ஞாயிறு, 1 மார்ச், 2026

காலையில்,மாலையில் ஓதும் துஆ

காலையில்,மாலையில் ஓதும் துஆ தினம் ஒரு துஆ ரமலான் 2026 - தொடர் - 11 ஏ. ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc

110:1-3 வசனத்தின் விளக்கம்

110:1-3 வசனத்தின் விளக்கம் M.A.அப்துர்ரஹ்மான் MISc (பேச்சாளர்,TNTJ) அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. ரமலான் 2026 - தொடர் - 11

இயேசுவை முஸ்லிம்கள் கடவுளாக ஏற்காதது ஏன்?

இயேசுவை முஸ்லிம்கள் கடவுளாக ஏற்காதது ஏன்? M.அப்துல் சமத் மாநிலச் செயலாளர்,TNTJ ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 11 - 2026

கானான் தேசம் முதல் எகிப்து வரை!

கானான் தேசம் முதல் எகிப்து வரை! இஸ்ரவேலர்கள் - ஓர் வரலாற்று பார்வை ஏ. சபீர் அலி MISC மாநிலச் செயலாளர்,TNTJ

இறைவனின் அதிசய படைப்புக்களை பார்க்கும்போது..

இறைவனின் அதிசய படைப்புக்களை பார்க்கும்போது.. செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச்செயலாளர்,TNTJ தினம் ஒரு துஆ ரமலான் 2026 - தொடர் - 10

17:1 வசனத்தின் விளக்கம்

17:1 வசனத்தின் விளக்கம் M.ஹஸ்ஸான் M.I.Sc அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. ரமலான் 2026 - தொடர் - 10

தமிழ் மொழிக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறதா?

தமிழ் மொழிக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் A.முஜிபுர் ரஹ்மான் (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ) பஹ்ரைன் மண்டலம் - 05.01.2025

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க ஒதுக்கிய தொகுதிகள்

 New Project (3)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆளும் கட்சியான தி.மு.க தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் மற்றும் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தி.மு.க குழுவினர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.  

இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இன்று மனிதநேய மக்கள் கட்சியுடன் (ம.ம.க) தி.மு.க குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர். அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) கட்சியுடனான பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்தது. அக்கட்சிக்கு தி.மு.க கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஐ.யு.எம்.எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கையெழுத்திட்டுள்ளார். 

கடந்த தேர்தலில் ம.ம.கவுக்கு 2 தொகுதி, ஐ.யு.எம்.எல் -க்கு 3 தொகுதி:

கடந்த 2021 தேர்தலிலும் ம.ம.க-வுக்கு 2 தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருந்தன. இம்முறை ம.ம.க வேட்பாளர்கள் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக ஜவாஹிருல்லா உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்  இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகள் எவை என்பது குறித்து தி.மு.க பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-election-2026-dmk-intensifies-seat-sharing-talks-with-alliance-partners-11165459

இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம்: கையும் களவுமாகப் பிடிபட்ட மின்வாரிய இளநிலைப் பொறியாளர்

 


New Project (4)

லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் ராஜு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். துறையூர் அருகே உள்ள கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார். இதற்காக தாட்கோ மூலம் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால், கடந்த 27-ம் தேதி செங்காட்டுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்ற முத்து, அங்கு இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் ராஜு என்பவரைச் சந்தித்து இது குறித்துக் கேட்டுள்ளார்.

1 3 2026

அப்போது, மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டுமானால் ரூ.3,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என ராஜு தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து, இது குறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். முத்துவின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாயை முத்துவிடம் கொடுத்து அனுப்பினர். துறையூர் மின் அலுவலகத்தில் வைத்து அந்தப் பணத்தை இளநிலைப் பொறியாளர் ராஜு பெற்றபோது, அங்கிருந்த டி.எஸ்.பி மணிகண்டன், ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/tneb-junior-engineer-arrested-for-taking-rs-3000-bribe-from-farmer-11165529

அயதுல்லா காமேனி மரணம்: ஈரானின் அடுத்த தலைவர் யார்?

