண்டை போடுகிறார்கள், ஸ்வீட்டுக்கு 5% ஜி.எஸ்.டி, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி, ஒரே குடும்பத்துல இத்தனை வகையா ஜி.எஸ்.டி போட்டா சண்டை வருது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, சீனி, ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள்” என்று அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கொங்கு தமிழில் நகைச்சுவையாகப் பேசி கோரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி வரி மற்றும் மத்திய பா.ஜ.க அரசு மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். 

இதைத்தொடர்ந்து, அந்த ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி,  வைரலானது.

வேறுபட்ட ஜி.எஸ்.டி வரி குறித்தும் இந்த வரியை ஒரே மாதிரியாக சீராக்குங்கள் என்று கொங்கு தமிழில் நகைச்சுவையாகப் பேசிய பிரபல ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதனால், ஹோட்டல் மன்னிப்பு கேட்பதாக வெளியான வீடியோ வைரலானது.

ஜி.எஸ்.டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நகைச்சுவையாகப் பேசிய ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி மனிப்பு கேட்க வைக்கப்பட்டதாக, கரூர் எம்.பி ஜோதிமணி முதல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரை பலரும் நிர்மலா சீதாராமனுக்கும் பா.ஜ.க-வுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

தி.மு.க எம்.பி கணபதி ராஜ்குமார், அன்னபூர்னா சீனிவாசன் வருத்தம் தெரிவிக்கும் வீடியோ அவரது அனுமதி பெற்று வெளியிடப்பட்டதா எனவும் அது தனி மனித சட்ட விதி மீறல் எனவும் அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுவதால் அன்னபூர்ணா உரிமையாளரை அவமானப்படுத்தியது கோவை மக்களை அவமானப் படுத்தியது போல் உள்ளது எனவும் கூறி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்தார்.

இந்த பின்னணியில், தி.மு.க துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி, ஒரு திருக்குறளைக் குறிப்பிட்டு, “ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும்.” பதிவிட்டுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-kanimozhi-attack-nirmala-seetharaman-hotel-owner-apology-7067048