 

அயதுல்லா காமேனி மரணம்: ஈரானின் அடுத்த தலைவர் யார்?

khamenei X

1989 முதல் ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான அயதுல்லா கமேனி தற்போது கொல்லப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவை உறுதிப்படுத்தின. அவர் சுமார் 37 ஆண்டுகள் ஈரானை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார். ஈரான் தற்போது 40 நாட்கள் அதிகாரப்பூர்வ துக்க காலத்தையும், ஏழு நாட்கள் தேசிய விடுமுறையையும் அறிவித்துள்ளது.

1 3 2025

வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்," என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார். "எங்களுடைய உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்ப முடியவில்லை. இஸ்ரேலுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டதில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி - ஈரானை அடுத்து ஆளப்போவது யார்? கமேனி இதுபோன்ற ஒரு தருணத்திற்காக ஏற்கனவே தயாராக இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் போர் பதற்றத்தின் போது, தனக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று பெயர்களை அவர் பரிந்துரைத்திருந்தார்.

'நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்' - டிரம்ப்

ஈரானை வழிநடத்த "சில நல்ல வேட்பாளர்கள்" இருப்பதாக டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார். சிபிஎஸ் (CBS) செய்தியாளர் ஒருவர் ஈரானின் பொறுப்பில் இப்போது யார் இருக்கிறார் என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது" என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ஈரானின் அடுத்த தலைவராக நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, "ஆம், சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்" என்று கூறினார். ஆனால் அவர்கள் யார் என்பதை அவர் விவரிக்கவில்லை.

நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, ஈரானின் உச்ச தலைவர் ஒரு மூத்த ஷியா மதகுருவாகவும் அறிஞராகவும் இருக்க வேண்டும். அவர் 'நிபுணர்கள் சபை' எனப்படும் மதகுருமார்களின் குழுவால் நியமிக்கப்பட வேண்டும்.

ஆறு மூத்த ஈரான் அதிகாரிகளின் நேர்காணல்களின் அடிப்படையில், கமேனி பரிந்துரைத்த மூன்று பெயர்கள்:

கோலம்-ஹுசைன் மொஹ்சேனி-எஜேய் (நீதித்துறைத் தலைவர்)

அலி அஸ்கர் ஹெஜாசி (கமேனியின் தலைமை அதிகாரி)

ஹசன் கொமேனி (சீர்திருத்தவாத அரசியல் பிரிவைச் சேர்ந்த மதகுரு மற்றும் அயதுல்லா கொமேனியின் பேரன்)

கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா (56) தலைவராவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. ஏனெனில் இந்தப் பதவி வாரிசு அடிப்படையில் தொடரக்கூடாது என்று கமேனியே தனது ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார். மேலும், ஷியா முஸ்லிம் மதகுருமார்களிடையே தந்தைக்கும் பின் மகன் பதவிக்கு வருவதை விரும்புவதில்லை. மொஜ்தபா ஒரு உயர்மட்ட மதகுரு இல்லை என்பதும், ஆட்சியில் அவருக்கு அதிகாரப்பூர்வ பதவி இல்லை என்பதும் கூடுதல் தடைகளாகும்.

சி.என்.என் செய்தியின்படி, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய 88 மூத்த மதகுருக்கள் கொண்ட 'நிபுணர்கள் சபை' பரிசீலிக்க வாய்ப்புள்ள முக்கிய பெயர்கள்:

அலிரேசா அராபி (67): கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராக உள்ளார். மத ரீதியாக வலுவானவர் என்றாலும், பெரிய அரசியல் சக்தியாகக் கருதப்படுவதில்லை.

முகமது மெஹ்தி மிர்பாகேரி (60-களின் தொடக்கம்): தீவிரவாதப் போக்குடைய மதகுரு. மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். நம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது என்ற கருத்துடையவர்.

ஹசன் கொமேனி (50-களின் தொடக்கம்): இஸ்லாமியக் குடியரசைத் தோற்றுவித்த அயதுல்லா ருஹொல்லா கொமேனியின் பேரன். இவர் மற்றவர்களை விடக் குறைவான தீவிரப்போக்கு கொண்டவர் எனக் கருதப்படுகிறார். கமேனி பரிந்துரைத்த பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.

ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60-களின் இறுதியில்): நிபுணர்கள் சபையின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு நெருக்கமானவர் என்றாலும், பாதுகாப்புப் படைகளுடன் (ஐ.ஆர்.ஜி.சி) இவருக்குப் பெரிய தொடர்புகள் இல்லை.


source https://tamil.indianexpress.com/international/iran-supreme-leader-ayatollah-khamenei-dead-succession-candidates-list-peta-analysis-11165923

சபதம் எடுத்த ஈரான்: மிகப்பெரிய சக்தியால் தாக்குவோம்... ஓபனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

 

சபதம் எடுத்த ஈரான்: மிகப்பெரிய சக்தியால் தாக்குவோம்... ஓபனாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஈரானில் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சியில் அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சி நடப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2025- ஆம் ஆண்டு  ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி தளங்கள் தரைமட்டமாகின.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, ஈரான் அணு ஆயுத திட்​டத்தை கைவிட மறுப்பதாக கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இப்போது அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை குறிவைத்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதாக ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கைக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத சக்தியை கொண்டு அவர்களை தாக்குவேன் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக. அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/international/they-better-not-do-that-donald-trump-warn-iran-read-full-story-11165899

துபாய், அபுதாபி மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல் - ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

 

துபாய், அபுதாபி மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல் - ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றம் தற்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது. ஈரானின் அணு ஆயுத பலத்தை முறியடிக்கவும், அந்த நாட்டின் முக்கிய தலைமைத்துவத்தை நிலைகுலையச் செய்யவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாலும், ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பாகான், குவாம், கர்மன்ஷா மற்றும் கராஜ் ஆகிய ஐந்து முக்கிய நகரங்களை மையமாக வைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவத் தளங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்குகளாக இருந்தன. பென்டகன் தரப்பில் கிடைத்த தகவலின்படி, ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) உயர் அதிகாரிகளைக் குறிவைத்தே முதல் கட்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோரின் அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பிலிருந்து வெளியான தகவல்களின்படி, ஆயதுல்லா அலி காமேனி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் துக்க காலமும், 7 நாட்கள் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரானிய வெளியுறவுத்துறை தரப்பில் ஒருபுறம் முரண்பட்ட தகவல்கள் வந்தாலும், அங்கு நிலவும் இணையச் சேவை முடக்கம் காரணமாகத் துல்லியமான தகவல்களைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
 
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகளை நோக்கி ஏவி வருகிறது. இதன் விளைவாக அபுதாபி, துபாய் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படை தளங்களுக்கு அருகே வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. கத்தார், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தி, தங்கள் வான் எல்லைக்குள் வரும் அச்சுறுத்தல்களை முறியடித்து வருகின்றன. துபாயில் ஒரு உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஈரான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்படி, நாடு முழுவதும் இதுவரை 201 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாகத் தெற்கு ஈரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 85 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஈரானில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதுடன், இணையச் சேவை முழுமையாக முடக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர். கடந்த 12 நாட்களாக மறைமுகமாக நடந்து வந்த நிழல் யுத்தம், தற்போது ரமலான் மாதத்தில் நேரடிப் போராக மாறியுள்ளது. ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியின் நோக்கமாகத் தெரிகிறது. இந்தத் தீவிரமான போர் நடவடிக்கையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும், உலக அமைதிக்கு மிகப்பெரிய சவாலும் ஏற்பட்டுள்ளது.

1 3 2026


source https://tamil.indianexpress.com/india/us-israel-joint-attack-on-iran-live-updates-11165296